Posted in Sunday School, skit

SKIT : மன்னிப்பு

மன்னிப்பு

காட்சி 1

( அதிகாரி & மேனேஜர் )

அதி : எல்லாம் ரெடி தானே ?

மே : ரெடி ஆயிட்டிருக்கு மேம்.

அதி : இது ரொம்ப. முக்கியமான புரபோசல். நம்ம கம்பெனியோட ரெவன்யூவை நல்லா பூஸ்ட் பண்ணும். சோ கவனமா பண்ணுங்க

மே : எல்லாம் பண்ணிட்டிருக்கேன் மேம். கவலையே படாதீங்க

அதி : எல்லா டிப்பார்ட்மெண்டோட சைன் ஆஃப் வாங்கிடுங்க… இதுல காம்பெட்டிடரை விட நாம பெட்டரா பண்ணியே ஆகணும்

மே : கண்டிப்பா மேம்.. எல்லாருக்கும் டீட்டெயில்ஸ் குடுத்தாச்சு, ரிவ்யூ மீட்டிங்க்ஸ் வெச்சாச்சு… ஐ வில் டேக் கேர்

அதி : வெரி குட்.. ஃப்ரைடே ஈவ்னிங் 5 பி.எம் தான் கட் ஆஃப், நீங்க பிரைடே மதியமே அனுப்பிடுங்க.. எதுக்கு லாஸ்ட் மினிட் ஹரிபரி…

மே : கண்டிப்பா மேம்.

காட்சி 2

( மேனேஜர் போனில் )

மே : ஹலோ… மார்க்… அந்த finance நம்பர்ஸ் நீங்க இன்னும் கன்ஃபர்ம் பண்ணலையே….. யா..யா… அந்த புரபோசல் தான்… இன்னும் ரெண்டு நாள்ல சப்மிட் பண்ணணும்.. இன்னிக்கே குளோஸ் பண்ணிடுங்க

( அடுத்த போன் ) 

மே : ஹலோ முத்து… அந்த சொலூஷன் பாத்துட்டீங்கல்ல… பெஸ்டா இருக்கணும்…. நாம ரிஜக்ட் ஆயிட கூடாது.. மெயினா performance, ஸ்கேலபிலிடி எல்லாம் பாத்துக்கோங்க.

( அடுத்த போன் )

மே : ஹலோ… தேங்க்யூ.. நீங்க ரிஸ்க் அப்ரூவல் குடுத்துட்டீங்க…. பட்.. வாண்டட் டு செக்.. எல்லாம் சரி தானே…. Proposal is good to go in risk perspective right ? 

( போனில் பலருடன் பேசுகிறார் )

காட்சி 3

( மேனேஜர் & ஒரு பணியாளர் )

பணி : சொல்லுங்க சார்..

மே : எல்லாம் எப்படி போயிட்டிருக்கு ?

பணி : ஃபெஸ்டிவல் சீசன் வருது.. எல்லாருமே ஷாப்பிங் ஷாப்பிங்ன்னு பிஸியாயிட்டாங்க.. நம்ம ஆப் ல சில பிரச்சினைகள் வந்திட்டிருக்கு.. கால் வர வர எல்லாத்தையும் பிக்ஸ் பண்றோம்

மே : வெரி குட்.. ரொம்ப கேர்புல்லா இருங்க.. ஒரு சர்வீஸ் ரிவ்கஸ்ட் கூட பாக்கி இருக்கக் கூடாது.. டக் டக் ந்னு முடிச்சு குடுக்கணும்.

பணி : டீம் வர்க் பண்ணிட்டே இருக்காங்க சார்.. என்னென்ன புரடக்‌ஷன் டிஃபெக்ட் இருக்கோ உடனுக்குடன் பிக்ஸ் பண்றோம்.

மே : பிக்ஸ் பண்றது மட்டுமல்ல, எவ்ளோ குவிக்கா பண்றீங்ங்கறதும் முக்கியம். சிவியாரிடி 1 & 2 டிஃபெக்ட்னா மேக்சிமம் 2 ஹவர்ஸ் தான். அதுக்குள்ள ஃபிக்ஸ் போயாவணும்.. 

பணி : ஓக்கே சார்

மே : நைட் .. டே.. ஃபெஸ்டிவெல் அது இதுன்னு எத்த சாக்குபோக்கும் ஐ டோண்ட் வாண்ட் டு ஹியர்

பணி : ஓக்கே சார்… 

காட்சி 4

( மேனேஜர் & போன் )

மே : ஹாய்.. சொல்லுப்பா… 

போன் : டேய்.. இன்னிகு ஃப்ரைடே !!  ஈவ்னிங் நமக்கு கெட் டுகதர் & மூவி பிளான் இருக்கு சொதப்பிடாதே..

மே : இல்லடா.. நான் ஒரு 5 மணிக்கெல்லாம் வந்துடுவேன்

போன் : என்னடா 5 மணி, ஒரு மூணு மணிக்கு வா… கரெக்டா இருக்கும்.

மே : இல்லடா..ஒரு புரபோசல் இருக்கு.. எழவு.. அத வேற ரிவ்யூ பண்ணி சப்மிட் பண்ணணும்.

போன் : மெயில்ல போட்டு ஒரு தட்டு தட்டினா போயிட போவுது.. இதுல என்னடா… லேட்

மே : ஆமா, சொல்றது ஈசி.. செஞ்சு பாரு அப்போ தெரியும் கஷ்டம்.

போன் : சரி..சரி… லெக்சர் அடிக்காதே.. சீக்கிரம் வந்து சேரு

மே : ஷுவர் டா

காட்சி 5

( மேனேஜர் போனில் எதையோ நோண்டுகிறார், லேப்டாப்பில் டைப் அடிக்கிறார் )

மே : (மனதுக்குள் ) எல்லாரும் எல்லாம் குடுத்துட்டாங்கன்னு நினைக்கிறேன்…. 

(கொட்டாவி விடுகிறார்,  வீடியோ பார்க்கிறார் )

( போன் அடிக்கிறது )

போன் : டேய் மணி அஞ்சாவ போவுது இன்னும் கிளம்பலையா ?

மே : ஓ.. கிளம்பறேன்டா.. அந்த புரபோசல் மெயில் மட்டும் சப்மிட் பண்ணிட்டு கிளம்பறேன்.

போன் : டேய்.. நொண்டி சாக்கு சொல்லாம வா..

மே : இதோ வந்துட்டேண்டா… 

( மெயிலை அனுப்புகிறார், செண்ட்ட்…. ம்ம்ம்.. கிளம்புவோம்….லேப்டாப்பை மூடி வைக்கிறார் )

காட்சி 6

மறுநாள்

( மேனேஜர் & அதிகாரி )

மே : மேம்.. அவசரமா வர சொன்னீங்க

அ : வாட் த ஹெல் ஹேப்பண்ட்.. ஏன் புரபோசல் போகல நேத்திக்கு, 

மே : மேம்.. நா.. நான் அனுப்பிட்டேனே

அ : என்ன அனுப்பினீங்க ? எனக்கும் காப்பி வரல.. என்னை மட்டும் மிஸ் பண்ணியிருப்பீங்கன்னு நினைச்சேன்.

மே : மேம்.. லெட் மி செக்….

அ : ஒரு மெயில் அனுப்பினா போச்சா, டெலிவரி கன்ஃபர்மேஷன் வந்துச்சா பாக்க மாட்டீங்களா ? எவ்ளோ பெரிய வேலை இது

மே : மேம்.. லெட் மி செக் இன் போன்..

அ : என்ன செக் பண்ண போறீங்க.. நம்ம புரபோசல் போகல வி ஆர் அவுட் ந்னு மெயிலே வந்தாச்சு எனக்கு

மே : மே..மேம் ( அதிர்ச்சியாய் ) நோ.. நா.. நான் அஞ்சு மணிக்கு அனுப்பிட்டு தான் பிரண்ட்ஸை பாக்க போனேன்.

அ : ஆமா. உங்களுக்கு பிரண்ட்ஸ் தான் முக்கியம். மதியமே அனுப்ப சொன்னேனே… வொய் லேட் ? எதுக்கு லாஸ்ட் மினிட் வரைக்கும் வெயிட் பண்ணினீங்க.

