Posted in Articles

பிக் பாஸ்

Image result for Big Boss

நாடெங்கும் பிக் பாஸ் தான் பேச்சு !

வீட்டுக்குள் உலவ விடப்பட்டிருக்கும் சில கதாபாத்திரங்கள். அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் சில கேமராக்கள். அவரவருக்கு விதிக்கப்பட்ட வேலைகளை அவரவர் செய்ய வேண்டும். அவர்களுடைய நடவடிக்கைக்குத் தக்கபடி விளைவுகள் இருக்கும் !

சிலர் ஒவ்வொரு வாரமும் நிராகரிக்கப்படுவர். சிலர் பாராட்டப்படுவர். சிலர் தப்பிப் பிழைப்பர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிகளைப் பற்றி உலவுகின்ற செய்திகள், மீம்கள், நகைச்சுவைகள் போன்றவை அது எந்த அளவுக்கு பிரபலமாகியிருக்கிறது என்பதை விளக்குகிறது !

இன்னொரு பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை !

இந்த உலகம் எனும் வீட்டில் உலவ விடப்பட்டிருக்கிறோம் நாம் அனைவரும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை இறைவனால் தரப்பட்டிருக்கிறது. இந்த வீட்டில் நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்பது கண்காணிக்கப்படுகிறது.

நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கிறது. தினமும் சிலர் வாழ்க்கையை முடித்துக் கொண்டு வெளியேற்றப்படுகின்றனர். சிலர் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டே இருக்கின்றனர். எங்கும் எதையும் இறைவனிடமிருந்து மறைக்க முடியாது. ஆனால் மறைத்து விட்டதாய் நினைத்து புளகாங்கிதம் அடைந்து கொள்கிறோம்.

மறைக்காவிட்டால் என்ன ? பிக் பாஸ் என்ன செய்து விட முடியும் ? எனும் தெனாவெட்டில் சில வேளைகளில் நமக்குப் பிடித்தமானபடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பிக் பாஸ் வந்து நிற்கும் போது அவர் நமது செயல்களை வெளிப்படுத்துவார். ‘நான் அப்படியெல்லாம் செய்யலையே’ என தப்ப முடியாது. காரணம் இறைவனின் கண்கள் பூமியை எப்போதும் நோக்கிக் கொண்டிருக்கின்றன. அவை அனைத்தையும் பதிவு செய்து வைத்திருக்கின்றன.

“நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும். ( 2 கொரி 5 : 10 ) என மிகத் தெளிவாக சட்ட திட்டத்தை வரையறை செய்துமிருக்கிறார் பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி நமக்கு ஒரு எச்சரிக்கை மணி !

உண்மையான பிக் பாஸ் நிகழ்ச்சியின் கதாபாத்திரங்கள் நாம் என்பதை உணர வைத்த ஒரு எச்சரிக்கை மணி !

இந்த வீட்டில் எப்படி வாழவேண்டும் என எழுதப்பட்ட‌ வாழ்க்கை வரைமுறைகள் அடங்கிய நூல் ஒன்று உண்டு. அதன் பெயர் பைபிள்.

எப்படி வாழவேண்டும் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிகரமாய் வாழ்ந்து காட்டிய‌ ஒரு வெற்றியாளர் உண்டு, அவர் பெயர் இயேசு !

இரண்டையும் பற்றிக் கொண்டால், பிக் பாஸ் வெற்றியாளர் நாம் தான். கிடைக்கப்போவது காகிதப் பணம் அல்ல ! அழியாத விண்ணக செல்வம் !!!

நாடெங்கும் பிக் பாஸ் தான் பேச்சு !

வீட்டுக்குள் உலவ விடப்பட்டிருக்கும் சில கதாபாத்திரங்கள். அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் சில கேமராக்கள். அவரவருக்கு விதிக்கப்பட்ட வேலைகளை அவரவர் செய்ய வேண்டும். அவர்களுடைய நடவடிக்கைக்குத் தக்கபடி விளைவுகள் இருக்கும் !

சிலர் நிராகரிக்கப்படுவர். சிலர் பாராட்டப்படுவர். சிலர் தப்பிப் பிழைப்பர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிகளைப் பற்றி உலவுகின்ற செய்திகள், மீம்கள், நகைச்சுவைகள் போன்றவை அது எந்த அளவுக்கு பிரபலமாகியிருக்கிறது என்பதை விளக்குகின்றன‌ !

இன்னொரு பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை !

இந்த உலகம் எனும் வீட்டில் உலவ விடப்பட்டிருக்கிறோம் நாம் அனைவரும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை இறைவனால் தரப்பட்டிருக்கிறது. இந்த வீட்டில் நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்பது இடைவிடாமல் கண்காணிக்கப்படுகிறது.

நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கிறது. தினமும் சிலர் வாழ்க்கையை முடித்துக் கொண்டு வெளியேற்றப்படுகின்றனர். சிலர் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டே இருக்கின்றனர். எங்கும் எதையும் இறைவனிடமிருந்து மறைக்க முடியாது. ஆனால் மறைத்து விட்டதாய் நினைத்து புளகாங்கிதம் அடைந்து கொள்கிறோம்.

மறைக்காவிட்டால் என்ன ? பிக் பாஸ் என்ன செய்து விட முடியும் ? எனும் தெனாவெட்டில் சில வேளைகளில் நமக்குப் பிடித்தமானபடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பிக் பாஸ் வந்து நிற்கும் போது அவர் நமது செயல்களை வெளிப்படுத்துவார். ‘நான் அப்படியெல்லாம் செய்யலையே’ என தப்ப முடியாது. காரணம் இறைவனின் கண்கள் பூமியை எப்போதும் நோக்கிக் கொண்டிருக்கின்றன. அவை அனைத்தையும் பதிவு செய்து வைத்திருக்கின்றன.

“நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும். ( 2 கொரி 5 : 10 ) என மிகத் தெளிவாக சட்ட திட்டத்தை வரையறை செய்துமிருக்கிறார் பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி நமக்கு ஒரு எச்சரிக்கை மணி !

இறைவன் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கதாபாத்திரங்கள் நாம் என்பதை உணர வைத்த ஒரு எச்சரிக்கை மணி !

இந்த வீட்டில் எப்படி வாழவேண்டும் என எழுதப்பட்ட‌ வாழ்க்கை வரைமுறைகள் அடங்கிய நூல் ஒன்று உண்டு. அதன் பெயர் பைபிள்.

எப்படி வாழவேண்டும் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிகரமாய் வாழ்ந்து காட்டிய‌ வெற்றியாளர் ஒருவர் உண்டு, அவர் பெயர் இயேசு !

இரண்டையும் பற்றிக் கொண்டால், நமக்கு வெற்றி நிச்சயம்.
கிடைக்கப்போகும் பரிசு காகிதப் பணம் அல்ல !
அழியாத விண்ணக செல்வம் !!!

தயாராவோம் வாங்க, இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு !

*

Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் : பெத்சாய்தாவில் பார்வையற்ற ஒருவர் நலமடைதல்

mentrees

இயேசு செய்த புதுமைகள்

பெத்சாய்தாவில் பார்வையற்ற ஒருவர் நலமடைதல்

மார்க் 8:22..26

அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர்.

அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, “ஏதாவது தெரிகிறதா?” என்று கேட்டார்.

அவர் நிமிர்ந்து பார்த்து, “மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்” என்று சொன்னார். இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.

இயேசு அவரிடம், “ஊரில் நுழைய வேண்டாம்” என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

*

இயேசுவின் புதுமைகள் ஒவ்வொன்றும் நம்மை வியப்புக்குள் அழைத்துச் செல்லும் அனுபவமாக இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் இயேசுவிடம் நம்பிக்கையோடு வருகின்ற மக்கள் தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்ட திருப்தியோடு திரும்பிச் செல்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் இயேசுவின் குணமாக்கும் முறை சீடர்களையும், மக்களையும் வியப்புக்கும் கேள்விகளுக்கும் உள்ளாக்கி விடுகின்றன. “கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? (மார்க் 8:18) ” என சற்று நேரத்திற்கு முன்பு தான் சீடர்களிடம் அவர் கேட்டிருந்தார். இப்போது இந்த அதிசயம் அவர்களுக்கு மறைமுகமாய் சொல்லப்பட்ட பாடமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இயேசு செய்த அற்புதங்கள், நமது வாழ்வில் அற்புதங்களை விளைவிக்க வேண்டுமெனில் அவை கூறும் மறைவான உண்மைகளை நாம் கண்டு கொள்தல் அவசியம். அப்படி மறை உண்மைகளைக் கண்டு கொள்ள நாம் தூய ஆவியானவரின் வெளிப்படுத்துதலை தொடர்ந்து நாடுபவர்களாக இருக்க வேண்டும்.

இந்த அற்புதமும் நமக்கு பல்வேறு ஆன்மீகப் புரிதல்களைக் கற்றுத் தருகிறது.

1. பார்வையற்ற ஒரு நபரை இயேசுவிடம் கொண்டு வந்து அவரைக் குணமாக்க இயேசுவிடம் வேண்டுகின்றனர் நண்பர்கள். ஆன்மீகப் பார்வை இழந்த நண்பர்களை நாம் இயேசு எனும் வெளிச்சத்தின் முன் கொண்டு வரவேண்டிய கடமை உணர்வு உடையவர்களாக இருக்க வேண்டும்.

அதே போல, ஆன்மீக இருளில் நாம் இருக்கும் போது நம்மை இயேசு எனும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்ற நண்பர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களைச் சார்ந்தும், அவர்களுக்கு நன்றியுடையவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். உலக விஷயங்களுக்கும், கேளிக்கைகளுக்கும் கொண்டு செல்லும் நண்பர்கள், “பலர்” இருப்பார்கள். அவர்களைத் தவிர்த்து விட்டு நம்மை இயேசுவிடம் திரும்பத் திரும்ப அழைத்து வரும் அந்த “சிலர்” மீது நமது கவனமும், சார்பும் இருக்க வேண்டும். அப்போது தான் நமது வாழ்க்கை சரியான வழியில் தொடர்ந்து நடக்கும்.

