காட்சி 1 :
நபர் 1 : ( சோகமாக, ஏதோ யோசனையில் உலவிக் கொண்டிருக்கிறார் )
நபர் 2 : ஹேய்… என்னப்பா என்ன யோசனை ? நோவா கப்பல் செய்றதுக்கு கூட இப்படி யோசிச்சிருக்க மாட்டாரு போல. என்ன விஷயம் ?
ந 1 : நோவாக்கு கடவுள் எல்லாத்தையும் சொல்லிட்டாருப்பா. சோ, அவருக்கு யோசிக்க வேண்டிய தேவை இல்லை. பட்… எனக்கு ஒரு குழப்பம்..
ந 2 : என்ன குழப்பம்ன்னு சொல்லு… எனக்கு தெரியுமான்னு பாக்கறேன்.
ந 1 : மேட்டர் வேற ஒண்ணும் இல்லை. “இயேசுவைப் போல அன்பு செய்” ங்கற தலைப்பில எனக்கு ஒரு பேச்சுப் போட்டி. இயேசுவைப் போல அன்பு செய்னா ? என்னன்னு யோசிக்கிறேன்.
ந 2 : இதுல என்னடா குழப்பம் ? இயேசு நமக்காக சிலுவையில் அறையப்பட்டு உயிர் விட்டாரு. அதே மாதிரி….
ந 1 : அதே மாதிரி.. சிலுவைல அறையப்படணுமா ? என்னடா சொல்றே ?
ந 2 : இல்ல.. அன்புங்கறது அவ்ளோ டீப்பா இருக்கணும்… ந்னு சொல்ல வரேன்.
ந 1 : நீ என்னை ஓவரா குழப்பறே… நீ பேசாம இருந்தாலே போதும்ன்னு நினைக்கிறேன்.
( அப்போது மூன்று நண்பர்கள் வருகிறார்கள் )
ந 4 : ஹேய்.. என்னப்பா ? ரோட் சைட்ல சுத்திட்டிருக்கீங்க ? என்ன விஷயம் ?
ந 2 : வாங்கடா.. இவனுக்கு ஒரு டவுட்டு…
ந 5 : ம்ம்.. பாத்தாலே தெரியுது. என்ன டவுட்டு.
ந 1 : இயேசுவைப் போல அன்பு செய்றதுங்கறது எப்படிடா ? சொல்லு பாப்போம்.
ந 3 : இதுவா.. சிம்பிள். அவர் எல்லார் கிட்டேயும் அன்பா இருந்தாரு. அன்பா பழகினாரு. அன்பா பேசினாரு.
ந 1 : அதான் எப்படின்னு கேக்கறேன்.
ந 3 : எப்படின்னா.. அப்படித் தான்…
ந 2 : இவனோட குழப்பத்தைத் தீக்கணும்ன்னா நாம இயேசுவை போய் பாத்தா தான்டா முடியும்… ஓவரா குழம்பறான்.. நம்மையும் குழப்பறான்.
ந 5 : போய் பாத்துடுவோமா ?
ந 2 : உட்டா.. இவன் நம்மளை போட்டுத் தள்ளிடுவான் போல.
ந 5 : இல்லடா.. நாம டைம் மிஷின்ல இயேசுவோட காலத்துக்கே போய் பாத்துட்டு வந்தா என்ன ?
ந 1 : என்ன சினிமால எல்லாம் வருமே.. பெரிய பொட்டிக்குள்ள போய் அப்படியே பழைய காலத்துக்கு போறது.. அதுவா ? காமெடி பண்றான்டா..
ந 5 : காமெடி இல்லை. இதோ பாரு நான் கைல கட்டியிருக்கிற வாட்ச். இது வாட்ச் இல்லை. டைம் மிஷின். என் அப்பா உருவாக்கினது.
ந 2 : வாட்.. ? வாட்ச் ல டைம் மெஷினா ?
