டிசைப்பல்ஸ்

1. இயேசு “என்னைப் பின்பற்றி வா” என்றார். பவுல், “நான் இயேசுவைப் பின்பற்றியதைப் போல நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்” என்றார். இயேசு சொன்னது, பின்பற்ற ! அதுவே முதன்மையானது.
2. கனிகளினால் உங்களை அறிந்து கொள்வார்கள் என்றார் இயேசு. அவர் எதிர்பார்ப்பது கனிகொடுக்கும் வாழ்க்கையை. வார்த்தைகளை அல்ல.
3. உலகெங்கும் சென்று எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள் என்றார் இயேசு. விதைத்துக் கொண்டே இருப்பதில் பயனில்லை, அது கனிகொடுக்கிறதா என்பதைப் பார்ப்பதே சீஷத்துவப் பணி.
4. இறுதித் தீர்வை நாளில் இயேசு சொன்னதை ரிவைன்ட் பண்ணி பாருங்கள். அதில் எங்கும் “பிரசங்கம்” இடம்பெறவில்லை. செயல்களே இடம்பெற்றிருக்கின்றன. அதுவே டிசைப்பல்சிப்
5. என்னை நோக்கி ஆண்டவரே ஆண்டவரே என்று சொல்பவனெல்லாம் விண்ணகம் சேர்வதில்லை. தந்தையின் விருப்பப்படி “செய்பவனே” சேர்வான் என்றார் இயேசு. வெறும் வார்த்தைகளால் அறிவித்தல் பயனில்லை
6. உங்களை மனிதரைப் பிடிப்போராக்குவேன் என்று தான் இயேசு சொன்னார். அதுவே அவரத் விருப்பம். மனிதருக்கு உரைப்போராக்குவேன் என்றா சொன்னார்.
7. என் ஆடுகளை மேய், என் ஆடுகளைக் கண்காணி, என் ஆடுகளை பராமரி என்று தான் இயேசு சொன்னார். என் ஆடுகளுக்கு பாடம் சொல்லிக் கொடு என்று சொல்லவில்லை.
8. திருச்சட்டத்தை இரண்டு கட்டளையாக்கியபோது இயேசு என்ன சொன்னார் ? கடவுளை நேசி, மனிதனை நேசி. அது தான் அடிப்படை. கடவுளை பூஜி, மனிதனுக்கு போதி என்று சொல்லவில்லை.
9. தான் நலமாக்கிய மனிதர்களிடம் இயேசு பொதுவாய் சொல்லும் வார்த்தை, “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்” என்பது தான். தொழுநோயாளிகள் நலம்பெற்ற போது ‘போய் காணிக்கை செலுத்து’ என்றார். செல்வந்தனான இளைஞனிடம் எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு என்றார். செயல்களே பிரதானம்.
10. அதெல்லாம் இருக்கட்டும். இயேசுவின் மிகப்பெரிய போதனையே மலைப்பிரசங்கம் தான். அதில் எங்கே நற்செய்தி அறிவித்தல் இருக்கிறது. அதில் இருப்பதெல்லாம் சீடராகும் பணி தான்.
11. இயேசு ஒரே ஒரு இடத்தில் தான் “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மார்க் 16:15)” என்கிறார். வரலாற்றுத் தகவல்களின் படி மார்க் 16ம் அதிகாரம் 9 முதல் 20 வரையிலான வசனங்கள் சில முக்கியமற்ற கையெழுத்துப் படிகளில் மட்டுமே காணப்படுகிறது.
12. ஒரு விஷயம் முக்கியம் எனக் கருதினால் இயேசு அதை திரும்பத் திரும்பச் சொல்வார். அஞ்சாதீர்கள் என்பதைக் கூட பலமுறை சொன்னவர் அவர். சீடராவதன் தேவையை பல இடங்களில் சொன்னவர் ஒரே ஒரு இடத்தில் மட்டும் நற்செய்தியை அறிவிக்கச் சொன்னார். இதிலிருந்தே புரிந்திருக்கும்…
13. இயேசு தனது பணிநாட்களில் பன்னிரண்டு பேரைத் தெரிந்தெடுத்தார். அவர்களோடு வாழ்ந்து அவர்களை சீடர்களாக்கினார். அவர்களை கூப்பிட்டு நாலு கிளாஸ் எடுத்துட்டு அனுப்பல. இயேசுவைப் போல வாழவேண்டுமெனில் அவர் காட்டிய டிசைப்பல்ஷிப்பை நாம் செயல்படுத்த வேண்டும்.
14. பவுலின் பயணங்களைப் பார்த்தால் அவர் எல்லா இடங்களிலும் தங்கி போதித்து மக்களை வழிநடத்திக் கொண்டிருந்தார். சீடர்களாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். அவர் சும்மா துண்டுப்பிரசுரம் வினியோகித்துக் கொண்டே நடக்கவில்லை.
15. இயேசுவின் போதனையான அன்பு, போதனையில் வரவே வராது. அது செயலில் தான் வரும். அது சீடராக மாறுவதில் தான் வரும்.
16. தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையைச் சுமந்து கொண்டு வருவது சீடத்துவம். வெறும் வார்த்தையைச் சுமப்பதில் அர்த்தமில்லை
நற்செய்தி அறிவித்தலே முக்கியம்.

1. இது இயேசு கொடுத்த கட்டளை. உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்பது. அதைத் தான் செய்கிறோம்.