2. “உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும்.( உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.) என்கிறது விவிலியம். நாம் ஆன்மீக வெளிச்சம் விழாத மனிதர்களாக இருக்கிறோம். வேதத்தின் அதிசயங்களைக் காண முடியாமல் நமது கண்கள் அடைபட்டுக் கிடக்கின்றன. அவற்றை இயேசுவின் தொடுதல் மட்டுமே திறக்க முடியும்.

தூய ஆவியின் கரம்பிடித்தலோடு இன்று நமது அகக்கண்கள் திறக்கப்பட வேண்டும். அப்போது தான் மறை உண்மைகள் நமது கண்களுக்கு மறைவாய் இருக்காமல் வெளிப்படத் துவங்கும். அதற்காக நாம் இயேசுவை நாடி வருபவர்களாக இருக்க வேண்டும்.

3. இயேசு பார்வையற்றவருடைய கரத்தைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். இயேசுவிடம் வருகின்ற நபர்களை அவர் கரம் பிடித்து அழைத்துச் செல்பவராக இருக்கிறார். நம்பிக்கையற்ற கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் செல்கிறார். ‘நீ ஊருக்கு வெளியே வா’ என அவரிடம் இயேசு சொல்லவில்லை. ‘இவரைக் கூட்டி வாருங்கள்’ என சீடர்களிடம் சொல்லவில்லை. அவரைக் கூட்டி வந்த மனிதர்களிடமும் அந்த பொறுப்பை ஒப்படைக்கவில்லை. தானே அவரது கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். இது ஒரு அற்புத அனுபவம்.

நாமும் இயேசுவிடம் வரும்போது அவர் நமது கரம் பிடித்து அழைத்துச் செல்கிறார். நம்பிக்கையற்றோர் கூட்டத்திலிருந்து நம்பிக்கையின் நாட்டுக்கு. கவலையின் கூடாரத்திலிருந்து மகிழ்வின் தோட்டத்துக்கு. அழிவின் உலையிலிருந்து, வாழ்வின் நிலைக்கு. குழப்பத்தின் பிடியிலிருந்து தெளிவின் பாதைக்கு. அவர் நமது கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். அவரை நாடி வரவேண்டியது மட்டுமே நமது வேலை ! இயேசு நமது கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்கிறார் எனில் ஒன்று மட்டும் நிச்சயம் ! ஏதோ ஒரு அதிசயத்தை நாம் காணப் போகிறோம் !

4. இயேசு அவருடைய விழிகளில் உமிழ்ந்து அவரைத் தொடுகிறார். இயேசு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக தொடுகிறார். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் குணமாக்குகிறார். அவருடைய வழிகள் நமது வழிகளைப் போல இருப்பதில்லை. ஏன் அவர் அப்படி செய்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தாமல் நாம் உணரவும் முடியாது. ஆனால் அவர் என்ன செய்தாலும் அதற்காக நம்மை முழுமையாய் ஒப்படைப்பதில் இருக்கிறது நமது நம்பிக்கையின் வெளிப்பாடு.

நமது வாழ்க்கையை நாம் முழுமையாய் இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும். அடுத்த நபருக்கு அவர் அளித்த கொடைகளையோ, நன்மைகளையோ, ஆசீர்வாதங்களையோ அடிப்படையாய் வைத்து அவர் நமக்குச் செய்யப்போகும் நலன்களை சிந்திக்கக் கூடாது. அல்லது, ‘இப்படி கடவுள் செய்வதில்லையே’ என சந்தேகம் கொள்வதும் கூடாது. ஒவ்வொருவரையும் இறைவன் ஒவ்வொரு விதமாய் ஆசீர்வதிப்பார் எனும் நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியம்.

5. ‘ஏதாவது தெரிகிறதா ?’ எனும் இயேசுவின் கேள்வி அவரது தாழ்மையையும், அவரது அன்பையும் எடுத்துக் காட்டுகிறது. ‘தன்னிடம் வல்லமை இல்லை’ என்பதல்ல இயேசுவின் கேள்வியின் பொருள், அந்த வல்லமை உன்னில் செயலாற்றியிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமே அது. அவரது வல்லமை நம்மில் செயலாற்றியிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள அவர் ஆர்வமாய் இருக்கிறார்.

அவரது தொடுதலும் அவரது வல்லமையும் நம்மை ஒரு புதிய அனுபவத்துக்கு கொண்டு செல்லும். அந்த அனுபவத்தை அவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமென இயேசு விரும்புகிறார். இதுவரை காணாத ஆன்மீகத்தின் வெளிச்சத்தை அவரது தொடுதலினால் நாம் கண்டு கொள்கிறோமா ? இதுவரை நம்மை வந்தடையாத உண்மைகள் நம்மை வந்தடைகிறதா ? இருளின் பள்ளத்தாக்கில் கிடந்த நாம், ஒளியில் மேட்டுக்கு ஏறிவந்திருக்கின்றோமா ? இயேசு நம்மிடம் விசாரிப்பவராய் இருக்கிறார்.

6. அந்த மனிதர் முழுமையாய்ப் பார்வையடையவில்லை. அதை அவர் இயேசுவிடம் வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார். ‘மனிதர்கள் நடக்கும் மரங்களாய் இருக்கிறார்கள்’ என்கிறார் அவர். ஆன்மீக இருட்டிலிருந்து வெளியே வருகின்ற அனுபவம் அலாதியானது. ஆனால் முழுமையான தெளிவான பார்வை கிடைக்கவில்லையேல், இயேசுவிடம் அதை ஒப்புக் கொள்வது மிகவும் முக்கியம். நாம் நமது குறைகளை, பலவீனங்களை, நமது யதார்த்தத்தை ஒப்புக்கொள்ளும் போது பெரிய அதிசயங்கள் நமக்காய் காத்திருக்கும்.

இறைவனின் அருகாமை நமக்கு இறைவார்த்தையின் பொருளையோ, ஆன்மீகத்தின் பாதையையோ மெல்ல மெல்ல காட்டித் தரும். அதை முழுமையாய் தெளிவாய் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் வாழ்க்கையை நாம் வாழ முடியும்.

மீட்பு என்பது சட்டென கிடைக்கும் அனுபவம், மீட்பின் வழியில் நடப்பது என்பது தொடர்ச்சியாய் கிடைக்கும் அனுபவம். பாதைக்குக் கீழ் பரவும் வெளிச்சம் போல, ஆன்மீக வெளிச்சத்தின் வழியில் தொடர்ந்து நடந்திட வேண்டும்.

7. இயேசு இரண்டாவது முறையாக அவரது ‘கண்களில்’ தொட்டபோது அவருடைய கண்கள் தெளிவடைய பார்வையை தெளிவாகப் பெற்றுக் கொண்டார். இறைவனின் இரண்டாம் தொடுதல் நமக்கு தெளிவான பார்வையைப் பெற்றுத்தரத் தேவையாகிறது. பல வேளைகளில் நாம் இறைவனின் தொடர் தொடுதலுக்காகக் காத்திருப்பதில்லை. ஒரு முறை கிடைத்த அனுபவத்தோடு திருப்திப்பட்டு விடுகிறோம்.

இரண்டாவது தொடுதல் என்பது இயேசுவின் இயலாமையின் வெளிப்பாடல்ல, அவரது அன்பின் வெளிப்பாடு. “நான் பார்வை பெறவேண்டும்” என இந்த மனிதர் சொல்லவில்லை. அவரது நண்பர்கள் தான் வேண்டுகின்றனர். அவரது விசுவாசத்தின் பலவீனம் அவருக்கு இரண்டாவது தொடுதலில் தேவையை உருவாக்கியிருக்கலாம். நாம் அனைவருமே விசுவாசத் தேவையில் இருக்கிறோம். பல வேளைகளில் தடுமாறுகிறோம். இயேசுவின் இரண்டாம் தொடுதல் நிச்சயம் வேண்டும் எனும் உண்மையை உணர்கிறோமா ?

8. ஊரில் நுழைய வேண்டாம் என இயேசு அவரை அனுப்பி வைக்கிறார். பழைய வாழ்க்கையை விட்டு வெளியே வந்தபின் மீண்டும் அந்த பழைய வாழ்க்கைக்குள் நுழையும் ஆர்வத்தை நாம் காட்டக் கூடாது. இயேசு நம்மைக் கரம்பிடித்து, நமது வாழ்க்கையில் ஆன்மீகப் பார்வையைக் கொண்டு வந்தபின் மீண்டும் இருட்டுக்குள் வாழ செல்லக் கூடாது என்பதே இயேசு சொன்ன அறிவுரை.

நமது வாழ்க்கை இயேசுவின் தொடுதலுக்கு முன், இயேசுவின் தொடுதலுக்குப் பின் என இரண்டு பிரிவாக இருக்க வேண்டும். தொடுதலுக்குப் பின்னான தூய வாழ்வு, பழைய வாழ்க்கையோடு கலந்து விடாமல் இருக்க வேண்டும். புதிய ரசத்தைப் பழைய தோற்பையில் ஊற்றி வைப்பது ஆபத்தானது. பழைய ஆடையிலுள்ள கிளிசலில், புதிய ஆடையை ஒட்டுப் போடுதல் பயனளிக்காது. எனவே புது வாழ்க்கை பெற்ற நாம் பழைய பாவத்தின் அழுக்குகளைத் தேடி செல்லக் கூடாது.

9. பார்வையற்ற நபரை இயேசுவிடம் கொண்டு வருகின்ற நபர்கள் அவரைத் தொடுமாறு வேண்டுகின்றனர். இயேசு எப்படி நலமளிக்க வேண்டும் எனும் ஒரு சிந்தனையை அவர்களுடைய மனதில் அவர்கள் வைத்திருக்கின்றனர். ஆனால் இயேசுவோ அவருக்கென ஒரு வழியை வைத்திருக்கிறார். இரண்டாவது தொடுதல் தவறல்ல என்பதை சீடர்களுக்கு புரிய வைக்கிறார். முதல் முறையில் எல்லாம் சரியாய் அமைந்து விடவேண்டுமெனும் கட்டாயமில்லை என அவர் புரிய வைக்கிறார்.