( எல்லோடும் அருகில் வந்து உற்றுப் பார்க்கிறார்கள் )
ந 3 : பெரிய வண்டி மாதிரி தானேடா இருக்கும் அது ?
ந 5 : அதெல்லாம் விஷயம் தெரியாதவங்க சொல்றது. இப்ப பாரு.. இந்த வாட்ச்ல ஒரு டேட் அன்ட் டைம் செட் பண்ணணும். அப்பறம் நாம எல்லாரும் கைகளை இப்படி சேத்துப் புடிக்கணும். தென், இந்த பட்டனை அமுக்கணும். அவ்ளோ தான்.
ந 4 : சூப்பர் டா. இதுவரை நான் கேட்டதுலயே சூப்பர் ஜோக் இது தான்.
ந 5 : டேய்.. கலாய்க்காதீங்க. வாங்க உங்களுக்கு நானே செஞ்சு காமிக்கிறேன்.
( எல்லோரும் கைகளை மடித்து ஒருவருக்கொருவர் பிடித்துக் கொள்கிறார்கள் )
காட்சி 2
( 5 பேரும் சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள் )
ந 5 : நாம இயேசு பிறந்த காலத்துல, அவரோட ஊருக்கு வந்திருக்கோம்.
ந 1: நிஜமாவா சொல்றே.. வாவ்..
ந 3 : பயமா இருக்கு.. வாட்ச் ல பேட்டரி இருக்கா ? திரும்பி போக ?
ந 4 : பயப்படாதே… முதல்ல இயேசுவைப் பாப்போம்.
ந 1 : இயேசுவை நேரடியா பாக்க போறோமா .. ( ஆச்சரியமாய் துள்ளுகிறான் )
( அப்போது ஒருவர் உற்சாகமாய் ஓடிக்கொண்டே இருக்கிறார்.
ந 6 : வாவ்… வானம் எவ்ளோ அழகா இருக்கு.. ( குதித்து அந்தப் பக்கம் போகிறார் )…..
வாவ்… மரங்களெல்லாம் எவ்ளோ.. அழகு…
( ந1 முதல் 5 தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்… இவன் லூசு போல.. முதல் முதல்ல பாக்கறவனே லூசாவா இருக்கணும் கடவுளே )
வாவ்… பூ எவ்ளோ அழகா இருக்கு.
ந 1 : ஹலோ… சார்… ஹலோ… ஒரு நிமிசம்
( நபர் நின்று திரும்பிப் பார்க்கிறார் )
ந 6 : ஷாலோம் அலைக் கும்
ந 1 : என்னடா.. முஸ்லிம் நாட்டுல வந்துட்டியா ?
ந 5 : நோ..நோ.. ஷலோம் அலைக்கும் ந்னா உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும் ந்னு சொல்ற ஹீப்ரூ வார்த்தை. ஒரு நிமிஷம்… என்னோட வாட்ச் ல லேங்குவேஜ் சிங்க்ரனைசிங் ஆன் பண்றேன். அப்போ அவரு பேசறது நமக்கு புரியும், நாம பேசறது அவருக்கு புரியும்.
ந 1 : என்னென்னவோ சொல்றே டா. அதைப் பண்ணு.
( வாட்சை பார்த்து ஏதோ செய்கிறான் )
ந 2 : சார் வணக்கம்.. நல்லா இருக்கீங்களா ?
ந 6 : நல்லா இருக்கேன். நீங்க யாரு ? உங்களை நான் பாத்ததே இல்லையே ( சிரிக்கிறார் ) ஆமாமா.. நான் தான் யாரையுமே பாத்ததில்லையே.. இப்போ பாக்கிறேனே.. ( மீண்டும் குதிக்கிறார் )
ந 1 : சார் பிளீஸ்… ஒரு ஹெல்ப்.