மே : மே..மேம்…

 டெலிவரி ஃபெயிலியர் வந்திருக்கு.. ஐ.. ஐ திங்க் த அட்டாச்மெண்ட் சைஸ் ஈஸ் பிக்.

அ : யூ ஆர் ஃபயர்ட் … இனிமே உங்களுக்கு இங்கே வேலையில்லை.. யூ மே கோ..

மே : மேம்..மே..மேம்.. ஐம் எக்ஸ்றீம்லி சாரி.. ஐ நோ இட்ஸ் மை ஃபால்ட்

அ : டூ லேட்..டூ லேட்… ஐ காண்ட் ஹெல்ப் இட். நான் என் மேனேஜ்மெண்டுக்கு பதில் சொல்லணும்

மே : மேம்.. இந்த வேலை இல்லேன்னா குடும்பமே பட்டினி ஆயிடும் மேம்.. பிளீஸ் மேம்

அ : அதெல்லாம் வேலை செய்யும்போ யோசிக்கணும்.. பொறுப்பை வாங்கறது பெரிசுல்ல, முடிக்கிறது தான் பெருசு .. யூ ஆர் அவுட்… தட்ஸ் மை மிட்டிகேஷன் பிளான் டு லீடர்ஷிப் டீம்

மே : மேம்.. மேம்.. பிளீஸ்.. ஹெல்ப் பண்ணுங்க மேம்.. என் அம்மா.. அம்மா படுத்த படுக்கையா கிடக்கறவங்க.. அவங்களை நான் தான் பாத்துக்கறேன். இந்த வேலை இல்லேன்னா மெடிசின் வாங்க கூட முடியாது.. அம்மாவை காப்பாத்த கூட முடியாது

அ : சே.. ஓவரா செண்டிமெண்ட் போடறே…. சரி சரி போ.. ஐ வில் செண்ட் யூ எ மெமோ…ஐ டோண்ட நோ… ஹௌ டு கன்வின்ஸ் த மேனேஜ்மெண்ட்… 

மே : ஐம் எக்ஸ்றீம்லி சாரி மேம்.. இனிமே இப்படி நடக்காம பாத்துக்கறேன் மேம்.

அ :சரி..சரி.. யூ மே கோ… திங்க் வாட் கேன் பி டன்.

காட்சி 7

( மேனேஜர் கடுப்பாக உட்கார்ந்திருக்கிறார் )

மே : சே.. நம்ம மானம் மரியாதை எல்லாம் போச்சு… பிச்சை எடுக்கிற மாதிரி பேச வேண்டியதா போச்சு. 

( போன் வருகிறது )

( கோபமாக போனில் கவனிக்கிறார் )

( போன் பண்ணுகிறார் )

போன் : ஹலோ… என்ன நம்ம ஆப்ல பேமெண்ட் கேட்வே டவுனாமே

பணி : ஆமா சார்… சம் பிராப்ளம் வித் த தர்ட் பார்ட்டி.. பாத்திட்டிருக்கேன்.

போன் : என்ன பாத்திட்டிருக்கீங்க… டூ அவர்ஸா டவுன் டைமா… 

பணி : எஸ் சார். பட் கஸ்டமர் கேன் யூஸ் அதர் ஆப்ஷன்.. ஒன்லி த யூபிஐ…..

போன் : எந்த சால்ஜாப்பும் வேண்டாம். மூட்டையை கட்டிட்டு கிளம்புங்க. நாளைல இருந்து வேலைக்கே வரவேண்டாம்.

பணி : சார்..சார்..

போன் : நீ காண்றாக்ட் எம்ப்ளாயி தானே..பொறுப்பில்ல, 2 ஹவர்ஸ் ல பிக்ஸ் பண்ணணுமா இல்லையா… நீ போ.. நான் வேற ஆள வெச்சு பாத்துக்கறேன்.

பணி : சார்.. சார்.. நாங்க ரொம்ப ஏழைங்க சார்.. இந்த வேலை இல்லேன்னா.. எங்களால ஒண்ணுமே பண்ண முடியாது சார்.

போன் : அதெல்லாம் உன் வீடு.. உன் பாடு.. நீ முதல்ல கிளம்பு

பணி : சார்.. என் அம்மா வேற உடம்பு சரியில்லாம படுத்த படுக்கையா…

போன் : படுத்த படுக்கையா இருந்தா தூக்கி வெளியே போடு.. எனக்கு கம்பெனி தான் முக்கியம்.. யூ கேன் கோ…

பணி : சார்.. சார்

போன் : யூ ஷுட் பி அவுட் இன் டென் மினிட்ஸ்.. நான் பாத்துக்கறேன்

காட்சி 8

( அதிகாரி & பணி – போனில் )

அதி : ஹலோ.. என்னம்மா.. எங்கே இருக்கே

போ : வீட்ல இருக்கேன் மேம்

அதி : வீட்லயா… புரடக்‌ஷன் இஸ்யூ ஓடிட்டிருக்கு.. யூ ஆர் சப்போஸ்ட் டு பிக்ஸ் இட்

போ : பிக்ஸ் குடுக்க லேட் ஆச்சு மேம்.. ஐ எக்ப்ளைண்ட் டு மேனேஜர்… பட் அவரு கேக்கற நிலமைல இல்ல.. என்ன வேலையை விட்டு தூக்கிட்டார்

அதி : வாட்.. வேலையை விட்டு தூக்கிட்டாரா ?

போ : ஆமா மேம்.. இந்த இஷ்யூல நமக்கு ரெவன்யூ லாஸ் இல்ல மேம்.. வி ஹேவ் ஆல்டர்நேட் பேமெண்ட் மெதேட்..   

அதி : அதெல்லாம் சொல்ல வேண்டியது தானே

போ : சொன்னேன் மேம்… மெயில் கூட போட்டேன்… அவரு எதையும் கேக்கற நிலமைல இல்ல மேம்.. கோபமா இருந்தாரு.

அதி : ம்ம்.. சரி, நீ உடனே ஆபீஸ் வா.. நான் பாத்துக்கறேன்

காட்சி 9

( அதி & மே )

அதி : என்னப்பா.. மல்லிகாவை வேலைக்கு வரவேணாம்னு சொன்னீங்களா ?

மே : யா மேம்… ஷி வாஸ் நாட் டூயிங் ஹர் ஜாப்

அதி :  இந்த பிரச்சினையால என்ன ரெவன்யூ லாஸ் ?

மே : அது.. அது பெருசா ஒண்ணும் இல்ல மேம்.. நீட் டு அஸெஸ்

அதி : நீங்க மல்டி மில்லியன் புரபோசலை சொதப்பி கம்பெனியோட கனவையே உடைச்சிட்டீங்க. உங்களையே நான் மன்னிச்சு விட்டேன்.. ஆஃப்றால் ஒரு சின்ன மிஸ்டேக் அதுக்கே அவங்களை வேலையை விட்டு தூக்கியிருக்கீங்க 

மே : அ..அது வந்து மேம்.. 

அதி : ஐ நெவர் தாட் யூ ஆர் சோ டூத்லெஸ்… இப்போ சொல்றேன்.. யூ ஆர் அவுட். அது மட்டும் இல்லை, இந்த லாஸுக்கு, ஐ ஆம் கோயிங் டு கிவ் எ கம்ப்ளெயிண்ட். கூடவே ஹைச்.ஆர் ரிக்கார்ட்ல உன்னை பிளாக்லிஸ்ட் பண்றேன்.. இனிமே நீ எங்கயுமே வேலை பாக்க முடியாது… 

மே : மே..மேம்.. பிளீஸ்..பிளீஸ்

அதி : யூ கேன் கோ.. உன்னோட போஸ்டுக்கு நான் மல்லிகாவையே போடப் போறேன். மன்னிக்கக் கத்துக்காதவன் வாழ்க்கைல எதையுமே கத்துக்க முடியாது.

மே : மேம்.. பிளீஸ்.

அதி : வாய்ப்பு தொடர்ந்து வந்துட்டே இருக்காது சார்.. நீங்க குடுத்த வாய்ப்பை  வீணடிச்சிட்டீங்க… கிளம்புங்க காத்து வரட்டும். 