நாமும் பல வேளைகளில், ‘இயேசுவே இது எனக்கு வேண்டும், இப்படி வேண்டும்’ என இயேசுவுக்கு கட்டளையிடுகிறோம். அல்லது அவருக்குத் தெரியாதது போல நாம் அவருக்குக் கற்றுக் கொடுக்க முயல்கிறோம். அது தவறான அணுகுமுறை. நமது தேவைகளை இயேசுவிடம் சொல்ல வேண்டும், அதற்கான தீர்வை அவர் பார்த்துக் கொள்வார்.

10. கடைசியாக இயேசு, அந்த மனிதரை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். அவருடைய பார்வையின் மகிழ்ச்சியை அவரது குடும்பம் அனுபவிக்க வேண்டும் என இயேசு விரும்புகிறார். அவரது மகிழ்ச்சி இல்லத்தில் நிரம்ப வேண்டும் என அவர் ஆசிக்கின்றார்.

நமது வாழ்க்கையிலும் நமக்குக் கிடைக்குன்ற ஆன்மீக வெளிச்சங்கள் முதலில் நமது குடும்பத்தினரிடம் ஒளிரப்பட வேண்டும். அவர்களும் இறைவனின் வெளிச்சத்தில் நடக்க வேண்டும். நற்செய்தி முதலில் குடும்பத்தில் பகிரப்பட வேண்டும். குடும்பங்கள் குட்டித் திருச்சபைகளாக உருவாகும் போது தான் சமூகம் அதன் பலனை அனுபவிக்கும்.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

*

 

Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் : பெத்சாய்தாவில் பார்வையற்ற ஒருவர் நலமடைதல்

Image result for mark 8:22-26

மார்க் 8:22..26

அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர்.

அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, “ஏதாவது தெரிகிறதா?” என்று கேட்டார்.

அவர் நிமிர்ந்து பார்த்து, “மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்” என்று சொன்னார். இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.

இயேசு அவரிடம், “ஊரில் நுழைய வேண்டாம்” என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

*

இயேசுவின் புதுமைகள் ஒவ்வொன்றும் நம்மை வியப்புக்குள் அழைத்துச் செல்லும் அனுபவமாக இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் இயேசுவிடம் நம்பிக்கையோடு வருகின்ற மக்கள் தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்ட திருப்தியோடு திரும்பிச் செல்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் இயேசுவின் குணமாக்கும் முறை சீடர்களையும், மக்களையும் வியப்புக்கும் கேள்விகளுக்கும் உள்ளாக்கி விடுகின்றன. “கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? (மார்க் 8:18) ” என சற்று நேரத்திற்கு முன்பு தான் சீடர்களிடம் அவர் கேட்டிருந்தார். இப்போது இந்த அதிசயம் அவர்களுக்கு மறைமுகமாய் சொல்லப்பட்ட பாடமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இயேசு செய்த அற்புதங்கள், நமது வாழ்வில் அற்புதங்களை விளைவிக்க வேண்டுமெனில் அவை கூறும் மறைவான உண்மைகளை நாம் கண்டு கொள்தல் அவசியம். அப்படி மறை உண்மைகளைக் கண்டு கொள்ள நாம் தூய ஆவியானவரின் வெளிப்படுத்துதலை தொடர்ந்து நாடுபவர்களாக இருக்க வேண்டும்.

இந்த அற்புதமும் நமக்கு பல்வேறு ஆன்மீகப் புரிதல்களைக் கற்றுத் தருகிறது.

1. பார்வையற்ற ஒரு நபரை இயேசுவிடம் கொண்டு வந்து அவரைக் குணமாக்க இயேசுவிடம் வேண்டுகின்றனர் நண்பர்கள். ஆன்மீகப் பார்வை இழந்த நண்பர்களை நாம் இயேசு எனும் வெளிச்சத்தின் முன் கொண்டு வரவேண்டிய கடமை உணர்வு உடையவர்களாக இருக்க வேண்டும்.

அதே போல, ஆன்மீக இருளில் நாம் இருக்கும் போது நம்மை இயேசு எனும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்ற நண்பர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களைச் சார்ந்தும், அவர்களுக்கு நன்றியுடையவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். உலக விஷயங்களுக்கும், கேளிக்கைகளுக்கும் கொண்டு செல்லும் நண்பர்கள், “பலர்” இருப்பார்கள். அவர்களைத் தவிர்த்து விட்டு நம்மை இயேசுவிடம் திரும்பத் திரும்ப அழைத்து வரும் அந்த “சிலர்” மீது நமது கவனமும், சார்பும் இருக்க வேண்டும். அப்போது தான் நமது வாழ்க்கை சரியான வழியில் தொடர்ந்து நடக்கும்.

2. “உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும்.( உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.) என்கிறது விவிலியம். நாம் ஆன்மீக வெளிச்சம் விழாத மனிதர்களாக இருக்கிறோம். வேதத்தின் அதிசயங்களைக் காண முடியாமல் நமது கண்கள் அடைபட்டுக் கிடக்கின்றன. அவற்றை இயேசுவின் தொடுதல் மட்டுமே திறக்க முடியும்.

தூய ஆவியின் கரம்பிடித்தலோடு இன்று நமது அகக்கண்கள் திறக்கப்பட வேண்டும். அப்போது தான் மறை உண்மைகள் நமது கண்களுக்கு மறைவாய் இருக்காமல் வெளிப்படத் துவங்கும். அதற்காக நாம் இயேசுவை நாடி வருபவர்களாக இருக்க வேண்டும்.

3. இயேசு பார்வையற்றவருடைய கரத்தைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். இயேசுவிடம் வருகின்ற நபர்களை அவர் கரம் பிடித்து அழைத்துச் செல்பவராக இருக்கிறார். நம்பிக்கையற்ற கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் செல்கிறார். ‘நீ ஊருக்கு வெளியே வா’ என அவரிடம் இயேசு சொல்லவில்லை. ‘இவரைக் கூட்டி வாருங்கள்’ என சீடர்களிடம் சொல்லவில்லை. அவரைக் கூட்டி வந்த மனிதர்களிடமும் அந்த பொறுப்பை ஒப்படைக்கவில்லை. தானே அவரது கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். இது ஒரு அற்புத அனுபவம்.

நாமும் இயேசுவிடம் வரும்போது அவர் நமது கரம் பிடித்து அழைத்துச் செல்கிறார். நம்பிக்கையற்றோர் கூட்டத்திலிருந்து நம்பிக்கையின் நாட்டுக்கு. கவலையின் கூடாரத்திலிருந்து மகிழ்வின் தோட்டத்துக்கு. அழிவின் உலையிலிருந்து, வாழ்வின் நிலைக்கு. குழப்பத்தின் பிடியிலிருந்து தெளிவின் பாதைக்கு. அவர் நமது கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். அவரை நாடி வரவேண்டியது மட்டுமே நமது வேலை ! இயேசு நமது கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்கிறார் எனில் ஒன்று மட்டும் நிச்சயம் ! ஏதோ ஒரு அதிசயத்தை நாம் காணப் போகிறோம் !

4. இயேசு அவருடைய விழிகளில் உமிழ்ந்து அவரைத் தொடுகிறார். இயேசு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக தொடுகிறார். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் குணமாக்குகிறார். அவருடைய வழிகள் நமது வழிகளைப் போல இருப்பதில்லை. ஏன் அவர் அப்படி செய்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தாமல் நாம் உணரவும் முடியாது. ஆனால் அவர் என்ன செய்தாலும் அதற்காக நம்மை முழுமையாய் ஒப்படைப்பதில் இருக்கிறது நமது நம்பிக்கையின் வெளிப்பாடு.

நமது வாழ்க்கையை நாம் முழுமையாய் இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும். அடுத்த நபருக்கு அவர் அளித்த கொடைகளையோ, நன்மைகளையோ, ஆசீர்வாதங்களையோ அடிப்படையாய் வைத்து அவர் நமக்குச் செய்யப்போகும் நலன்களை சிந்திக்கக் கூடாது. அல்லது, ‘இப்படி கடவுள் செய்வதில்லையே’ என சந்தேகம் கொள்வதும் கூடாது. ஒவ்வொருவரையும் இறைவன் ஒவ்வொரு விதமாய் ஆசீர்வதிப்பார் எனும் நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியம்.

5. ‘ஏதாவது தெரிகிறதா ?’ எனும் இயேசுவின் கேள்வி அவரது தாழ்மையையும், அவரது அன்பையும் எடுத்துக் காட்டுகிறது. ‘தன்னிடம் வல்லமை இல்லை’ என்பதல்ல இயேசுவின் கேள்வியின் பொருள், அந்த வல்லமை உன்னில் செயலாற்றியிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமே அது. அவரது வல்லமை நம்மில் செயலாற்றியிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள அவர் ஆர்வமாய் இருக்கிறார்.

அவரது தொடுதலும் அவரது வல்லமையும் நம்மை ஒரு புதிய அனுபவத்துக்கு கொண்டு செல்லும். அந்த அனுபவத்தை அவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமென இயேசு விரும்புகிறார். இதுவரை காணாத ஆன்மீகத்தின் வெளிச்சத்தை அவரது தொடுதலினால் நாம் கண்டு கொள்கிறோமா ? இதுவரை நம்மை வந்தடையாத உண்மைகள் நம்மை வந்தடைகிறதா ? இருளின் பள்ளத்தாக்கில் கிடந்த நாம், ஒளியில் மேட்டுக்கு ஏறிவந்திருக்கின்றோமா ? இயேசு நம்மிடம் விசாரிப்பவராய் இருக்கிறார்.