ந 6 : ஹெல்ப் ஆ ? என் கிட்டேயா ? எனக்கே இப்போ தான் ஹெல்ப் கிடைச்சிருக்கு.. ஹேப்பி.. ஐம்..ஹேப்பி…
ந 2 : சார்.. உங்களுக்கு ஜீஸஸ் தெரியுமா ? அவரை எங்கே பாக்கலாம் ந்னு சொல்றீங்களா ?
ந 6 : ஜீஸஸ் ?? அது யாரு ?? தெரியாதே…
ந 3 : அதான்.. சிலுவைல எல்லாம் அறைஞ்சு…
ந 4 : டேய்.. அதெல்லாம் இன்னும் நடக்கல… இயேசு இப்போ இங்கே மனுஷனா வாழ்ந்திட்டிருக்காரு.. வாயை மூடு..
ந 3 : ஓ..யா. மறந்துட்டேன்.. சாரி..
ந 1 : சார்.. ஜீஸஸ் தெரியாதா ? ரொம்ப பாப்புலரா ஒருத்தர்… மேரியோட பையன்… ஜோசப்அவரோட அப்பா ?
ந 6 : என்ன சொல்றீங்க புரியலையே…
ந 2 : நிறைய அற்புதமெல்லாம் செய்வாரே… முடவனை நடக்க வைப்பாரு… குருடனை பாக்க வைப்பாரு.. இப்படி… ஜீசஸ்… ஜீசஸ்…
ந 6 : அப்படி ஒரு ஆளை தெரியும் அவர் பேரு ஜீசஸ் இல்லை… ஈஸோ… அவரா ?
ந 2 : எஸ் எஸ்… அவரே தான்.. ஈஸோ… ஈஸோ…
ந 6 : அவரு தான் எனக்கு பார்வை குடுத்தாரு.. நான் பாக்கறேன்.. ஜாலி ஜாலி ( குதிக்கிறான் )
ந 2 : ஓ.. அப்படியா. .உங்க பேரு பார்த்திமேயு வா ?
ந 6 : சட்டென நிற்கிறார். என் பேரு எப்படி உங்களுக்குத் தெரியும் ? நீங்க யாரு ? அன்னாவோட ஆட்களா ? பிளீஸ் விட்டுடுங்க… ( பயப்படுகிறார் )’
ந 4 : இல்ல.. இல்ல.. நாங்க ஈஸோ எப்படிப்பட்டவருன்னு பாக்க பிற்காலத்துல இருந்து…. ஐ..மீன்.. தொலை தூரத்துல இருந்து வந்திருக்கோம்…
ந 6 : அப்படியா வாங்க.. வாங்க.. அவரு மாதிரி ஒருத்தரை பாக்கவே முடியாது. அவரோட கண்ணைப் பாத்தா போதும்.. அவ்ளோ சாந்தம். அவரோட பேச்சைக் கேட்டா அவ்ளோ அமைதி. அவர் பக்கத்துல நின்னா அவ்வளோ சந்தோசம்… வாவ்..வாவ்.. ஈஸோ.. ஈஸோ.. தரையில் விழுந்து வணங்குகிறான்.
ந 3 : அவரை நாங்க பாக்க முடியுமா ?
ந 6 : அவரை யாரு வேணும்ன்னாலும், எப்போ வேணும்ன்னாலும் பாக்கலாம்… இப்போ கப்பர் நகூம் பக்கத்துல இருப்பாருன்னு நினைக்கிறேன்.
ந 2 : அவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்…
ந 6 : போய் பாருங்க.. அவரைப் பற்றி சொல்றது, கேக்கறதெல்லாம் ஒண்ணுமே இல்லை.. ஒருவாட்டி பாருங்க.. அப்போ தான் தெரியும்.
( சொல்லிக் கொண்டே ஆனந்தமாய்ப் போகிறார்
காட்சி 3 :
( ந 1 – 5 போகும் வழியில் சிலர் வருகிறார்கள் )
ந 7 : வாவ்.. என்னா பேச்சு.. கேட்டுட்டே இருக்கலாம் போல இருந்துச்சு.