மே : மேம்.. ஒரே ஒரு லாஸ்ட் சான்ஸ்

அதி : அடுத்தவங்க மேல கரிசனை இல்லாதவங்க மேல கம்பெனியும் கரிசனை காட்டாது. நீங்க போலாம்… எனக்கு வேலை இருக்கு. 

*

Posted in Sunday School

கிறிஸ்மஸை அழிப்போம் ( SKIT )

கிறிஸ்மஸைஅழிப்போம்

*

காட்சி 1

( சதி ஆலோசனை மையம் )

தலைவர் : இந்த கூட்டத்தை நான் ஏன் அவசரமா கூட்டியிருக்கேன் தெரியுமா ?

நபர் 1 : சொல்லுங்க தலைவரே, ரொம்ப ரொம்ப சீரியஸான விஷயம் இல்லேன்னா நீங்க இந்த ரகசியக் கூட்டத்தை கூட்ட மாட்டீங்க

தலைவர் : ஆமா, ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். 

நபர் 2 : சொல்லுங்க தலைவரே

தலைவர் : இந்த கிறிஸ்தவ மதம் உலகம் பூரா ஒரு புற்று நோய் மாதிரி பரவிடுச்சு. அதை வேரோட புடுங்கணும்.

நபர் 3 : ஆமா தலைவரே. உண்மை தான். நினைச்சதை விட அதிகமா கிளைவிட்டு அது பரவிட்டே இருக்கு

நபர் 1 : பிரச்சினை என்னன்னா தலைவரே… இந்த கிறிஸ்டியன்ஸை மட்டும் அடிச்சாலும் தாங்கறாங்க, திட்டினாலும் தாங்கறாங்க, அசிங்கப்படுத்தினாலும் தாங்கிடறாங்க.. இவங்களை எப்படி அழிக்கிறது

நபர் 2 : வயல்ல ஒண்ணிரண்டு களைன்னா புடுங்கிடலாம்… ஆனா உலகம் முழுக்க பரவிடுச்சே என்ன பண்ண ?

தலைவர் : கிறிஸ்தவர்களை அடியோட அழிக்க ஒரு வழி இருக்கு

நபர் 1 : என்ன தலைவரே.. உலகம் முழுக்க பரவிட்டாங்க, எப்படி அழிப்பீங்க. அதுவும் பாதி பேர் சீக்ரெட் கிறிஸ்டியன்ஸா வேற இருக்கிறாங்க

தலைவர் : கிறிஸ்டியன்ஸை அழிக்க ஒரே வழி, இயேசுவை அழிக்கிறது தான்.

நபர் 2 : தலைவரே.. இயேசுவை அழிச்சதால தான் இவ்ளோ பிரச்சினையும். அவரை அன்னிக்கு வாழவிட்டிருந்தா வயசாகி செத்து போயிருப்பாரு. அவரை அந்த மக்கள் கொன்னாங்க, அவர் உயிர்த்தாரு, கிறிஸ்தவர் வளந்துடுச்சு.

தலைவர் : எஸ்… இப்பவும் சொல்றேன்.. கிறிஸ்தவத்தை அழிக்க ஒரே வழி கிறிஸ்துவை அழிக்கிறது தான். அதாவது அவர் பிறக்காம தடுக்கிறது

நபர் 3 : புரியலையே.. அவரு தான் பொறந்துட்டாரே… இனிமே என்ன பண்ண முடியும். 

தலைவர் : அதுக்காக தான் இந்த அவசரக் கூட்டம். நேற்று தான் நம்ம சயிண்டிஸ்டை பாத்து வந்தேன். ஒரு சீக்ரெட் மிஷன் பண்ணிட்டிருந்தாரு அவரு.. சக்ஸஸ் ஆயிட்டாராம்

நபர் 3 : என்ன மிஷன் தலைவரே

தலைவர் : இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும். இது தான் டைம் மெஷின்…. இந்த டைம் மெஷின் மூலமா நாம கடந்த காலத்துக்கு போலாம்.

நபர் 1 : கடந்த காலத்துக்கா ? அங்க போயி ?

தலைவர் : எப்படியாவது மேரி கிட்டே பேசி, இயேசு பிறக்காம செஞ்சிட்டா போதும்.

நபர் 2 : ஓ.. ஐ.. காட் இட்…. செம ஐடியா ! 

தலைவர் : உங்க மூணு பேர்ல ரெண்டு பேர் இந்த பணிக்கு போகணும். அதுக்காக தான் உங்களை மட்டும் கூப்பிட்டிருக்கேன். நீங்க ரெண்டு பேரும், கிறிஸ்டியானிடில இருந்துட்டே அதுக்கு குழி பறிக்கிறவங்க.. என் சாய்ஸ் நீங்க ரெண்டு பேரும் தான்.

நபர் 1 : ஐம் ரெடி தலைவரே..

நபர் 2 : நானும் ரெடி தான்.. இது ஒரு இண்டரஸ்டிங் வேலை !

தலைவர் : வெரிகுட்.. நீங்க போயிட்டு வேலையை கட்சிதமா முடிச்சுட்டு வந்துட்டீங்கன்னா, நீங்க திரும்பி வரும்போ தெயர் ஈஸ் நோ கிறிஸ்டியானிடி.. ஹா..ஹா..ஹா

நபர் 1 : நினைச்சாலே சந்தோசமா இருக்கு தலைவரே… கண்டிப்பா போறோம்.

காட்சி 2

( நபர் 1 & நபர் 2 )

நபர் 1 : டேய், நாளைக்கு நாம இயேசுவோட காலத்துக்கு போகப் போறோம், கொஞ்சம் பயமா தான் இருக்கு. 

நபர் 2 : எதுக்கு பயப்படறே.. அந்த காலத்துக்கு செட் ஆகற மாதிரி டிரஸ் போடுவோம். நமக்குள்ள லேங்குவேஜ் டிரான்ஸ்லேட்டர் இம்ப்ளாண்ட் பண்ணியாச்சு. சோ,அவங்க பேசறது நமக்கு தமிழ்ல கேக்கும், நாம பேசறது அவங்களுக்கு அவங்க பாஷைல கேட்கும்.. சிம்பிள்.

நபர் 1 : யா.. சொதப்பிடக் கூடாது. டிரன்ஸ்லேட்டர் வர்க் ஆகும்ல.. அடிபட்டு சாவக் கூடாது. அந்த பசங்க இயேசுவையே அடிச்சு சாவடிச்சவங்க.. சீடர்களையும் படாத பாடு படுத்தினவங்க… 

நபர் 2 : ஒண்ணும் பயப்படாதே… இந்த டிரான்ஸ்லேட்டர் ஒரு வருஷம் ஓடும். அப்புறம் சூரிய ஒளியில ஆட்டோமெடிக்கா சார்ஜ் ஆகும். கவலைப்பட ஒண்ணுமே இல்லை.

நபர் 1 : ஓக்கே ஓக்கே… எதுக்கும் ஒரு தடவை பைபிளை படிச்சுப்போம்.. எல்லாம் தெரிஞ்சு வெச்சுட்டு தான் போணும்.

நபர் 2 : நமக்கு தெரியாததா… பொறப்புல இருந்தே நாம கிறிஸ்டியன்ஸ்.. 

நபர் : ஆனா கிறிஸ்துவை வெறுக்கிற கிறிஸ்டியனஸ்.. ஹா..ஹா

நபர் 2 : சரி.. சரி.. நாளை சந்திப்போம்… இன்னிக்கு நல்லா தூங்கு

காட்சி 3 – அ

தலைவர் : ( யோசனையாய் அங்கும் இங்கும் நடக்கிறார் – 3 தடவை )

தலைவர் : இரண்டு பேரும் டைம் மெஷின்ல ஏறி போயிட்டாங்க… ( மௌனம் ) சரியான இடத்துக்கு போயிருப்பாங்களா ? ( மௌனம் ) சரியான காலத்துக்கு போயிருப்பாங்களா ? ( மௌனம் ) எல்லாத்தையும் சரியா பண்ணுவாங்களா ? … ம்ம்ம்.. பொறுத்திருந்து பாக்க வேண்டியது தான். 