6. அந்த மனிதர் முழுமையாய்ப் பார்வையடையவில்லை. அதை அவர் இயேசுவிடம் வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார். ‘மனிதர்கள் நடக்கும் மரங்களாய் இருக்கிறார்கள்’ என்கிறார் அவர். ஆன்மீக இருட்டிலிருந்து வெளியே வருகின்ற அனுபவம் அலாதியானது. ஆனால் முழுமையான தெளிவான பார்வை கிடைக்கவில்லையேல், இயேசுவிடம் அதை ஒப்புக் கொள்வது மிகவும் முக்கியம். நாம் நமது குறைகளை, பலவீனங்களை, நமது யதார்த்தத்தை ஒப்புக்கொள்ளும் போது பெரிய அதிசயங்கள் நமக்காய் காத்திருக்கும்.

இறைவனின் அருகாமை நமக்கு இறைவார்த்தையின் பொருளையோ, ஆன்மீகத்தின் பாதையையோ மெல்ல மெல்ல காட்டித் தரும். அதை முழுமையாய் தெளிவாய் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் வாழ்க்கையை நாம் வாழ முடியும்.

மீட்பு என்பது சட்டென கிடைக்கும் அனுபவம், மீட்பின் வழியில் நடப்பது என்பது தொடர்ச்சியாய் கிடைக்கும் அனுபவம். பாதைக்குக் கீழ் பரவும் வெளிச்சம் போல, ஆன்மீக வெளிச்சத்தின் வழியில் தொடர்ந்து நடந்திட வேண்டும்.

7. இயேசு இரண்டாவது முறையாக அவரது ‘கண்களில்’ தொட்டபோது அவருடைய கண்கள் தெளிவடைய பார்வையை தெளிவாகப் பெற்றுக் கொண்டார். இறைவனின் இரண்டாம் தொடுதல் நமக்கு தெளிவான பார்வையைப் பெற்றுத்தரத் தேவையாகிறது. பல வேளைகளில் நாம் இறைவனின் தொடர் தொடுதலுக்காகக் காத்திருப்பதில்லை. ஒரு முறை கிடைத்த அனுபவத்தோடு திருப்திப்பட்டு விடுகிறோம்.

இரண்டாவது தொடுதல் என்பது இயேசுவின் இயலாமையின் வெளிப்பாடல்ல, அவரது அன்பின் வெளிப்பாடு. “நான் பார்வை பெறவேண்டும்” என இந்த மனிதர் சொல்லவில்லை. அவரது நண்பர்கள் தான் வேண்டுகின்றனர். அவரது விசுவாசத்தின் பலவீனம் அவருக்கு இரண்டாவது தொடுதலில் தேவையை உருவாக்கியிருக்கலாம். நாம் அனைவருமே விசுவாசத் தேவையில் இருக்கிறோம். பல வேளைகளில் தடுமாறுகிறோம். இயேசுவின் இரண்டாம் தொடுதல் நிச்சயம் வேண்டும் எனும் உண்மையை உணர்கிறோமா ?

8. ஊரில் நுழைய வேண்டாம் என இயேசு அவரை அனுப்பி வைக்கிறார். பழைய வாழ்க்கையை விட்டு வெளியே வந்தபின் மீண்டும் அந்த பழைய வாழ்க்கைக்குள் நுழையும் ஆர்வத்தை நாம் காட்டக் கூடாது. இயேசு நம்மைக் கரம்பிடித்து, நமது வாழ்க்கையில் ஆன்மீகப் பார்வையைக் கொண்டு வந்தபின் மீண்டும் இருட்டுக்குள் வாழ செல்லக் கூடாது என்பதே இயேசு சொன்ன அறிவுரை.

நமது வாழ்க்கை இயேசுவின் தொடுதலுக்கு முன், இயேசுவின் தொடுதலுக்குப் பின் என இரண்டு பிரிவாக இருக்க வேண்டும். தொடுதலுக்குப் பின்னான தூய வாழ்வு, பழைய வாழ்க்கையோடு கலந்து விடாமல் இருக்க வேண்டும். புதிய ரசத்தைப் பழைய தோற்பையில் ஊற்றி வைப்பது ஆபத்தானது. பழைய ஆடையிலுள்ள கிளிசலில், புதிய ஆடையை ஒட்டுப் போடுதல் பயனளிக்காது. எனவே புது வாழ்க்கை பெற்ற நாம் பழைய பாவத்தின் அழுக்குகளைத் தேடி செல்லக் கூடாது.

9. பார்வையற்ற நபரை இயேசுவிடம் கொண்டு வருகின்ற நபர்கள் அவரைத் தொடுமாறு வேண்டுகின்றனர். இயேசு எப்படி நலமளிக்க வேண்டும் எனும் ஒரு சிந்தனையை அவர்களுடைய மனதில் அவர்கள் வைத்திருக்கின்றனர். ஆனால் இயேசுவோ அவருக்கென ஒரு வழியை வைத்திருக்கிறார். இரண்டாவது தொடுதல் தவறல்ல என்பதை சீடர்களுக்கு புரிய வைக்கிறார். முதல் முறையில் எல்லாம் சரியாய் அமைந்து விடவேண்டுமெனும் கட்டாயமில்லை என அவர் புரிய வைக்கிறார்.

நாமும் பல வேளைகளில், ‘இயேசுவே இது எனக்கு வேண்டும், இப்படி வேண்டும்’ என இயேசுவுக்கு கட்டளையிடுகிறோம். அல்லது அவருக்குத் தெரியாதது போல நாம் அவருக்குக் கற்றுக் கொடுக்க முயல்கிறோம். அது தவறான அணுகுமுறை. நமது தேவைகளை இயேசுவிடம் சொல்ல வேண்டும், அதற்கான தீர்வை அவர் பார்த்துக் கொள்வார்.

10. கடைசியாக இயேசு, அந்த மனிதரை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். அவருடைய பார்வையின் மகிழ்ச்சியை அவரது குடும்பம் அனுபவிக்க வேண்டும் என இயேசு விரும்புகிறார். அவரது மகிழ்ச்சி இல்லத்தில் நிரம்ப வேண்டும் என அவர் ஆசிக்கின்றார்.

நமது வாழ்க்கையிலும் நமக்குக் கிடைக்குன்ற ஆன்மீக வெளிச்சங்கள் முதலில் நமது குடும்பத்தினரிடம் ஒளிரப்பட வேண்டும். அவர்களும் இறைவனின் வெளிச்சத்தில் நடக்க வேண்டும். நற்செய்தி முதலில் குடும்பத்தில் பகிரப்பட வேண்டும். குடும்பங்கள் குட்டித் திருச்சபைகளாக உருவாகும் போது தான் சமூகம் அதன் பலனை அனுபவிக்கும்.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

*

 

Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் : காதுகேளாதவர் நலம்பெறுதல்

Image result for mark 7 31 37

மார்க் 7 :31..37

மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர்.

இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்.

பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி “எப்பத்தா” அதாவது “திறக்கப்படு” என்றார்.

உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார். இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்.

அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய் , “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொண்டார்கள்.

***

இயேசுவின் எல்லா புதுமைகளும் ஏதோ ஒரு புதிய செய்தியை தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறது. இந்தப் புதுமையும் அதற்கு விதிவிலக்கல்ல. இதுவும் நமக்கு பல்வேறு ஆன்மீக சிந்தனைகளையும் புரிதல்களையும் தருகிறது.

1. “காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர்” ! கிறிஸ்தவர்களின் முக்கியமான பணி தேவையில் உழலும் மனிதர்களை இயேசுவிடம் கொண்டு வருவதே. அது ஆன்மீகத் தேவையாகவோ, உலகத் தேவையாகவோ இருக்கலாம். காது கேளாத நபருக்கு இயேசுவின் வார்த்தைகள் கேட்கப்படாமலேயே இருந்தன‌. திக்கிப் பேசும் நாவும் இயேசுவைப் பற்றிய வார்த்தைகளைப் பேசமுடியாமல் தடுத்தது. இயேசுவிடம் செல்ல வேண்டும் என்பதைக் கூட அவர் அறியாமல் இருந்திருக்கலாம். அத்தகைய நபர்களுக்கு வழிகாட்டும் நல்ல ஆன்மீக நண்பர்கள் தேவைப்படுகின்றனர்.

நம்மைச் சுற்றி எத்தனையோ மனிதர்கள் தேவையில் உழல்பவர்களாக இருக்கிறார்கள். பல வேளைகளில் அவர்களை மருத்துவ மனைகளுக்குக் கொண்டு செல்ல ஆர்வம் காட்டும் நாம், இயேசுவிடம் அழைத்து வர ஆர்வம் காட்டுவதில்லை. இயேசுவிடம் அழைத்து வருதல் என்பது மதமாற்றமல்ல, அவரது மனதில் ஏற்பட வேண்டிய விசுவாச மாற்றம்.

2. அவரை இயேசுவிடம் அழைத்து வந்ததுடன் தங்கள் பணி முடிந்தது என நண்பர்கள் நினைக்கவில்லை, அவர் மேல் கைவைத்துக் குணமாக்குமாறு இயேசுவை வேண்டுகின்றனர். அவர்களுடைய வேண்டுதலுக்கு இயேசு செவிமடுக்கிறார்.

பிறருக்காக இறைவனிடம் வேண்டுவது நம்மிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான குணம். ஒருவருக்கு இயேசுவை அறிமுகம் செய்து வைத்தவுடன் நமது பணி நிறைவடைந்து விடுவதில்லை. அவருக்காக இயேசுவோடு நாம் மன்றாட வேண்டும். தன்னலம் இல்லாத செபங்கள் இறைவனுக்குப் பிரியமானவை. அவற்றை இறைவனின் செவிகள் ஆனந்தத்துடன் ஏற்றுக் கொள்கின்றன. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட இந்த மனிதனை இயேசுவிடம் அழைத்து வந்து, அவருக்காக வேண்டுதல் செய்யும் இந்த நண்பர்களைப் போல நாம் இருக்கிறோமா ?

3. இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் செல்கிறார். தனது புதுமைகள் விளம்பரங்களுக்கானவை அல்ல என இயேசு வெளிப்படுத்துகிறார். இந்த அற்புதத்தைக் கண்டு மக்கள் மீண்டும் தன்னை அரசனாக்கும் எண்ணம் கொள்ளக் கூடாது எனவும் அவர் நினைத்திருக்கலாம். அல்லது அங்குள்ள மக்களின் இதயங்கள் கடினமாக இருந்திருக்கலாம். எது எப்படியோ, இயேசு அந்த நபரைத் தனியே அழைத்துச் செல்கிறார்.

நமது வாழ்க்கையிலும் இயேசு பல வேளைகளில் நம்மை தனியே அழைக்கிறார். அவருக்கும் நமக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடல், உறவு, அன்பு எல்லாவற்றையும் அவர் யாசிக்கிறார். அந்த நபரை அழைத்து வந்த மக்களைக் கூட அவர் சேர்த்துக் கொள்ளவில்லை. குடும்பம், சமூகம், ஆலயம், திருச்சபை என பல அமைப்புகளோடு நாம் இணைந்தே பயணிக்கிறோம். சில வேளைகளில் இயேசு நம்மைத் தனியே அழைக்கிறார். அத்தகைய தனிப்பட்ட உறவு மிக மிக அவசியம். இயேசுவுக்கும் நமக்குமான தனிப்பட்ட உறவு எப்படி இருக்கிறது என்பதை பரிசீலனை செய்வது மிக மிக முக்கியம்.

4. “தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்” இது இயேசு தன்னை அந்த மனிதனின் நிலைக்கு இறக்கி அவரோடு உறவாடும் தருணம் அது. காதுகேட்காத நபருக்கு இயேசுவின் வார்த்தைகள் புரியாது. அவருக்கு இயேசுவின் செய்கைகளின் அர்த்தம் விளங்காது. எனவே “உனது குறைகளை நான் அறிகிறேன். உன் காதுகள் அடைபட்டிருக்கின்றன. நாவு கட்டப்பட்டிருக்கிறது என்பதை அறிகிறேன்” என இயேசு அந்த மனிதனோடு உறவாடுகிறார், உரையாடுகிறார்.

நாம் எத்தனை கொடிய பாவிகளாய் இருந்தாலும் இயேசு நம்மை நிராகரிக்காமல் பாவியின் உருவம் எடுத்து நம்மை மீட்க வந்தார். நமக்காக அவர் பாவியாகவே ஆனார். எத்தனை பெரிய புனிதராய் இருந்தாலும் இயேசுவின் வெளிச்சத்தில் பாவிகளே !. அத்தகைய நம்மோடு இயேசு நமக்குப் புரியும் விதமாகப் பேசுகிறார். அதைக் கேட்க நாம் தயாராய் இருக்கிறோமா ? அதே போல, நாம் பிறரோடு பேசும்போது அவர்களுடைய நிலைக்கு இறங்கிச் சென்று அவர்களோடு நட்பு கொள்கிறோமா ? ஆழமாய்ச் சிந்திக்க வேண்டிய விஷயம் இது !

5. உமிழ்நீரால் அவனுடைய நாவை இயேசு தொடுகின்ற நிகழ்வு அவனுடைய விசுவாசத்தைச் சோதித்தறியும் நிகழ்வு. எச்சிலால் நம்மை யாரேனும் தொடுவதை நாம் விரும்புவதில்லை. அதை அவமானமாகக் கருதுகிறோம். அதை ஏற்றுக் கொள்பவர் தன்னை ஒரு அடிமையின் நிலைக்கு இறக்கி தாழ்மையின் உச்சமாகிறார். இந்த மனிதனுக்கு இயேசுவின் மீது நம்பிக்கை இருக்கிறதா ? அல்லது நண்பர்களின் கட்டாயத்தினால் இங்கே வந்திருக்கிறானா என்பதை இயேசு இந்த தொடுதல் மூலம் சோதித்து அறிகிறார். அந்த மனிதரோ எந்தவிதமான எதிர்ப்பு உணர்வையும் காட்டாமல் இயேசுவின் செயல்களுக்கு தன்னை முழுமையாய் அர்ப்பணிக்கிறார்.

நமது வாழ்க்கையில் இயேசு செய்கின்ற ஏதேனும் செயல்கள் நமக்கு வெறுப்பைத் தருகின்றனவா ? ‘இப்படித் தான் என் வாழ்க்கை அமையணுமா ?’ எனும் எரிச்சலின் குரல் எழுகிறதா ? நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நமது நாட்கள் அமைவதில்லை. ஆனால் இறைவன் நமக்கென வைத்திருக்கும் வாழ்க்கையோ நிச்சயம் எதிர்பார்ப்புகளுக்கும் மேலானதாகவே இருக்கும். அவர் எது வேண்டுமானாலும் செய்யட்டும் என தன்னை அவரிடம் ஒப்படைப்பவர்களே மிகப்பெரிய ஆன்மீக உயரத்தை எட்டுவார்கள்.

6. இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்தார் ! தந்தையின் விருப்பமின்றி அவர் எதையும் செய்வதில்லை என்பதன் அடையாளம் அது. தனக்கு முன்னால் நிற்கின்ற அந்த மனிதருக்கு இயேசு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறார். செய்பவர் நானல்ல, என் மூலமாய் செயலாற்றுபவர் விண்ணகத் தந்தையே எனும் பாடம். தூரத்தில் இருந்து பார்க்கும் மக்களும், அருகில் இருந்து பார்க்கும் இந்த நபரும் இயேசுவின் இந்த செயலை மனதுக்குள் பதித்துக் கொள்கின்றனர்.

நமது வாழ்விலும் ஒவ்வொரு செயலையும் விண்ணகத் தந்தையின் விருப்பத்தின்படி செய்கிறோமா ? இந்த ஒரு கேள்விக்கான பதில் “ஆம்” என அமைந்தால் நமது ஆன்மீக வாழ்க்கை ஆழமாய் இருக்கிறது என அர்த்தம். வானத்தைப் பார்க்காமல் நாம் பூமியில் செய்கின்ற எந்த செயல்களுமே எதிர்பார்த்த பலனைத் தருவதில்லை. எல்லா செயல்களுக்கும் இறைவனுக்கு நன்றி சொல்ல கற்றுக் கொள்வோம்.

7. இயேசு பெருமூச்சு விட்டார் ! பெருமூச்சு விடுதல் அடுத்தவருடைய வேதனையில் தன்னை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு. எல்லாருடைய கஷ்டங்களுக்கும் நாம் பெருமூச்சு விடுவதில்லை. நாம் மிகவும் அன்பாக இருக்கும் நபர்களின் கவலைகள் மட்டுமே நம்மைப் பெருமூச்சு விட வைக்கும். இயேசு பிறருடைய கஷ்டங்களோடு தன்னை இணைத்துக் கொள்கிறார். அதுவே பெருமூச்சாய் வெளிப்படுகிறது. பலரும் உணரும் வண்ணம் அந்த பெருமூச்சு இருக்கிறது என்பது அவரது ஆழமான அன்பையே காட்டுகிறது.

நமது வாழ்க்கை பிறருடைய வேதனையில் நம்மையும் இணைத்துக் கொள்வதாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுடைய தேவைகள் நம்முடைய தேவையாய், அடுத்தவர்களுடைய ஏக்கம் நமது ஏக்கமாய், அடுத்தவர்களின் வலி நமது வலியாய் மாறிப்போவதே, “தன்னைப் போல அயலானையும் நேசி” எனும் இயேசுவின் போதனையில் வெளிப்பாடு. அத்தகைய ஆழமான அன்பு பிறர் மீது எழுகிறதா ? இல்லையேல் நமது வாழ்க்கையை சட்டென சலவை செய்வோம். அன்பினால் சரி செய்வோம்.

8. “எப்பத்தா” அதாவது திறக்கப்படு என இயேசு அந்த மனிதரை நோக்கிக் கூறுகிறார். அவர் சொன்னது அந்த மனிதரிடமல்ல, அவருடைய குறைபாட்டின் மீது. அல்லது அவரைப் பிடித்திருந்த கட்டுகளின் மீது. அது அசுத்த ஆவியாகவோ, உடல் பலவீனமாகவோ இருக்கலாம். அப்போது அவனது காதுகள் திறக்க, நாவின் கட்டவிழ்கிறது.

இயேசுவின் வருகை நமக்கும் கடவுளுக்கும் இடையே இருந்த அத்தனை கதவுகளையும் திறப்பதாக அமைந்தது. சிலுவையில் இயேசு நமது பாவங்களுக்காக‌ உயிர்விட்டபோது ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த மதில் சுவர் உடைபட்டது. கதவு திறக்கப்பட்டது.

இன்று நமது வாழ்வில் கடவுளுக்கும் நமக்கும் இடையே என்ன இருக்கிறது ? எவையெல்லாம் அவரை நம்மிடமிருந்து பிரிக்கின்றன ?. அனைத்தையும் பார்த்து இயேசு, “எப்பத்தா” என்கிறார். நமது பாவம், நமது கோபம், நமது ஈகோ, நமது வெறுப்பு, நமது ஆசைகள், நமது மாயைகள் அனைத்தையும் பார்த்து இயேசு “எப்பத்தா” என்கிறார். அவை திறக்கப்படும். அப்போது இயேசுவுக்கும் நமக்கும் இடையேயான உறவு நெருக்கமாகும். இறைவனின் அன்பினின்று நம்மைப் பிரிக்கும் அத்தனை கதவுகளையும் இறைவன் முன்னால் வைப்போம். அவரது வார்த்தையால் கதவுகள் திறக்கும், உறவுகள் பிறக்கும்.