ந 8 : ஆமா..ஆமா.. இப்படி ஒரு பேச்சை நான் கேட்டதே இல்லை.
ந 9 : இதுவரைக்கும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டா பயமா இருக்கும். இப்போதான் கடவுளோட வார்த்தையை கேட்கும்போ ஆனந்தமா இருக்கு. சிலிர்ப்பா இருக்கு. கடவுள் அவ்ளோ அன்பானவரா ?
ந 10 : நமக்கு இந்த பாக்கியம் கிடைச்சது எவ்ளோ பெரிய விஷயம்.
ந 8 : ஆமா..ஆமா… ஆனா, என்னா கூட்டம். பசியே தெரியல…
ந 7 : பசி தெரியாட்டா கூட நல்லா சாப்டோமே
( ந 1 முதல் 5 வருகிறார்கள் )
ந 1 : நீங்க பேசினதை கேட்டிட்டு இருந்தோம். நீங்க ஈஸோ பத்தி தான் பேசறீங்களா ?
ந 7 : ஆமா.. ஆமா.. உங்களுக்கு அவரை தெரியுமா ? நீங்க வந்திருந்தீங்களா ?
ந 2 : இல்லை.. வரலை.. அவர பாக்க தான் போனோம்.
ந 9 : ஓ.. அவர் பத்தி உங்களுக்கு தெரியுமா ? ஒரு ஆட்டுக்குட்டி கதை சொன்னாரு.. ரொம்ப அற்புதம்..
ந 5 : காணாம போன ஆடா ? நூறு ஆடுகள் கிட்டேயிருந்து.
ந 8 : ஆமா..ஆமா.. உங்களுக்கு எப்படி தெரியும்.
ந 2 : நாங்க பைபிள்ல படிச்சிருக்கோம்..
ந 9 : பைபிள்லயா ? அதென்ன பைபிள் ?
ந 1 : அதை விடுங்க.. அவன் ஏதோ ஒளர்றான்… இயேசு எப்படி ? அன்பானவரா ?
ந 8 : என்ன இப்படி கேட்டுட்டே… அவரை மாதிரி அன்பானவரை பாக்கவே முடியாது அவரைப் பாத்தா நாமளும் அவரை மாதிரியே மாறணும்ன்னு தோணும். அவர் பேசறதெல்லாம் செயல்படுத்தணும்ன்னு தோணும். சந்தோசமா இருக்கும். போதனையும் செஞ்சிட்டு.. சாப்பாடும் குடுத்தாரு.. அதுவும்.. ஆயிரக்கணக்கான மக்களுக்கு…
ந 2 : ஓ.. 5 அப்பம், 2 மீனா ?
ந 9 : உங்களுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கு ? எப்படி ? நீங்க உளவாளிகளா ? ரோம அரசு உளவாளிகளா ? சின்ன பிள்ளைங்களா இருக்கீங்க.. ஆனா எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கு.
ந 3 : இல்லை..இல்ல… இன்னொருத்தர் சொன்னாரு.. அதான் நாங்க இயேசுவைப் பாக்க போலாம்ன்னு கிளம்பினோம்.. அவரு எங்கே இருப்பாரு ?
ந 9 : இயேசு.. ??
ந 2 : ஈஸோ.. ஈஸோ..
ந 7 : போங்க.. அவரு பேசிட்டு நைட் மலைக்கு மேல ஏறி போனாரு எங்கே இருப்பாருன்னு தெரியல.
ந 3 : நன்றிங்க
( போகிறார்கள் )
அவர்கள் தொடர்ந்து நடக்கிறார்கள்..
ந 2: ஹேய்.. அங்க பாரு.. பெரிய கூட்டம். கண்டிப்பா இயேசுவா தான் இருக்கும். வா.. ஓடிப் போய் பாப்போம்.
காட்சி 4
( இயேசு போதித்துக் கொண்டிருக்கிறார் , சிலர் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இயேசுவைப் பார்த்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்கள் )
ந 1 : ஹேய்.. இயேசு இயேசு..