தலைவர் : ( யோசித்துக் கொண்டே அங்கும் இங்கும் நடக்கிறார் ) 

காட்சி 3 ஆ

 ( பின்குரல் : இருவரும் இயேசுவின் காலத்துக்குச் செல்கிறார்கள் ) 

( இயேசுவின் காலத்துக்குப் போகிறார்கள் )

நபர் 1 & நபர் 2 

நபர் 1 : ஐயா.. இங்கே மரியா வீடு எங்க இருக்கு தெரியுமா ? 

( கூட்டத்தினரைப் பார்த்து )

நபர் 1 : அதான்.. அந்த யோசேப்புக்கு என்கேஜ்மெண்ட் முடிஞ்சிருந்துதே.. அவங்க தான்.

நபர் 1 : ஓ… அந்தப் பக்கமா.. ஓக்கே ஓக்கே 

( அந்தப் பக்கமாய் நடக்கிறார்கள் )

நபர் 1 : அதோ அங்கே பாரு.. அதான் நு நினைக்கிறேன்

( அந்த வீட்டுக்குப் போகிறார்கள் )

நபர் 1 : ஹலோ… 

மரியா : யாரு நீங்க ? உங்களை பாத்ததே இல்லையே ?

நபர் 1 : நாங்க யாருன்னு உங்களுக்கு தெரியாது, ஆனா நீங்க யாருன்னு எங்களுக்கு தெரியும். 

மரியா : அதெப்படி தெரியும் ? கோயில்ல பாட்டு பாடுவேன்.. அப்போ பாத்திருக்கீங்களா ?

நபர் 1 : நோ..நோ

மரியா : என் அப்பா அம்மாவை தெரியுமா ?

நபர் 2 : நோ..நோ.. உலகத்துக்கே உங்களை தெரியும். அதை விடுங்க, நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் வந்திருக்கேன்.

மரியா : சொல்லுங்க… 

நபர் 1 : யோசேப்பு கூட என்கேஜ்மெண்ட் ஆயிருக்கு தானே

மரியா : ஆமா, அதெல்லாம் தெரியுமா…. அவரு ரொம்ப நல்லவரு.. நீதிமான். 

நபர் 2 : அந்த நீதிமானை நீங்க கஷ்டப்படுத்தலாமா ?

மரியா : என்ன சொல்றீங்க ?

நபர் 2 : நீங்க அவரோட குழந்தையை பெத்துக்காம, வேற ஒரு குழந்தையை பெத்துக்கப் போறீங்க

மரியா : (கோபமாய்) என்ன வார்த்த பேசறீங்க. நான் கடவுளுக்குப் பயந்து வாழ்றவ. எந்த பாவமும் செய்ய மாட்டேன்.

நபர் 1 : கோபப் படாதீங்க, நாளைக்கு ஒருத்தர் வந்து உங்க கிட்டே கடவுளோட குழந்தையை நீங்க பெத்துக்கணும் ந்னு சொல்லி ஏமாத்துவாரு

மரியா : கடவுளோட பிள்ளையா ?

நபர் 1 : எஸ்..எஸ்… அப்படி தான் சொல்லுவாரு. ஆனா நீங்க ‘அதெல்லாம் முடியாது, வேற ஆளை பாரு’ ந்னு சொல்லுங்க

மரியா : இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் 

நபர் 2 : அதெல்லாம் ரகசியம். இதெல்லாம் நடக்கும். நீங்க தைரியமா எதிர்த்து பேசுங்க. 

நபர் 1 : இல்லேன்னா உலகம் உங்களை நடத்தை கெட்டவன்னு சொல்லும், யோசேப்பு கோயில்ல சொல்லுவாரு, மதவாதிகள் உங்களை கல்லால எறிஞ்சே கொன்னுடுவாங்க.. பாவம் சின்ன வயசு

மரியா : என்ன பயமுறுத்தறீங்க. நானும் யோசேப்பும் தான் கல்யாணம் பண்ணிக்க போறோம்.. அதுல மாற்றம் இல்லை. வேற யாரு என்ன சொன்னாலும் நான் கேக்கப் போறதில்லை.

நபர் 1 : வெரிகுட் வெரிகுட்… மறுபடியும் சொல்றேன்.. கடவுளோட தூதன்னு சொல்லிட்டு ஒருவர் வருவாரு, கிளம்பு காத்து வரட்டும் ந்னு சொல்லி விரட்டி விட்டுடுங்க. அப்போ தான் நீங்க தப்புவீங்க

மரியா : சரி… சரி… யாவே… இதென்ன சோதனை.

காட்சி 4

( கபிரியேல் தூதர் & மரியா )

தூதர் : அருள் நிறைந்த மரியே வாழ்க !

மரியா : யார்…யார் நீங்க…. 

தூதர் : கர்த்தர் உம்முடனே.. பெண்களுக்குள் நீர் ஆசீர் பெற்றவர்

மரியா : நானா.. பெண்களுக்குள் நான் ஆசீர் பெற்றவளா ? 

தூதர் : ஆம்.. பூவுலகின் பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீர் தான். 

மரியா : எப்படி ?

தூதர் : நீர்.. கடவுளின் தாயாகப் போகிறீர் ?

மரியா : கடவுளின் தாயாகவா ? இதெல்லாம் நடக்கிற காரியமா ? 

தூதர் : நீர் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பீர் 

மரியா : எனக்கும் யோசேப்புக்கும் மண ஒப்பந்தம் ஆகியிருக்கிறது, திருமணம் முடியட்டும்.  

தூதர் : தூய ஆவியால் பிறக்கப் போகிறார் கடவுளின் மகன், உன் மூலமாக. அவருக்கு இயேசு என பெயரிடுவீர். தாவீதின் அரியணை அவருக்கு உரியதாகும், அவரது ஆட்சிக்கு முடிவே இராது. 

மரியா : என்ன சொல்றீங்க ?

தூதர் : உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும், நீர் நிஜத்தை பெற்றெடுப்போர்

மரியா : இது முடியுமா ? 

தூதர் : கடவுளுக்கு தமிழ்ல புடிக்காத வார்த்தை இந்த முடியாதுங்கறது தான். உன் உறவினர் எலிசபெத் தெரியும் தானே

மரியா : ஆமா, ரொம்ப வயசான காலம்.  பாவம்…. அவங்களுக்கு துணையா யாரும் இல்லை.  பிள்ளைகளே இல்லை. 

தூதர் : அவர்களுக்கு ஒரு துணை வரப் போகிறது, அவர் கர்ப்பமாய் இருக்கிறார். ஆகாது என தள்ளப்பட்டவளுக்கு ஆறாவது மாதம் இது !

மரியா : என்ன சொல்கிறீர்கள் ? எலிசபெத் கர்ப்பமாய் இருக்கிறாரா ?

தூதர் : அவர் கடவுளின் அருளால் குழதையைச் சுமக்கிறார். நீரோ கடவுளின் அருளினால் கடவுளையே சுமக்கப் போகிறீர். 

மரியா : இதோ ஆண்டவரின் அடிமை.. உமது வாக்கின்படியே எனக்கு ஆகட்டும். 

தூதர் : மகிழ்ச்சி மரியே ! நீர் உலகின் வாய்களுக்குச் செவிகொடுக்காமல், இறைவனின் வாக்குக்குச் செவிகொடுத்திருக்கிறீர். மகிழ்ச்சி. 

காட்சி 5

( நபர் 1 , நபர் 2 & மரியா )

நபர் 1 : என்ன மரியா… தூதர் வந்தாரா ?

மரியா : தூதர் வந்தார்.. எவ்வளவு பெரிய மகிழ்ச்சியான செய்தி, நான் இயேசுவின் தாயாகப் போகிறேன்.

நபர் 2 : முடியாதுன்னு சொன்னீங்களா இல்லையா ?

மரியா : சொல்ல தான் நினைச்சேன், ஆனா முடியல. ஏதோ ஒரு பரவச நிலையில் இருந்தேன். கடவுளின் அழைப்பை மறுக்க முடியல

நபர் 1 : அது கடவுளின் அழைப்புன்னு ஏன் நினைக்கிறீங்க ? அது பொய்யா கூட இருக்கலாம் இல்லையா ?