9. இயேசுவின் வார்த்தை வலிமையுடையது. அது சொன்ன செயலைச் செய்யாமல் திரும்புவதில்லை. அவனுடைய காது திறக்கிறது, வாய் சரியாகிறது. அத்துடன் நிற்கவில்லை. அவன் பேச ஆரம்பிக்கிறான். கண்பார்வை இல்லாத ஒருவனுக்கு கண்பார்வை கிடைத்தால் சட்டென பார்க்கலாம். ஆனால் பேச்சு அப்படியல்ல. ஒலியை முதன் முதலில் கேட்கிறான், மொழியை முதன் முதலில் அறிகிறான். அவனுக்கு பேசும் பயிற்சி கிடைக்கவில்லை. ஆனால் சரளமாய்ப் பேசுகிறான். எல்லாமே அற்புதமாய் நிகழ்ந்து விடுகின்றன.

இறைவனின் அருள், இறைவனின் தொடுதல், இறைவனின் வார்த்தை செய்யும் அதிசயம் இது தான். அது மருத்துவத்தின் படிப்படியான மாற்றம் அல்ல. இறைவனின் அதிரடியான மாற்றம். ஒரு வினாடியில் அனைத்தையும் புதுப்பிக்கும் மாற்றம். பாவக் கறைகளை ஒரே ஒரு வினாடியில் அழித்து நம்மைப் புதுப்பிறப்பாக்கும் மாற்றம். நாம் தேடவேண்டியது இந்த மாற்றத்தைத் தான்.

10. “எவருக்கும் சொல்ல வேண்டாம்” என இயேசு கட்டளையிடுகிறார். பேச முடியாத நிலையில் அவன் இருந்தபோது அவனுக்கு பேச அனுமதி இருந்தது. பேச இயலும் நிலைக்கு வந்தபோது பேச அனுமதி இல்லை. ஆனால் அவர்கள் கட்டளையை மீறுகின்றனர். எங்கும் இயேசுவை அறிவிக்கின்றனர். இது ஒரு பாவச் செயலே. நமது பார்வைக்கு நல்லது என தெரிவது இறைவனின் பார்வைக்கு நல்லது எனத் தெரிய வேண்டியதில்லை. இயேசுவின் கட்டளைகளை அப்படியே செயல்படுத்துவதே நமது அழைப்பு. நமது புரிதலுக்கு ஏற்ப அதை மாற்றுவதல்ல.

மக்கள் வியப்படைகின்றனர். ஆனால் அவர்கள் இயேசுவை மெசியாவாக உணரவில்லை. ‘ஏசாயா’ இறைவாக்கினரின் வார்த்தைகள் செயல்வடிவம் பெறுவதை அறியவில்லை. நமது வாழ்க்கையும் வியந்து போய் விலகிச் செல்வதாய் இருக்கக் கூடாது. வியந்து போய் நெருங்கி வருவதாய் இருக்க வேண்டும். இயேசுவின் தொடுதல் வரை எதுவும் பேசலாம். இயேசுவின் தொடுதலுக்குப் பின், நமது வார்த்தைகள் இறைவனின் கட்டளைகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

*

 

Posted in Articles, Sunday School

SKIT : Joy of the Lord

Image result for jesus christ

காட்சி 1

அப்பா, அம்மா வீட்டில் இருக்கின்றனர்

அப்பா ( போனில் ) : பரவாயில்லைங்க.. இதுல என்ன இருக்கு. நோ பிராப்ளம். ஃபிரியா இருக்கும்போ வீட்டுங்கு வாங்க.

அம்மா : யாருங்க போன்ல ?

அப்பா : குமாரசாமி தான் பேசினாரு. இன்னிக்கு கொஞ்சம் காசு தரேன்னு சொல்லியிருந்தாரு அது கிடைக்கலையாம்.

அம்மா : ஐயோ, பையனுக்கு காலேஜ் பீஸ் கட்டணுமே. என்ன பண்றது ?

அப்பா : அதெல்லாம் கடவுள் பாத்துப்பாரு. நீ ஏன் கவலை படறே. முயற்சி மட்டும் நாம பண்ணுவோம், முடிவு அவர் கையில தான் இருக்கு.

அம்மா : எப்படி தான் நீங்க கூலா இருக்கீங்களோ ! எனக்கு பக் பக் ந்னு இருக்கு. பணம் கிடைக்கணும், பீஸ் கட்டணும், அவனை படிக்க வெச்சு ஒரு பெரிய ஆளாக்கணும். அப்ப தான் எனக்கு சந்தோசம்.

அப்பா : படிக்கிறதுலயோ, பெரிய வேலைல இருக்கிறதிலயோ சந்தோசம் கிடையாது. கடவுளோட இருக்கிறதுல தான் நமக்கு சந்தோசம். வேலை நம்மை ஒரு ஆபீஸ்ல தான் சேக்கும். கடவுள் தான்

நம்மை சொர்க்கத்துல சேக்க முடியும்.

அம்மா : சரி, சரி… வீட்லயும் பிரசங்கம் பண்ணாதீங்க. ஊர்ல தான் பிரசங்கம் பண்ணிட்டே திரியறீங்க. அது போதாதா ? என்ன மனுஷனோ !

அப்பா : சரி சரி.. சலிச்சுக்காதே. சந்தோசமா இரு. கவலையா இருக்கிறதனால நாம எதையும் சாதிக்கப் போறதில்லை. அவரோட சித்தம் எதுவோ அது தான் நடக்கும். அதனால அமைதியா இருப்போம்.

( அப்போது ஒருவர் வருகிறார் )

நபர் 1 : ஐயா…

அப்பா : சொல்லுங்கய்யா.. என்ன விஷயம் … ரொம்ப டென்சனா இருக்கீங்க.

நபர் 1 : ஐயா.. என் பையன் திடீரென மயங்கி விழுந்துட்டான். அவனை ஆஸ்பிடல்ல சேக்கணும். கைல நயா பையா இல்ல. நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணணும்.

அம்மா : ஐயோ.. என்ன பண்ண.. எங்க கிட்டயும் சுத்தமா காசே இல்லை. இப்போ தான் பையனோட ஸ்கூல் பீஸ் பற்றி பேசிட்டிருந்தோம்.

அப்பா : சும்மா இரு.. அவரே கஷ்டத்துல இருக்காரு… எப்படியாச்சும் ஹெல்ப் பண்ணணுமே.. என்ன பண்ணலாம்.. ஆங்…  உன்னோட அந்த செயினை கொஞ்சம் கழட்டி குடு..அதை வெச்சு அவர் மருத்துவம் பாக்கட்டும்… அப்புறம் வாங்கிக்கலாம்.

அம்மா : ஏங்க தெரிஞ்சு தான் பேசறீங்களா ?…, அது தாலிங்க…

அப்பா : அதுக்கென்ன இப்போ.. நான் தான் இங்கே இருக்கேனே.. அப்புறம் என்ன ? இன்னொன்னு கட்டிக்கலாம்.

அம்மா : நோ..நோ. அதெல்லாம் முடியாது. தாலியைக் கழட்டினா புருஷனுக்கு ஆவாதுன்னு சொல்லுவாங்க.

அப்பா : அதெல்லாம் முட்டாள் தனமான பேச்சு. இது ஒரு அடையாளம் தான். ஆதாம் ஏவாளுக்கு தாலியா கட்டினாரு ? மனுஷனுக்கு உதவாத தாலி கழுத்துக்கு பாரம்.

அம்மா : தாலி இல்லாம நான் எப்படிங்க வெளியே போறது… என்ன விளாடறீங்களா ?

அப்பா : கடவுள் நமக்கு உயிரை தந்திருக்கிற வரைக்கும் தாலி இல்லாமலும் வெளியே போலாம்.

கடவுள் உயிரை எடுத்துட்டா, தாலி இருந்தாலும் நாம வெளியே போக முடியாது.

நபர் 1 : ஐயா.. அம்மாக்கு புடிக்கலேன்னா வேணாம்ய்யா.. நான் வேணும்ன்னா வேற யாரையாச்சும் கேட்டுப் பாக்கறேன்.

அப்பா : அப்படியெல்லாம் இல்லீங்க. அவங்க என் மனைவி. நாங்க இப்படி ஜாலியா பேசிப்போம், ஆனா அவங்களுக்கு ரொம்ப இளகிய மனசு. பீஸ் கட்டவே கவலைப்படற அவங்க, உயிரைக் காப்பாத்த கவலைப்பட மாட்டாங்களா…என்ன ?

அம்மா : இப்படி பேசிப் பேசியே எல்லாத்தையும் சாதிச்சுடுங்க ( சொல்லிக் கொண்டே தாலியைக் கழற்றிக் கொடுக்கிறார் )

நபர் 1 : ரொம்ப நன்றிங்கம்மா…

அம்மா : சீக்கிரம் திருப்பிக் கொடுத்துடுப்பா..

அப்பா : அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாதேப்பா.. பையனை ஹாஸ்பிடல்ல சேத்துடு. நான் சாயங்காலம் வந்து பாக்கறேன்.

நபர் 1 : சரிங்கய்யா.. ( ஓடுகிறார் )

அம்மா : அதெப்படியோ தெரியல.. நீங்க மட்டும் என்ன தான் நடந்தாலும் ஒரு புன்னகையோட இருக்கீங்க. தலையில இடி விழுந்தா கூட சிரிப்பீங்க போல. ( புன்னகைக்கிறார் )

அப்பா : நாம எல்லாம் அப்பாவோட கை பிடிச்சு திருவிழாக்கு போற பிள்ளைங்க மாதிரி. அப்பாவோட கையை புடிச்சிருக்கிற வரைக்கும் கவலையில்லை. கையை விட்டுட்டா தான் பதட்டமாகி அப்பா எங்கேன்னு தேடணும். மறுபடியும் அவரோட கையை புடிக்கணும். கடவுளோட‌ கைல இருக்கிற வரைக்கும் நமக்கு கவலையே இல்லை. எல்லாத்தையும் அவரே பாத்துப்பாரு.

அம்மா : ம்ம்.. ஆயிரம் தான் இருந்தாலும்…. பையனுக்கு ஃபீஸ் தான்…. எப்படி கட்ட போறேனோ !

காட்சி 2

(பையன், அப்பா, அம்மா )

பையன் : அப்பா… அப்பா…

அப்பா : என்னப்பா.. ஒரே சந்தோசமா இருக்கே போல !

