எதிரே வருவதெல்லாம்,
எதிரியல்ல
செங்கடல்
எதிரே வந்ததால் தான்
இரண்டாகப் பிரிந்தது.
யோர்தான்
குறுக்கே வந்ததால் தான்
குறுக்கு வெட்டுத்
தோற்றம் பெற்றது.
எதிரே வருவதெல்லாம்
எதிரியல்ல
சாதாரண வெற்றியை
அசாதாரணமாக்கும்
காரணிகள்.
எரிகோ மதில்
இல்லையெனில்
ஆராவாரமும்
ஆண்டவரின் ஆயுதமென்பது
புரிந்திருக்குமா ?
நாமான்
மட்டும் இல்லையென்றால்
நீர் கூட
நோய் தீர்க்குமென
விளங்கியிருக்குமா ?
சிலுவை மட்டும்
இல்லையென்றால்
பூட்டிய கல்லறையும்
புரட்டப்படுமென
புரிந்திருக்குமா ?
எதிரே வருவதெல்லாம்
எதிரியல்ல.
இறைவன் யாரென்பதை
நமக்கே உணர்த்தும்
உதிரிகள்
• சேவியர்