மரியா : எலிசபெத் முதிர் வயதில கனி கொடுத்திருக்காங்க. நம்பவே முடியல. கடவுளால் மட்டுமே இது நடக்கும். இது கடவுள் எனக்கு காட்டிய அறிகுறி

நபர் 2 : எவ்வளவோ சொல்லியும், நீங்க கேக்காம போயிட்டீங்க.. சே

மரியா : கடவுளுக்கு எதிரா நான் எதுவும் செய்ய முடியாது…. சாரி, நீங்க போகலாம். 

காட்சி 6

( நபர் 1 & நபர் 2 )

நபர் 1 : டேய்.. பேசாம, இந்த மரியாவை காலி பண்ணினா எப்படிப்பா ?

நபர் 2 : என்ன சொல்றே… கொல்லவா

நபர் 1 : யா… இனிமே வேற எதுவும் பண்ண முடியாது. மரியா ஒத்துக்கிட்டாங்க. அவங்களை அழிக்கிறதை தவிர வேற வழி இல்லை. 

நபர் 2 : காதும் காதும் வெச்ச மாதிரி விஷயத்தை முடிப்போம்… அப்போ இயேசு பொறக்க மாட்டாரு.. கிறிஸ்தவமும் அழிஞ்சுடும்.

நபர் 1 : நல்ல ஐடியா.. அப்போ வா போலாம்

( போகிறார்கள்)

( வீடு பூட்டியிருக்கிறது )

நபர் 1 : என்னப்பா வூடு பூட்டியிருக்கு

(கூட்டத்தைப் பார்த்து )

நபர் 2 : இவங்க.. அதான் மேரி.. எங்க போயிருக்காங்க தெரியுமா ? வீடு பூட்டியிருக்கு ?

நபர் 1 : என்னது எலிசபெத்தை பாக்க மலைநாடு போயிருக்காங்களா… 

நபர் 1 : என்னப்பா.. இப்படி சொல்றாங்க.. இனிமே அவங்களை தேடி போய் காலி பண்றது நடக்காது போலயே.. என்ன பண்ணலாம்.

நபர் 2 : அடுத்த ஒரே வழி யோசேப்பு தான்

நபர் 1 : அவரு என்ன பண்ணுவாரு

நபர் 2 : அவரு நினைச்சா மரியை காலி பண்ணலாம். இது இல்லீகன் குழந்தைன்னு சொன்னா போதும். கல்லால எறிஞ்சே கொன்னுடுவாங்க. 

நபர் 1 : ஓ.. அப்படி இருக்கா 

நபர் 2 : ஆமா.. இது நம்ம காலம் மாதிரி இல்லை… மண ஒப்பந்தம் ஆனா புனிதமா இருக்கணும்.

நபர் 1 : கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்… அப்புறம் யோசேப்புவை போய் பாப்போம்.

காட்சி 7

( நபர் 1,2 & யோசேப்பு )

நபர் 1 : நீங்க யோசேப்பு தானே…

யோ : ஆமா, நீங்க யாரு.. 

நபர் 2 : நாங்க யாருங்கறது முக்கியம் இல்லை. ஆனா நாங்க சொல்லப் போற விஷயம் ரொம்ப முக்கியம்

யோ : சொல்லுங்க.. என்ன விஷயம்

நபர் 1 : மரியாவைப் பற்றி.. நீங்க கட்டிக்கப் போற பொண்ணைப் பற்றி

யோ : அவளுக்கென்ன.. அவ ரொம்ப நல்ல பெண்… 

நபர் 2 : இல்லப்பா.. இல்ல.. அவளுக்கும் உங்களுக்கும் கல்யாணமே ஆகல, ஆனா அவ கர்ப்பமா இருக்கா.. தெரியுமா ?

யோ : தெரியும்

நபர் 1 : தெ.. தெரியுமா ? எப்படி ?

யோ : நேற்றைக்கு நைட் கனவுல தூதர் வந்து சொன்னாரு… 

நபர் 2 : சொ..சொல்லிட்டாரா அதுக்குள்ள… 

யோ : ஆமா, அது கடவுளோட குழந்தை. எனக்கு அதுல சந்தேகம் இல்லை. அதனால மரியாவை கைவிடற மாதிரி இல்லை

நபர் 1 : என்ன சொல்றீங்க.. உங்களுக்கே இது அவமானம்

யோ : யாராச்சும் மரியாவை பற்றி தப்பா பேசினா,அவங்களை சும்மா விடமாட்டேன்.

நபர் 2 : ச..சரி..சரி.. நாங்க கிளம்பறோம்

காட்சி 8

( நபர் 2 & நபர் 1 )

நபர் 1 : என்னப்பா.. எல்லாமே சொதப்புது.. இனி என்ன பண்ண ?

நபர் 2 : ம்ம். இனிமே இயேசுவை காலி பண்ணணும்ன்னா ஒரே ஒரு ஆள் தான்

நபர் 1 : ஏரோதுவா ?

நபர் 2 : எஸ்.. அவரோட அரண்மனைக்கு போலாம்.. வா

காட்சி 9

( அரண்மனைக் காவலாளி , நபர் 1 & நபர் 2 )

காவலாளி : யாருப்பா நீங்க, என்ன இந்தப் பக்கம் ?

நபர் 1 : ஏரோதைப் பார்க்கணும்

காவலாளி : என்ன தைரியம் இருந்தா அவரை பேர் சொல்லிக் கூப்புடுவே.. அதுக்கே உன்னை கைது பண்ணி ஜெயில்ல போடலாம்..  

நபர் 2 : ஐயா.. வெரி சாரி.. நாங்க புதுசு,. அதனால எங்களுக்கு அது தெரியல

காவலாளி : நீங்க யூதரா, கிரேக்கரா, ரோமையரா ?

நபர் 1 : நாங்க ஜாதி எல்லாம் பாக்கறதில்லை 

காவலாளி : அப்படி ஒரு குரூப்பா.. சரி, எதுக்கு மன்னனை பாக்கணும் ?

நபர் 2 : அவரோட அரியணைக்கு ஆபத்து வருது.. அதை சொல்லணும்

காவலாளி : நீங்க ஒற்றர்களா ? எதிரிப் படை வருதா ?

நபர் 1 : இல்லை ஒரு குழந்தை பிறக்கப் போவுது.. அது தான் ஏரோதுக்கு எதிரியா வரப் போவுது

காவலாளி : குழந்தையா ? எதிரி நாட்டு அரண்மனையிலையா 

நபர் 1 : இல்லை.. ஒரு தொழுவத்துல

காவலாளி : தொழுவில மாடு தான்யா பொறக்கும். மன்னனா பொறப்பாரு.. என்ன பேசறே நீ

நபர் 2 : இது கொஞ்சம் புரிய கஷ்டம்.. அவரை மெசியான்னும் சொல்லுவாங்க… 

காவலாளி : உங்க பேச்சே சரியில்லை.. உங்களை உள்ளே விட்டா அடிச்சே கொன்னுடுவாங்க.. ஏதோ எனக்கு நல்ல மனசு உங்களை தொரத்தி விடறேன்.. ஓடிப் போய் பொழச்சுக்கோங்க.

நபர் 1 : இல்ல.. அவரு… கடவுளோட மகன்னு சொல்லுவாங்க

காவலாளி : ஓ.. இது வேறயா.. மன்னன், கடவுளோட மகன், மெசியா, அப்புறம் தொழுவம்.. நல்லா கதை வுடறீங்க.. நீங்க மெண்டலா ?

நபர் 2 : இல்ல.. ஒரு தடவை ஏரோது மன்னனைப் பாத்து

காவலாளி : இன்னும் ஒரு செகண்ட் இங்கே நின்னா, நானே உங்களை காலி பண்ணிடுவேன். இனிமே இந்தப் பக்கமே பாக்கக் கூடாது ஓடிப் போய்டுங்க

( அவர்கள் போகிறார்கள் )

காட்சி 10

( நபர் 1 & 2 )

நபர் 1 : ஒண்ணும் சரியில்லை… நாட்கள் எல்லாம் வேஸ்டா போவுது… 

(அப்போது சிலர் ஓடி வருகிறார்கள் )

நபர் 2 : என்னப்பா.. ஓடி, ஆடி, சந்தோசமா வரீங்க

நபர் 3 : நாங்க இடையர்கள். வானத்துல தூதர் பேரணியை பாத்து பிரமிச்சு போயிட்டோம்.. எங்களுக்காக தாவீதின் ஊர்ல மெசியா பொறந்திருக்காராம்.