பையன் : ஆமாப்பா.. ஒரு சந்தோசமான விஷயம் தான்பா..

அம்மா : சொல்லுடா.. என்னாச்சு ? காலேஜ்ல டிஸ்டிங்ஷன்ல பாசாகிட்டியா ? இல்ல ஏதாச்சும் அவார்ட் வாங்கியிருக்கியா ?

பையன் : அதெல்லாம் இல்லம்மா…

அம்மா : ஓ.. அப்போ ஏதாச்சும் நல்ல வேலை கிடைச்சிருக்கா ?

பையன் : அதெல்லாம் சின்ன விஷயம்மா..

அம்மா : அப்போ என்னடா ? ஏதாவது பொண்ணு கிண்ணு பாத்து வெச்சிருக்கியா ? எங்களுக்கு தெரியாம லவ் கிவ் பண்ணினே, காலை உடச்சுபுடுவேன் ஆமா…

பையன் : ஐயோ அம்மா… சும்மா சும்மா ஏதாச்சும் சொல்லிட்டே இருக்காதீங்க.. படிப்பு, மார்க், காலேஜ், வேலை, கல்யாணம்ன்னு

அம்மா : வேற என்னடா சொல்லணும் ?

பையன் : அம்மா .. நான் ஒரு இடத்துக்கு ஊழியத்துக்கு போகப் போறேன்.

அப்பா : பிரைஸ் த லார்ட்… நல்ல முடிவுப்பா…

அம்மா : ஐயோ.. என்னடா சொல்றே.. அதுக்காடா உன்னை இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வெச்சோம்… பீஸ் கட்ட கூட காசில்லாம… ( அம்மா விசும்புகிறார் )

அப்பா :  என்னம்மா இது.. பையன் எவ்வளவு சந்தோசமான விஷயம் சொல்லியிருக்கான்… அதுக்கு சந்தோசப்படாம…

அம்மா : ஆமா.. இதுல என்ன சந்தோசம்… உங்களுக்கு தான் எதுக்கெடுத்தாலும் சந்தோசமா இருக்குமே !

அப்பா : கடவுளுக்கான பணி செய்றதுல இருக்கிற சந்தோசமே தனி தான்மா.. நீயும் ஒரு நாள் அதைப் புரிஞ்சுப்பே.

அம்மா : ஆமா…ஆமா.. நீங்க உருப்படாம போனதும் இல்லாம, இப்போ பையனையும் கெடுக்கறீங்க…. எப்படியோ போங்க.. நம்ம தலையெழுத்து. இவனாவது கஞ்சு ஊத்துவான்னு பாத்தா, காதுல ஈயத்தை காய்ச்சி இல்லே ஊத்தறான்…

அப்பா : எல்லாம் கடவுள் பாத்துப்பாரும்மா.. நம்ம தலைமுடியை எண்ணி வெச்சிருக்கிறவரு அவரு, நம்ம எதிர்காலத்தை எண்ணாம இருப்பாரா என்ன ?

அம்மா : ஆ..ஊ..ன்னா இப்படி ஏதாச்சும் சொல்லிடுங்க.

அப்பா : சரிப்பா… ( பையனை நோக்கி ) நீ எங்கே ஊழியம் பண்ண போறே ? காலேஜ்லயா ?

பையன் : இல்லப்பா….

அப்பா : அப்புறம் எங்கேப்பா ? கிராம ஊழியமா ?

பையன் : இல்லப்பா

அப்பா : அப்போ.. மருத்துவமனை, ஜெயில்.. இப்படி எங்கேயாச்சும் ?

பையன் : இல்லேப்பா.. நான் வெளியூர் போறேன்பா…

அப்பா : ஓ… அது தான் உன் அழைப்புன்னா.. தாராளமா போலாம். எந்த இடம்பா ?

பையன் : ச்சாட் ந்னு ஒரு இடம்பா.. ஆப்ரிக்கால…

அப்பா : ( அதிர்ச்சியுடன் ) வாட்… ச்சாட்லயா.. அய்யோ…. அது… அந்த இடம்…

பையன் : தெரியும்பா… உலகத்துலயே அதிகம் கிறிஸ்தவர்கள் கொல்லப்படற ஒரு நாடுப்பா…

அப்பா : அ..அது… உன்னோட அழைப்பு தானா ? நல்லா பிரேயர் பண்ணினியா ?

பையன் : பண்ணிட்டேன்பா.. ரெண்டு மூணு தடவை கடவுள் கிளியரா பேசிட்டாரு. அங்கே தான் போகணும்ன்னு. இயேசுவை அறியாத மக்கள் எக்கச்சக்கம் இருக்காங்க. அவங்களுக்கு இயேசுவை எடுத்துச் சொல்லணும். அது தான் என்னோட அழைப்பு.

அப்பா : ( கவலையுடன் அங்கும் இங்கும் நடக்கிறார் ) நான் எப்பவுமே இயேசுவை மக்களுக்கு அறிவிக்கிறேன். எல்லோரும் இயேசுவை அறியணும்ன்னு தான் நான் விரும்பறேன். ஆனா. இந்த இடம்….

பையன் : கடவுள் என்னை அங்கேயிருந்து கூப்பிட்டா நான் சந்தோசமா போவேன்பா. கர்த்தருக்குள் சந்தோசமா இருக்கிறது தான் என்னோட பலம்.  நீங்க சொல்லி குடுத்தது தானேப்பா… நான் ஏன் கவலைப்படணும்.

அம்மா : என்னப்பா.. என்னென்னவோ பேசறீங்க‌.. அவ்வளவு மோசமான இடமா அது ?

பையன் : சே..சே.. அப்படியெல்லாம் ஒண்ணுமில்லேம்மா… உயிரை கொடுக்கிறதும், எடுக்கிறதும் கடவுள் கைல. அவர் கேட்டா குடுத்துடப் போறோம். அதுல கவலைப்பட என்ன இருக்கு.

அம்மா : உன்னை என்னோட கண்ணுக்குள்ள வெச்சு பாத்துக்கணுங்கறது தான் என்னோட ஆசை.. நீ என்னடான்னா..உயிரு கியிருன்னு பேசிட்டிருக்கே…

பையன் : என்னம்மா இப்படி சொல்றீங்க.. நாம கடவுளோட கண்மணிகள் .. நம்மை யாரும் தொட கடவுள் விட்டுருவாரா என்ன ?

அப்பா : யோபுவோட வாழ்க்கையை பாக்கலையா… எல்லாம் போனப்பவும் “கடவுள் கொடுத்தார், கடவுள் எடுத்தார் அவருக்கே மகிமை உண்டாகுக” ந்னு சொன்னாரு அவரு. எது நடந்தாலும் கடவுளோடு இணைந்து நடக்கணும். அது தான் சந்தோசமான வாழ்க்கை.

பையன் : நீங்க இப்படி தந்த ஊக்கம் தாம்பா என்னை இன்னிக்கு ஊழியம் செய்ய தயாராக்கியிருக்கு.

அப்பா : ம்ம்ம்.. சரிப்பா.. கடவுளோட சித்தம் எதுவோ அதுபடி நடக்கும். நீ நல்லா செபம் பண்ணிட்டு ரெடியாகு. எப்போ கிளம்பறே.. ஏதாச்சும் கொண்டு போணுமா ?

பையன் : சீக்கிரம் போணும்பா… ஒரு சவப்பெட்டி வேணும்பா…

அப்பா : ச..ச..சவப்பெட்டியா ? ஏன் ? எதுக்கு ?

பையன் : அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. அந்த நாட்டுக்கு ஊழியம் செய்ய‌ போறவங்க ஒரு சவப்பெட்டியையும் கையோடு கொண்டு போவாங்க. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். ஒருவேளை நாம கொல்லப்பட்டால் மற்ற ஊழியர்களும், கிறிஸ்தவர்களும் சேர்ந்து நம்மை கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்ய இது உதவியா இருக்கும்.

அம்மா : ( அழுது கொண்டே ) என்னங்க.. பையன் என்னென்னவோ சொல்றான்…

பையன் : என்னம்மா இதுக்குப் போய் அழுதுட்டு…  சாவு எங்கே இருந்தாலும் வரும், வாழ்வு இயேசுவோடு இருக்கும் போ மட்டும் தான் வரும். ஒரு வேளை நாம் இறந்து போனா கூட அது இன்னொரு வீட்டுக்குப் போற மாதிரி தானே.. ஏன் கவலைப்படறீங்க..

அப்பா : ( பையனை கட்டியணைக்கிறார். ) எது நடந்தாலும் அது கடவுள் விருப்பப்படி தான் நடக்கும். உன்னோட இந்த ஊக்கத்துக்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்றேன். உனக்கு எந்த கெடுதலும் வரக்கூடாதுன்னு செபிக்கிறேன்பா.. ( கண்களைத் துடைத்துக் கொள்கிறார் )

பையன் : அப்பா .. எது நடந்தாலும் அது கடவுளோட விருப்பப்படி ந்னு நினைச்சுக்கோங்க. அவரோடு இருப்பதில் தான் நம்மோட பலம்பா… நான் கிளம்பறேன்பா… டிராவலுக்கான ஏற்பாடுகள் கொஞ்சம் செய்யணும்.

அப்பா : சரிப்பா.. காட் பிளஸ் யூ…

காட்சி 3 :

(பையன், மூன்று நபர்கள் )

( பையன் ஆப்பிர்க்காவில் சுவிசேஷம் அறிவித்துக் கொண்டிருக்கிறான் )

பையன் : ( செபம் ) அன்பான ஆண்டவரே, இந்த ஆப்பிரிக்க நாட்டிலே கடந்த இரண்டு மாத காலமாக உம்மைப் பற்றி அறிவிக்க நீர் தந்த மேலான கிருபைக்காக நன்றி. உம்மைப் பற்றி அறியாத பல மக்களுக்கு உம்மைப் பற்றி சொல்ல எனக்கு நீர் தந்த வாய்ப்பு மேலானது ஆண்டவரே. இன்னும் நிறைய மக்களுக்கு நான் உம்மைப்பற்றி அறிவிக்க எனக்கு உதவி செய்தருளும் ஆண்டவரே. ஆமென்.