ந 2 : ஆமா..இயேசப்பா எவ்ளோ சிம்ளா இருக்காரு…
ந 3 : என்னால மகிழ்ச்சியை கட்டுப்படுத்தவே முடியல..
( அவர்கள் சிரித்து மகிழ்ச்சியாய் குதிக்கிறார்கள் )
அப்போது சிலர் வந்து.
ந 11 : ஏய்.. நீங்கல்லாம் யாரு.. பேசாம இருக்க மாட்டீங்க ? பெரியவங்க பேசிட்டிருக்காங்கல்ல..
ந 12 : ஈஸோ பேசறாரு.. அமைதியா இருங்க.
ந 11 : அவரோட பேச்சைக் கேக்கறதுக்கு எல்லாரும் காத்திட்டிருக்காங்க.. நீங்க வந்து இடைஞ்சல் பண்ணாதீங்க…
ந 12 : இனிமே ஒரு சின்ன சத்தம் கூட வரக்கூடாது.. ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..
( இயேசு பேசுகிறார் )
இயேசு : குழந்தைகளை சத்தம் போடாதீங்க. நீங்க வாங்க.. ( குழந்தையை அழைக்கிறார் )
ஒரு குழந்தையைப் போல நாம மாறணும். அது தான் விண்ணக வாழ்வுக்கு போறதுக்கான ஒரே வழி. கள்ளம் கபடமில்லாம, எப்போதும் தந்தையையே சார்ந்திருக்கும் குழந்தையைப் போல, நாம கடவுளையே சார்ந்து இருக்கணும்.
ஆனா இப்படிப் பட்ட ஒரு சின்ன பிள்ளையை தீய வழியில ஒருத்தன் கூட்டிட்டு போறான்னா அவன் கழுத்துல பாறாங்கல்லைக் கட்டி கடல்ல போடுங்க. அது தான் அவனுக்கு நல்லது. அவ்ளோ பெரிய தவறு அது.
ந 2 : இயேசப்பா.. ஒரே ஒரு கேள்வி.. கேக்கலாமா பிளீஸ் ?.
இயேசு : புன்னகைக்கிறார்
ந 2 : உங்களைப் போல,அன்பு செய்றது எப்படி ?
இயேசு : நீங்க அன்பாவே இருக்கணும். உள்ளத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும். உள்ளத்தில் உள்ளவையே செயல்களாய் வெளியே வரும். எப்படி அன்பு செய்றதுன்னு யோசிச்சா நீங்க செயல்களை பாக்கறீங்க. அன்பாவே இருக்க பழகுங்க. அதுக்கு விண்ணகத் தந்தை உதவுவார். அன்பாவே இருந்தா, எப்படி அன்பு செய்றதுன்னு நீங்க யோசிக்க தேவையில்லை. நீங்க செய்றது எல்லாமே அன்பா தான் வரும்.
ந 2 : நன்றி இயேசப்பா.. வேற என்ன பண்ணணும் இயேசப்பா
இயேசு : பைபிளை படி.. அதுல எல்லாமே இருக்கு. கடவுளோட வார்த்தைகள் உன்கிட்டே டெய்லி பேசும். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு வழிகாட்ட இருக்கார். இவ்ளோ தூரம் வந்து தான் பாக்கணும்ன்னு இல்லை.
ந 11 : ஈஸோ.. பைபிளா ? அதென்ன ? இவங்களை உங்களுக்கு தெரியுமா ? யாரந்த பரிசுத்த ஆவி ?
இயேசு : புன்னகைக்கிறார். நான் சொல்வது இன்னதென்று உங்களுக்கு இப்போ புரியாது. ஆனா இவங்களுக்கு புரியும். போயிட்டு வாங்க. அன்பாவே இருக்கிறதைப் போல அழகான விஷயம் வேற இல்லை.
( நன்றி இயேசப்பா )
அவர்கள் விடைபெறுகிறார்கள்.