நபர் 1 : தூதர் பேரணியா.. நிஜமாவா ?

நபர் 3 : எஸ்.. எஸ்.. நாங்க கிடையை மேச்சுட்டு ரெஸ்ட் எடுத்திட்டிருந்தப்போ தான் தூதரை பாத்தோம், அப்புறம் தூதர் பேரணி.. ஒரே பாட்டு.. என்னா ஒரு சிலிர்ப்பு தெரியுமா.. இது மாதிரி நடந்ததே இல்லை

நபர் 2 : அப்போ இதெல்லாம் உண்மையா…

நபர் 3 : பின்னே…  நாங்க என்ன பொய்யா சொல்றோம் ? பொய் சொல்லிட்டு பெத்லேகேம் வரை போக எங்களுக்கென்ன பைத்தியமா 

நபர் 1 : இல்ல.. இல்லா.. எங்களுக்கு தெரிஞ்ச விஷயம் தான். பட், நாங்க நம்பினதில்லை

நபர் 3 : உங்களுக்கும் தெரியுமா ? நீங்க இடையர்களா ?

நபர் 1 : இல்லை.. நாங்க.. நாங்க… இன்னும் ரொம்ப தூரத்துல இருந்து வந்தவங்க

நபர் 3 : அப்புறம் என்ன.. கவலையை விடுங்க.. எங்க கூட வாங்க, மெசியாவை பாப்போம்.. கொண்டாடுவோம்.. ஜாலியா இருப்போம். 

நபர் 2 : எங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. மறுபடியும் மொதல்ல இருந்து பாக்கறோம்

நபர் 1 : வா.. நாமளும் அவங்க கூட போவோம். இயேசு உண்மையிலேயே கடவுள் தான்ன்னு நேரடியாவே பாத்தாச்சு. இனிமேலும் நாம அவரை நம்பாம இருக்கிறது பெரிய பாவம். 

நபர் 2 : ஆமா, நாம் எவ்வளவோ முயற்சி செஞ்சாலும் கடவுளோட சித்தம் தான் நிறைவேறுது இல்லையா… என்ன ஒரு ஆச்சரியம்.

நபர் 1 : ஆமா, மேரி, யோசேப்பு, இடையர்கள் எல்லாரையும் பாத்தாச்சு. நேர்ல பாத்தும் விசுவசிக்கலேன்னா எப்படி ?

நபர் 2 : இயேசுவைப் பார்த்து அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு மறுபடியும் நம்ம காலத்துக்கே போவோம்.. 

நபர் 1 : போய் நற்செய்தி அறிவிப்போம்

நபர் 2 : எஸ்.. அதான் சொல்ல வந்தேன்.. ஹேப்பி கிறிஸ்மஸ் மேன்.. ஐம் வெரி எக்ஸைட்டர் நௌ

நபர் 1 : நானும் தான்

*

டிசம்பர் மாதம் ! பாலன் இயேசுவின் நினைவுகளைத் தாங்கிய மாதம். இந்த மாதத்தில் கிறிஸ்மஸ் சொல்லும் செய்தி என்ன என்பதை சில குறும் படங்கள் மூலம் சிந்திப்போம். “கிறிஸ்மஸ் கேண்டீஸ்” எனும் தொடரில் வரும் இந்த குறும்படங்களைப் பாருங்கள், பகிருங்கள், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

#1 ஒரு பிரசங்கம்

Posted in Sunday School

சிறுவர் பேச்சு : பெற்றோரே நற்செய்தியாளர்

பெற்றோர் பிள்ளைகளின் முதல் நற்செய்தியாளர்கள் 

*

அவையோருக்கு என் அன்பின் வணக்கம். 

இன்று நான், பெற்றோரே பிள்ளைகளின் முதல் நற்செய்தியாளர்கள் எனும் தலைப்பில் சில வார்த்தைகள் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். 

ஒரு குழந்தையை வளர்த்தெடுக்கும் பொறுப்பும், வார்த்தெடுக்கும் பொறுப்பும் பெற்றோரிடம் தான் இருக்கிறது. அதனால் தான் பெற்றோரை முதல் ஆசிரியர் என்று அழைக்கிறார்கள்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் எனும் பழமொழி நமக்குத் தெரியும். தாலாட்டு கேட்கும் வயதில் ஒரு குழந்தை எந்தப் பழக்கத்தை கற்றுக் கொள்கிறதோ அதுவே அவர்களுடைய கடைசி காலம் வரை தொடரும் என்பதே அதன் பொருள்.

மழலைக் காலத்தில் பிள்ளைகளுக்குத் தேவையான அறிவையும், ஆற்றலையும், நல்ல போதனைகளையும் ஊட்டி வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோரிடம் இருக்கிறது. ஒரு குழந்தை சிறுவயதில் எதைப் பெற்றுக் கொள்கிறதோ, எதைக் கற்றுக் கொள்கிறதோ அதுவே பிற்காலம் வரை தொடர்ந்து வரும்.

‘இயேசு வளர வளர அறிவிலும், ஞானத்திலும் வளர்ந்து எல்லோருக்கும் உகந்தவரானார்” என்கிறது பைபிள். அந்த கல்வி எங்கிருந்து கிடைத்தது ? அன்னை மரியாளும், யோசேப்பும் கற்றுக் கொடுத்த வாழ்க்கைப் பாடங்கள் தான் இல்லையா ? பன்னிரண்டு வயதியில் இயேசுவுக்கு எப்படி ஞானம் வந்தது ? எப்படி அவரால் அறிஞர்களின் அவையில் சென்று அமர்ந்து வாதிட முடிந்தது ? எப்படி பெரியவர்களே வியக்கும் வண்ணம் இயேசுவால் பேச முடிந்தது ? காரணம் அன்னை மரியாள் ! அவர் கற்றுக் கொடுத்த வாழ்க்கை விழுமியங்களே இயேசுவை பலப்படுத்தியது. அவர்கள் சொன்ன நற்செய்தியே இயேசுவை தயாராக்கியது. பெற்றோர் குழந்தைகளின் முதல் நற்செய்தியாளர்கள் என்பதன் அடையாளமாய் அன்னை மரியாளும், யோசேப்பும் இருக்கின்றனர். 

தனக்கு ஒரு குழந்தை கிடைத்தால் அதை ஆலயத்திலேயே கொண்டு வந்து விடுவேன் என அழுது வேண்டினார் அன்னாள். சாமுவேல் பிறந்தார். சாமுவேலுக்கு சிறுவயதிலேயே ஆலயத்தில் வளரவேண்டும் எனும் சிந்தனையை பெற்றோர் ஊட்டி வளர்த்தினார்கள். எனவே சரியான காலம் வந்தபோது சாமுவேல் அழுது புலம்பாமல் ஏலியின் அருகாமையில் வளரத் தொடங்கினான்.

சிறு பிள்ளைகளுக்கு நற்செய்தி அறிவிப்பது ஒரு கலை. சிறுவர்கள் கேட்டுக் கற்றுக் கொள்வதை விட அதிகமாக பார்த்துக் கற்றுக் கொள்வார்கள். பிள்ளைகளிடம் பைபிளைப் படி, படி என சொல்வதால் பயன் கிடைப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு முன் மாதிரியாக பெற்றோர் தினமும் பைபிளைப் படிக்க வேண்டும். அதைப் பார்க்கும் குழந்தையும் அதைப் பின்பற்றத் தொடங்கிவிடும. நற்செய்தி என்பது கனிகளைக் கண்டு கற்றுக் கொள்கின்ற விஷயம்.

நமது வாழ்க்கையை நற்செய்தியின் போதனைகளுக்கு எதிராக அமைத்துக் கொண்டு, பிள்ளைகளுக்கு நற்செய்தி போதிப்பதால் எந்த பயனும் இல்லை. நமது வாழ்க்கை நற்செய்தியின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும்.