( அப்போது மூன்று பேர் உள்ளே வருகிறார்கள் )

ந 1 : ஐயா வணக்கம்.. இங்கே ஸ்டீபன் யாரு ?

பையன் : நான் தான் வாங்க.. உக்காருங்க. என்ன விஷயம்.

ந 2 : சும்மா தான் உங்களைப் பாத்துட்டு போக வந்தோம்.

பையன் : ரொம்ப மகிழ்ச்சி. வாங்க உட்காருங்க.. சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்.

ந 3 : வேண்டாம்..வேண்டாம்… அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.

பையன் : சொல்லுங்க… உங்களையெல்லாம் சந்திச்சதுல மகிழ்ச்சி ( புன்னகைக்கிறார் )

ந 1 : ரொம்ப உற்சாகமா இருக்கீங்க…

பையன் : ஆமா… நமக்கு மனசுக்குப் புடிச்ச வேலையைச் செய்யும் போ சந்தோசம் தானா வரும். நேர்மையான பணியைச் செய்யும் போதும் மகிழ்ச்சி தானா வரும். கடவுள் சொன்ன வேலையைச் செய்யும் போதும் மகிழ்ச்சி தானா வரும். நான் செய்றது இது எல்லாம் சேர்ந்தது, அதான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

ந 1 : அப்படி என்ன வேலை செய்யறீங்க சார் ?

பையன் : இந்த உலகைப் படைத்து, மக்கள் பாவத்தில் இருப்பதைக் கண்டு கலங்கி, அவர்களை மீட்டு பரலோகம் சேர்க்க, தன்னோட ஒரே மகனாகிய இயேசுவை அனுப்பிய கடவுளின் அன்பைப் பற்றியும். நமக்காக சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்ட இயேசுவைப் பற்றியும். பரலோகம் சேர நமக்கு வழிகாட்டும் பரிசுத்த ஆவியைப் பற்றியும் மக்களுக்கு எடுத்துச் சொல்றேன்.

ந 2 : ஓ.. அப்படியா.. அதுல மகிழ்ச்சியடைய என்ன சார் இருக்கு.

பையன் : என்ன இப்படி சொல்லிட்டீங்க.

நமக்கு பரலோகம் நிச்சயம் அது மகிழ்ச்சி இல்லையா ?.

கடவுளை அப்பா என அழைக்கலாம் அது மகிழ்ச்சி இல்லையா ?

நாம் பாவ அடிமைத்தனத்திலிருந்து மீளலாம், அது மகிழ்ச்சி இல்லையா ?

கடவுள் எப்போதும் நம்மோடு இருக்கிறார், அது மகிழ்ச்சி இல்லையா ?

இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.

ந 3 : எங்களுக்கு புரியலை சார், கொஞ்சம் புரியும் படியா சொல்றீங்களா ?

பையன் : கடவுள் நம்மை அவருடைய சொந்தக் கரங்களால் உருவாக்கினார், அவரோட கரம் நம்மோடு இருக்கிறது.

நாம் இயேசுவை ஏற்றுக் கொள்ளும் போது புதுப் பிறப்பாகிறோம். கடவுளின் பெயர் நம்மோடு இருக்கிறது.

நம்முடைய பிறப்பு ஒரு விபத்து அல்ல. “நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். ” என்கிறது பைபிள். இப்படி கடவுளின் திட்டம் நம்மோடு இருக்கிறது !

அந்தக் கடவுளை நாம ஏற்றுக் கொண்டு பாவத்தை அறிக்கையிட்டு மனம் திரும்ப வேண்டும். மனம் திரும்பிய பின் கடவுளுக்கு பிரியமான வாழ்க்கை வாழவேண்டும். இது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்.

ந 1 : இதைச் சொல்ல தான் நீங்க இந்தியால இருந்து வந்தீங்களா ?

பையன் : ஆமா… சார். இது என்னோட கனவு.

ந 2 : ஏண்டா…டேய்… எங்க நாட்டிலயே வந்து, எங்க தெய்வத்தையே வேண்டாம்ன்னு சொல்லி வேற ஒரு தெய்வத்தைக் கொண்டு வருவே. என்ன தைரியம் உனக்கு.

பையன் : சார்… கொஞ்சம் அமைதியா பேசுங்க.

ந 3 : பேசறதா ? உன்னை பொடி வெச்சு பிடிக்க தான் உன் கூட இவ்ளோ நேரம் பேசினோம். உன்னை கவனிச்சுட்டு தான்டா இருக்கோம்.

பையன் : இதுல பொடி வெச்சு பிடிக்க என்ன இருக்கு ? கடவுளைப் பற்றி பேச நான் ஏன் பயப்படணும் ?

ந 2 : உங்களையெல்லாம் எவ்ளோ அடிச்சாலும், எத்தனை பேரை கொன்னாலும் புத்தி வராதா ?

பையன் : கடவுளோட நற்செய்தியை அறிவிக்க ஏன் பயப்படணும். அது மகிழ்ச்சியான விஷயம் இல்லையா ?

ந 1 : எனக்கு ஒண்ணு மட்டும் புரியவே இல்லை. எவ்ளோ தான் அடிச்சாலும் ஏன்டா சிரிச்சிட்டே சாகறீங்க. அதான் எரிச்சலா இருக்கு.

பையன் : கடவுள் எங்க கூட இருக்கார். அவரு சொல்லாம எங்க உயிரை யாரும் எடுக்க முடியாது. அவரு சொல்லிட்டா நாங்க அவர் கிட்டே தான் போவோம்ங்கற உத்தரவாதம் இருக்கு. அதான் எங்களோட மகிழ்ச்சிக்கு காரணம். அந்த மகிழ்ச்சி தான் எங்களோட பலத்துக்கு ஆதாரம்.

ந 2 : ஆதாரமோ, ஆகாரமோ … இன்னும் அஞ்சு நிமிஷத்துல நீ ஆகாயத்துல இருப்பே.

பையன் : அது தான் கடவுளோட சித்தம்னா நான் அதுக்கு தயார்.

ந 1 : சரி.. ஒரே ஒரு சலுகை தரேன். உனக்கு மட்டும். பாக்க சின்ன பையனா இருக்கே. இயேசுவைப் பற்றி நான் சொன்னதெல்லாம் பொய்ன்னு ஊர் மக்கள் கிட்டே நாளைக்கு நீ சொல்லணும். சொல்லிட்டா நீ இந்தியாவுக்கு போயிடலாம். இல்லேன்னா, உன்னோட சாம்பல் கூட இந்த இடத்துல மிஞ்சாது.

பையன் : ஐயா…. நான் இங்கே வரும்போது கொண்டு வந்தது ரெண்டு பொருட்கள் தான். ஒண்ணு வாழ்வு தரும் கடவுளோட வார்த்தைகள். அதான் இந்த பைபிள். இன்னொன்னு வாழ்வு முடிஞ்சா உடலை போட ஒரு சவப்பெட்டி, அதோ அங்கே இருக்கு.

ந 3 : என்ன சொல்றே ? சவப்பெட்டியை இந்தியால இருந்து கொண்டு வந்தியா !!!!

பையன் : ஆமா.. சாக சம்மதிச்சு தான் இங்கே வந்திருக்கேன். நீங்க வாழணும் அதுக்காக நான் சாக தயார். நாம வாழ இயேசு மரித்தார். அவர் தான் எங்க வழிகாட்டி.

ந 1 : இந்த நாயை அடிச்சு துவைங்கடா…

( அடிக்கிறார்கள் )

ந 3 : நாளைக்கு மக்கள் கிட்டே போய் இயேசுவைப் பற்றி சொன்னதெல்லாம் தப்புன்னு சொல்லுவியா ?

பையன் : மாட்டேன்.. முடியவே முடியாது.

ந 1 : ஒரு வாளை எடுத்து ஓங்கி வெட்டுகிறார்

பையன் : இயேசுவே.. என்னை ஏற்றுக் கொள்ளும்…

(விழுந்து விடுகிறார் )

காட்சி 4 :

(அப்பா, அம்மா )

அப்பா : ( போன் அடிக்கிறது எடுக்கிறார் )… என்னது ? எப்போ ? தலையில் அடித்துக் கொள்கிறார்.

அம்மா : என்னங்க ஆச்சு.. ஏன் அழறீங்க‌

அப்பா : நம்ம பையன்… நம்ம பையன்..

அம்மா : நம்ம பையனுக்கு என்னங்க ஆச்சி.. சொல்லுங்க… ( பதட்டத்துடன் )

அப்பா : கடவுளைப் பத்தி பேசிட்டிருந்தான், இப்போ கடவுள் கூட பேச போயிட்டான்.

அம்மா.. மயங்கி கீழே விழுகிறார்.

சட்டென முழங்கால் படியிட்டு செபிக்கிறார்.

“இயேசுவே.. வழியும், சத்தியமும், ஜீவனும் நீரே. உமது கரத்தில் என் பையனின் ஜீவனை ஏற்றுக் கொள்ளும். எங்கள் துக்கத்தை ஆனந்தமாய் மாற்றும். உமது பிள்ளைகளாகிய நாங்கள். உம்மிலே மகிழ்ச்சியாய் இருப்பதே எங்கள் பலம். எப்போதும் எங்களை பலப்படுத்தும். ஆமென்”

பின் குரல் :

இது கற்பனைக் கதையல்ல. ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் மிஷனரி ஊழியம் செய்யச் செல்பவர்கள் தங்களோடு கூட சவப்பெட்டியையும் சுமந்து செல்கிறார்கள். மரணத்துக்குத் தயாராகச் செல்லும் அவர்களுடைய மனம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருக்கும். அதுவே அவர்களைப் பலப்படுத்தும். அவரில் மகிழ்ச்சியாய் இருப்போம் நமது பலம் அது என உணர்வோம். நன்றி.