ந 1 : இயேசப்பாவைப் பாத்தது ரொம்ப சூப்பர்டா… ஆனா அதை யாருமே நம்ப மாட்டாங்க.
ந 2 : இயேசப்பா சொன்னது ரொம்ப சரிடா. நம்ம கைல பைபிள் இருக்கு. கைல வெண்ணையை வெச்சுட்டு நெய்க்கு அலையற முட்டாளா நாம இருக்கோம்.
ந 3 : இனிமே நான் டோரேமான் பாக்கற நேரத்துல, பைபிள் தான் படிக்க போறேன். அன்பா இருக்கிறதைப் பற்றி நெறைய கத்துக்கப் போறேன்.
ந 4 ; நானும் அப்படித் தான். கடவுளோட வார்த்தையைக் கைல வெச்சுட்டு கடவுளைத் தேடி அலையறது மிகப்பெரிய முட்டாள் தனம் தான்டா…
ந 5 : ஒண்ணு மட்டும் புரிஞ்சுதுடா எனக்கு. இயேசுவைப் போல அன்பு செய்றதுங்கறது அன்பாகவே இருக்கிறது தான். ஏமிகார்மைக்கேல் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது. ஒரு டம்ளர் நிறைய சர்க்கரைத் தண்ணி இருந்தா சிந்தறதெல்லாம் இனிப்பு நீரா தான் இருக்கும். அதே போல தான், நாம அன்பாகவே இருந்தா செய்றதெல்லாம் அன்பா தான் இருக்கும். நாம கனிகளில் கவனம் செலுத்தறதை விட, மரத்துல கவனம் செலுத்துவோம்.
ந 3 : சூப்பர் டா.. சீக்கிரம் வீட்டுக்கு போலாம் டா..மம்மி தேடுவாங்க.
( மீண்டும் வாட்ச் மூலம் நிகழ்காலத்துக்கு வருகிறார்கள் )
காட்சி 5 :
( தூங்கிக் கொண்டிருக்கும் ந1 ஐ எழுப்புறார் அம்மா )
அம்மா : டேய் .. எழும்புடா.. விடிஞ்சப்புறம் என்ன தூக்கம் உனக்கு.
ந 1 : அம்மா… நான்..( சுற்றும் முற்றும் பார்க்கிறான் )
அம்மா : என்னடா பாக்கறே ?
ந 1 : கையிலிருக்கும் வாட்சைப் பார்க்கிறான்
அம்மா : வாட்சை ஏண்டா பாக்கறே.. அதான் ஓடாத ஓட்ட வாச்சாச்சே. கிளாக்கைப் பாரு மணி ஏழு ஆச்சு.
ந 1 : சாரிம்மா.. தூங்கிட்டேன்.
அம்மா : சரி சரி.. வா.. டீ குடி.
ந 1 : அம்மா. என் பைபிள் எங்கேம்மா ?
அம்மா ; என்னடா.. அதிசயமா இருக்கு ? பைபிள் எல்லாம் கேக்கறே.
ந 1 : இனிமே நான் பைபிளை ரொம்ப நேரம் படிக்க போறேன்மா.. இவ்ளோ நாள் அதை மிஸ் பண்ணிட்டேன்.
அம்மா : புன்னகைக்கிறான். நன்றி இயேசப்பா.. இப்பவாச்சும் இந்த பையனுக்கு நல்ல புத்தியைக் குடுத்தீங்களே..
ந 1 : தோட்டத்துல ஏதோ பண்ணணும்ன்னு சொன்னீங்களேம்மா.. நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன். பண்ணிடலாம்.
( அம்மா புரியாமல் பார்க்கிறாள். )
பின்குரல் :
அன்பு செய்வது முதல் நிலை
அன்பாகவே இருப்பது உயர் நிலை.
அன்பாகவே இருக்க பழகுவோம். இறைவார்த்தையும், தூய ஆவியானவரும் நமக்கு துணையாய் இருப்பார்கள்.