உதாரணமாக உண்மையாய் இருக்க வேண்டியதன் தேவையையும், நேர்மையாய் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். சின்னச் சின்ன விஷயத்தில் கூட உண்மையை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். குடும்பத்தோடு சுற்றுலா போய்விட்டு, அடுத்த நாள் லீவ் லெட்டர் எழுதும்போது ‘காய்ச்சல்’ என எழுதினால் குழந்தை பொய்யைக் கற்றுக் கொள்ளும். அங்கே நற்செய்தி அல்ல துர் செய்தி விதைக்கப்படுகிறது. குழந்தையின் நல்ல நிலமான இதயமானது தரிசு நிலமாய் மாறிப் போகிறது.

குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவது பெற்றோருடன் தான். தங்களோடு இருக்கும் பிள்ளைகளுக்கு நல்ல தரமான அடித்தளத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். குறிப்பாக அன்பாக இருக்க வேண்டியதன் தேவையையும்,மன்னிப்பின் மகிமையையும் கற்றுக் கொடுக்க வேண்டும். இயேசுவின் போதனைகளை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்து அவர்களுடைய சிந்தனையை தூய்மைப்படுத்த வேண்டும்.

எத்தனையோ இறை பணியாளர்கள் நம் நாட்டில் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றிய கதைகளை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அன்னை தெரசா போல அன்புடன் இருக்க வேண்டியதன் தேவையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளின் வழியாக ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். இப்படியெல்லாம் தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வந்தால் குழந்தைகள் இயேசுவைப் போன்ற மனநிலையில் வளரும்.

குழந்தைகளை என்னிடம் வர விடுங்கள் என்றார் இயேசு !

குழந்தைகளை இயேசுவிடம் வர விடுவோம், இயேசுவிடம் வளர விடுவோம். 

நமது வாழ்க்கையோ, சிந்தனைகளோ, பேச்சோ, செயல்களோ குழந்தைகளுக்கு எந்த விதத்திலும் இடையூறு இல்லாதபடி பார்த்துக் கொள்வோம். குழந்தைகளுக்கு இடறலாய் இருப்பவர் கழுத்தில் எந்திரக் கல் கட்டப்பட வேண்டும் என்கிறார் இயேசு. 

பெற்றோர் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையைக் குறித்து சிந்திப்பது போல, எதிர் நோக்கியிருக்கும் விண்ணக வாழ்க்கையைக் குறித்தும் சிந்திக்க வேண்டும். அதற்கு அவர்கள் நற்செய்தியாளர்களாய் மாறவேண்டும். அப்போது குடும்பங்கள் குட்டித் திருச்சபைகளாய் மாறும். இயேசு விரும்பிய இறையரசு மண்ணில் உருவாகும்

என கூறி விடைபெறுகிறேன்

நன்றி

வணக்கம்

*

Posted in Sunday School

சிறுவர் பேச்சு : முன் சென்ற நட்சத்திரம்

*

அவையோருக்கு என் அன்பின் வணக்கம். நான் இன்று “முன்னே சென்ற நட்சத்திரம்” என்ற தலைப்பில் சில வார்த்தைகள் உங்களோடு பேசலாம் என நினைக்கிறேன்.

இயேசு பிறந்த காலத்துல வானத்துல ஒரு நட்சத்திரம் தோன்றிச்சு. அந்த நட்சத்திரம் ரொம்ப ஸ்பெஷலான நட்சத்திரம். அந்த நட்சத்திரம் வானத்தில தோன்றினதை பாத்ததுமே, கீழ்த்திசையில இருந்த ஞானிகள் அதை பாத்தாங்க. ‘அடடா.. இது வித்தியாசமான நட்சத்திரம் ஆச்சே. இப்படி ஒரு நட்சத்திரம் தோன்றினா, பூமில ஒரு பெரிய அரசன் பிறந்திருக்காருன்னு அர்த்தமாச்சே’ ந்னு அவங்க நினைச்சாங்க. அதனால அந்த நட்சத்திரம் இருக்கிற திசையை நோக்கி பயணிச்சாங்க.

காடு மலை எல்லாம் தாண்டி அவங்க வந்துட்டே இருந்தாங்க. கடைசில அவங்க எருசலேம் வந்தப்போ, நட்சத்திரத்தை விட்டுட்டு  நேரா ஏரோது மன்னனோட அரண்மனைக்கு போனாங்க. “அரசன்னா அரண்மனையில தானே பொறப்பாரு’ ? இனிமே நட்சத்திரம் எதுக்குன்னு அவங்க நினைச்சாங்க. நேரா ஏரோது கிட்டே போய், ‘அந்த புதிய அரசன் எங்கே, காட்டுங்க. நாங்க வணங்கணும்ன்னு’ சொன்னாங்க.

ஏரோது அதிர்ச்சியாயிட்டான். என்னது புதிய அரசனா ? குழந்தையா ? நமக்கு போட்டியா ஒரு அரசன் பொறந்திருக்கானா ? ந்னு நினைச்சாரு. இருந்தாலும் தலைமைக் குருக்களையும், அறிஞர்களையும் கூப்பிட்டு விஷயம் உண்மையா இருக்குமா ? உண்மைன்னா குழந்தை எங்கே பிறந்திருக்கும்ன்னு கேட்டான். அவங்க பழைய நூல்களையெல்லாம் அலசி ஆராஞ்சு பாத்துட்டு ‘பெத்லேஹேம்ல தான் குழந்தை பிறக்கும்’ ந்னு சொன்னாங்க. 

மன்னன் ஏரோது ஞானிகளை அனுப்பி வெச்சான். பிள்ளையை பாத்ததும் என்கிட்டே வந்து சொல்லுங்க, நானும் போய் வணங்குவேன்னு பொய்யா நடிச்சான். ஞானிகள் வெளியே வந்தாங்க. அப்போ மறுபடியும் வானத்துல அதே நட்சத்திரம். இப்போ மறுபடியும் அவங்க நட்சத்திரத்தை பாலோ பண்ணி போனாங்க.  அப்போஇயேசு சுமார் இரண்டு வயசு பையனா இருந்தாருன்னு சொல்றாங்க. அவரை கண்டு வணங்கி, பரிசெல்லாம் குடுத்தாங்க. 

அந்த நட்சத்திரம் இயேசுவை அடைய ஞானிகளுக்கு வழி காட்டிச்சு. இருந்தாலும் ஞானிகள் இடையில நட்சத்திரத்தை விட்டுட்டு அரண்மனைக்கு போனாங்க. அதனால பாவம் எக்கச்சக்கம் சின்னப் பிள்ளைங்க கொல்லப்பட்டாங்க. அவங்க தொடக்கம் முதல் கடைசி வரைக்கும் நட்சத்திரத்தையே தொடர்ந்து வந்திருந்தா இயேசுவை சீக்கிரம் பாத்திருக்கலாம். சின்னப் பிள்ளைங்களும் தப்பிச்சிருப்பாங்க.

இன்னிக்கும் நம்ம வாழ்க்கையில நம்மை இயேசு கிட்ட கூட்டிட்டு போக ஒரு நல்ல பிரகாசமான நட்சத்திரம் இருக்கு. அது தான் பைபிள். கடவுளோட வார்த்தைகள். அது வெளிச்சமா இருக்கு, இருட்டில பிரகாசிக்குது. இயேசுவை அடையாளம் காட்டுது. நாம பைபிளை தொடர்ந்து நடந்தா இயேசுவை கண்டு பிடிக்கலாம். 

அதை விட்டுட்டு, வழியில திசை மாறி மனிதனோட ஐடியா கேட்கப் போனா அழிவு நிச்சயம். கூடவே இயேசுவை நாம அடைய தாமதமும் ஆகும். அதனால நாம ஒளியாம் இயேசுவை, பைபிள் ஒளியில தேடுவோம். மத்தவங்களுக்கும் இயேசுவை அடையாளம் காட்டுவோம். 