2. இன்றைய டிஜிடல் உலகில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், யூடியூப் நிகழ்ச்சிகள், பத்திரிகைகள் எல்லாம் நற்செய்தி அறிவிக்கும் பணியைத் தான் செய்கின்றன. சீடர்களாக மாற்றும் பணியே முக்கியமென்றால் இவற்றையெல்லாம் இழுத்து மூட வேண்டியது தான்.
3. இயேசு திரளான மக்களைக் கண்டு பிரசங்கம் பண்ணினார் என்பதை எத்தனை இடங்களில் வாசிக்கிறோம். மலையில் இருந்து பிரசங்கம் பண்ணினார், படகில் இருந்து பிரசங்கம் பண்ணினார், நடந்து கொண்டே பிரசங்கம் பண்ணினார், ஏன் சிலுவையில் இருந்து கூட மன்னிப்பின் பிரசங்கம் பண்ணினார். இவையெல்லாம் நற்செய்தி அறிவித்தல்தானே தவிர சீடத்துவ பணி அல்ல.
4. ஒருவனுக்கு வாசலைக் காட்ட முடியுமே தவிர, அவனை அதற்குள் வலுக்கட்டாயமாய்த் திணிக்க முடியாது. நற்செய்தி அறிவிப்பது ஒருவருக்கு வாசலைக் காட்டுவது போல. நற்செய்தி அறிவித்தல் என்பது வயலில் விதைப்பதைப் போல. அதுவே அடிப்படை.
5. நானே வழியும் சத்தியமும் ஜீவனும் என்றார் இயேசு. என்வழியாய் அன்றி யாரும் தந்தையிடம் வருவதில்லை என்றார். அந்த செய்தியை அறிவிக்காமல் எப்படிப் புரிந்து கொள்வது ?
6. இதை இயேசு மட்டும் கட்டளையாய்க் கொடுக்கவில்லை, அப்போஸ்தலர்களும் கட்டளையிடுகின்றனர் ( 2 திமோ 4,5 ல் ). அந்த நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் போதகனாகவும் நான் ஏற்படுத்தப்பட்டுள்ளேன் என்கிறார் பவுல்.
7. சோர்ந்து போயிருப்பவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்க டிசைப்பல்ஷிப் அல்ல, எவாஞ்சலிசமே வேண்டும். அவர்களுடைய சோகத்தையும், கவலையையும் துடைக்க இயேசுவின் அன்பு வார்த்தைகளே வேண்டும்.
8. எங்கே இரண்டு மூன்று பேர் என் பெயரால் கூடி வருகிறார்களோ அவர்கள் மத்தியில் நான் இருப்பேன் என்றார் இயேசு. தனியே சீடனாக இருப்பதை விட, முக்கியம் நம்மிடையே இயேசுவை இருக்க வைப்பது. அதற்கு எவாஞ்சலிசம் தேவையாகிறது.
9. இறைவார்த்தைகளின் பொருளை விளக்க வேண்டுமெனில் எவாஞ்சலிசமே தேவை. அது இல்லையே மறைபொருளின் உண்மைகள் மறைந்தே கிடக்கும்.
10. உலக மாந்தர்களையெல்லாம் இணைப்பது நற்செய்தி அறிவித்தல் தான்.
11. பல வேளைகளில் இயேசு யார் என்பதை மக்களுக்குப் புரியவைக்க வேண்டுமெனில் நமக்கு நற்செய்தி அறிவித்தல் தான் தேவைப்படுகிறது. சீடனாக வாழ்வதை வைத்து நற்செய்தியைப் புரிந்து கொள்ள முடியாது.
12. விண்ணக அரசு நெருங்கிவிட்டது என்பதை அறிவியுங்கள் என்றார் இயேசு. அதை அறிவிப்பதே நமது தலையாய பணி.
13. சிறையில், மருத்துவமனைகளிலெல்லாம் நற்செய்தி அறிவித்தல் நடக்கிறது. மக்கள் மனம் திரும்புகிறார்கள். அங்கே போய் சீடத்துவத்தை கத்து கொடுக்க முடியுமா ?
14. சென்டினல் தீவுக்கு ஒருத்தர் போனாரே.. அவரோட அர்ப்பணிப்புக்கு காரணம் எவாஞ்சலிசம்
15. ஆன்மாவைக் கொல்வோருக்கு அஞ்சுங்கள் என்று சொன்னார் இயேசு. அதை பிறருக்கு எபப்டி அறிவிப்பது ? நரகம் பற்றி வாழ்ந்தா காட்ட முடியும். அறிவிக்க தான் முடியும்.
16. பிறரன்பை எப்படி வெளிப்படுத்துவது ? அவர்கள் நரகம் போகாமல் காத்துக் கொள்வதில் தானே ? அதற்கு நாம் நற்செய்தி தானே அறிவிக்க வேண்டும்
17. நன்மை செய்யத் தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் பாவம். மக்களை சுவர்க்கத்தில் சேர்க்கும் வழி தெரிந்திருந்தும் அதை சொல்லாமல் இருப்பது பாவம்.
18. நற்செய்தி அறிவிக்க வேண்டுமெனில் நாம் முதலில் நற்செய்தியை அறிய வேண்டும். ஒரு வகையில் நற்செய்தி அறிவித்தல் நமது நற்செய்தி ஆர்வத்தை அதிகரித்து நாம் நற்செய்தி கற்க வழிவகுக்கும்.
19. பைபிளே எழுதப்படாமல்,நற்செய்தியே அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று நம்மில் யாருக்காவது தெரிந்திருக்குமா ? சீஷத்துவம் எத்தனை நூற்றாண்டு கடந்து நமக்கு விளக்கும் ?
Like this:
Like Loading...