மாணவி : ஏண்டா… சாப்பிடலையா
மாணவன் : இல்ல.. இன்னிக்கு நான் சாப்பிடறதில்லை…
மாணவி : இண்ணிக்கு என்ன ?
மா : அ..அ..அது அமாவாசை.. இன்னிக்கு அமாவாசை… நான் அமாவாசைக்கு சாப்பிடறதில்லை
மாணவி : டேய்.. அமாவாசை முடிஞ்சு மூணு நாளாச்சு
மா : ஓ…. அ..அப்போ பௌர்ணமி.. பௌர்ணமிக்கும் சாப்ட மாட்டேன்…
மாணவி : பௌர்ணமிக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு
மா : அப்படியா… இ…இன்னிக்கு… செவ்வாய் இல்ல ?
மாணவி : இல்ல.. புதன்… என்னாச்சு ? சாப்பாடு எடுத்துட்டு வரலையா ?
மா : ( மெதுவாக ) இல்ல…
மாணவி : ஏன் ? மறந்துட்டியா ?
மா : பசியை மறக்க முடியுமா ? வீட்ல சாப்பாடு இல்லை.. அதான் எடுத்துட்டு வரலை
மாணவி ( சோகமாய் ) : இதுக்கு போய் ஏன் வருத்தப்படறே.. வா.. நாம ஷேர் பண்ணுவோம்
மா : வேணாம் வேணாம்… நீ சாப்பிடு
மாணவி : பரவாயில்லப்பா.. என்ன இருக்கோ, அதை ஷேர் பண்ணுவோம்… அம்மா கொஞ்சம் நல்லாவே சமைப்பாங்க… பயப்படாதே….
மா : பட்டினி கிடக்கிறவனுக்கு பாவக்காயும், பாயாசம் மாதிரி தான்.
மாணவி : ஹி ஹி.. இனிமே டெய்லி நாம ஷேர் பண்ணி சாப்பிடலாம்…
மா : உனக்கெதுக்கு கஷ்டம்.பரவாயில்ல… பழகிடுச்சு….
மாணவி : அடப்பாவி.. இது கஷ்டமா ? கஷ்டம்ன்னா என்ன தெரியுமா ? சிலுவையை சுமந்து நமக்காக ஒருத்தர் மரித்தாரே.. அது கஷ்டம்.. இதெல்லாம் என்னப்பா
மா : யூ மீன் ஜீஸஸ்
மாணவி : யா… அவரு அவரோட உடலையே பகிர்ந்து கொடுத்தாரு, நான் என் உணவை தானே பகிர்ந்து கொடுக்கிறேன். இட்ஸ் கிறிஸ்மஸ்
மா : கிறிஸ்மஸா
மாணவி : யா.. கிறிஸ்மஸ் ஈஸ் பகிர்தல்.. கடவுள் தன் மகனை நமக்கு கொடுத்தாரு… நாம இருக்கிறதை இல்லாதவங்க கூட பகிர்ந்து கொள்ளணூம்
மா ; தேங்க்யூ… இட் மீன்ஸ் எ லாட்… ஐ வில் ரிமம்பர் யுவர் ஹெல்ப்
மாணவி : நோ..நோ.. ஜஸ்ட் ரிமம்பர் கிறிஸ்மஸ்… இட்ஸ் ஷேரிங் காட்ஸ் லவ். நீயும் இப்படியே ஒரு காலத்துல அடுத்தவங்களுக்கு அன்பு காட்டு.. தேட்ஸ் இட்.
மா : யா… ஐ லைக் திஸ் கிறிஸ்மஸ்.