அன்னிக்கு ஞானிகளுக்கு மட்டும் தான் விண்மீன் பற்றி தெரிஞ்சிருந்துது. இன்னிக்கு இயேசு வந்து நமக்கு எல்லாத்தையும் எளிமையா சொல்லிக் குடுத்திருக்காரு. அவரோட வழியில நடந்தா நாம கண்டிப்பா நித்திய ஜீவனை அடையலாம்.

எனவே, விண்மீன் ஆகிய இறை வார்த்தைகளைப் பின்பற்றி நடப்போம். இயேசுவை கண்டடைவோம் என கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்

*

Posted in Sunday School

SKIT : இயேசுவுக்கு என்ன பிடிக்கும் ?

இயேசுவுக்கு என்ன பிடிக்கும் ?

*

ஒருவர் : சர்ச் மெம்பர்ஸ் எல்லாருக்கும் ஒரு அறிவிப்பு… எல்லாரும் கேட்டுக்கோங்க… இன்னிக்கு ஜீசஸ் நம்ம சர்ச்க்கு  ஒரு வாட்சப் மெசேஜ் அனுப்பியிருக்காரு. நம்ம சர்ச்ல இருக்கிற எல்லாரோட வீட்லயும் கிறிஸ்மஸ் அன்னிக்கு நைட் ஜீசஸ் வருவாராம். அதுக்காக எல்லாரும் தயாரா இருக்கணுமாம்.  எப்படி ஜீசஸை கவனிக்கலாம் ? என்ன கிஃப்ட் குடுக்கலாம் ? எல்லாம் யோசிச்சு வெச்சிக்கோங்க. இது ஜீசஸை இம்ப்ரஸ் பண்ண ஒரு செம ஆப்பர்சூனிடி.. ரெடியா இருங்க. 

காட்சி 1

நபர் 1 : ஜீஸஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம வீட்டுக்கு வருவாரு… எல்லாம் சரியா பண்ணிட்டேனா…. வெளியே 10 செட் சீரியல் போட்டாச்சு, முப்பது ஸ்டார் போட்டிருக்கேன்…. எப்படியும் ஜீஸஸ் இம்ப்ரஸ் ஆயிடுவாரு…. குடில்ல வேற அழகான புதிய ஜீஸஸை வாங்கி வெச்சிருக்கேன்.. அவரு கண்டிப்பா சந்தோசப்படுவாரு.

( கதவு தட்டப்படும் ஓசை )

( இயேசு வருகிறார் )

நபர் 1 : வாங்க ஜீசஸ்.. வாங்க வாங்க.. ரொம்ப சந்தோசம்… உக்காருங்க.. உக்காருங்க.. புதுசா உங்களுக்காகவே வாங்கின செயர்.

ஜீசஸ் : நன்றி… நல்லா இருக்கீங்களா ?

நபர் 1 : அதெல்லாம் இருக்கட்டும் ஜீசஸ்.. வெளியே எப்படி லைட்டு ? பேரிஸ் ல போய் வாங்கினேன்.. செம குவாலிட்டி.. நல்லா வெட்டி வெட்டி எரியுதா ?

ஜீசஸ் : ம்ம்.. பாத்தேன்… பாத்தேன்..

நபர் 1 : ஸ்டார் பாத்தீங்களா.. முப்பது ஸ்டார்…. லதா ஃபேன்ஸில தான் வாங்கினேன்.. ஸ்டாரை காணோம்ன்னு இனி ஞானிகளே கன்ஃப்யூஸ் ஆக மாட்டாங்க…. 

ஜீசஸ் : ம்ம்.. பாத்தேன்…

நபர் 1 : அதெல்லாம் இருக்கட்டும்.. வாசல்ல பெரிய குடில் பாத்தீங்களா ? அதுல ஜீசஸ் எப்படி ? செம அழகுல்ல.. புதுசு ஜீஸஸ்.. 3999 ரூபா… பரவாயில்லன்னு வாங்கிட்டேன்… 

ஜீசஸ் : ம்ம்.. பாத்தேன்… பாத்தேன்… 

நபர் 1 : என்ன ஜீசஸ்.. பாத்தேன் பாத்தேன்னு சொல்றீங்க.. ஆனா பாராட்டவே இல்லையே…. 

ஜீசஸ் : ம்.. இதெல்லாம் உன்னோட சந்தோசத்துக்காக பண்ணியிருக்கே.. இதுல எனக்கு சந்தோசம் எதுவும் இல்லை.. நான் வரேன்… 

( ஜீசஸ் போகிறார் )

நபர் 1 : சே.. இதென்ன ஜீசஸ் இப்படி சொல்லிட்டாரு…. இதைவிட சூப்பரா என்ன பண்ண முடியும் கிறிஸ்மஸுக்கு… ம்ம்ம்…

காடசி 2

நபர் 2 : ஜீசஸ் வர நேரமாச்சு… பிரியாணி சுடச் சுட இருக்கு.. இளங்கறி.. கண்டிப்பா ஒரு புடி புடிப்பாருன்னு நினைக்கிறேன். அவருக்கு அப்பவே போஜனப் பிரியன்னு ஒரு பேரு உண்டு… எல்லாம் சரியா பண்ணிட்டேனா… 

( கதவு தட்டும் ஓசை )

நபர் 2 : ஜீசஸ் ஜீசஸ் வாங்க.. வாங்க.. உக்காருங்க

ஜீசஸ் : மகிழ்ச்சி .. நல்லா இருக்கீங்களா ?

நபர் 2 : நல்லா இருக்கேன் ஜீசஸ்…. முதல்ல உக்காருங்க… பிரியாணி பிடிக்குமா ? சொர்க்கத்துல பிரியாணி உண்டா ? பிரியாணி இல்லாத இடம் சொர்க்கமா இருக்குமா என்ன ?

ஜீசஸ் : பிரியாணியா ? 

நபர் 2 : ஆமா, மட்டன் பிரியாணி பண்ணியிருக்கேன்… சில்லுன்னு கோக் வாங்கி வெச்சிருக்கேன்.. சிக்கன் ஃப்ரை இருக்கு.. பிரட் அல்வா இருக்கு… இந்த காம்பினேஷன் மெர்சலா இருக்கும்.

ஜீசஸ் : அதெல்லாம் இருக்கட்டும்… முதல்ல உக்காருங்க

நபர் 2 : இருக்கலாம் ஜீசஸ்.. வீட்டுக்கு வந்திருக்கீங்க.. உங்களுக்காக பனானா கேக் பண்ணியிருக்கேன்.. 

ஜீசஸ் : கேக்கா..

நபர் 2 : யா.. கேக் தான் ஸ்பெஷல்… கிறிஸ்மஸ்னாலே கேக் தானே… ப்ளம் கேக் பண்ணுவாங்க, நான் பழம் கேக் பண்ணியிருக்கேன்… இன்னொரு விஷயமும் வாங்கி வெச்சிருக்கேன்…

ஜீசஸ் : என்னது அது

நபர் 2 : உங்களுக்கு நல்ல பரிச்சயம் உள்ள விஷயம் தான்… முதல் புதுமை மேட்டர்… எஸ்.. வைன்… 20 இயர் ஓல்ட் கேபர்னே ஷோவன்யான்.. செமயா இருக்கும்

ஜீசஸ் : ஓ..ஓக்கே… ம்ம்

நபர் 2 : முதல்ல கேக், அப்புறம் பிரியாணி… அப்புறம் வைன்… எப்படி ஹேப்பியா ஜீசஸ்.. எல்லாம் புடிச்சிருக்கா

ஜீசஸ் : இதெல்லாம் உன் சந்தோசத்துக்காக பண்ணியிருக்கே… இதுல நான் சொல்ல என்ன இருக்கு.. நான் கிளம்பறேன்

( ஜீசஸ் கிளம்புகிறார் )

நபர் 2 : இதென்ன ஜீஸஸ்… அன்னிக்கு பாவிகள் கூட எல்லாம் உக்காந்து சாப்டாரு.. இன்னிக்கு சுடச் சுட பிரியாணி பண்ணி வெச்சிருக்கேன் கண்டுக்காம போறாரு..ம்ம்ம்…

காட்சி 3

நபர் 2 : யப்பாடா.. ஜீசஸை பாக்கணும்ன்னு நினைச்சு நினைச்சு .. இன்னிக்கு அது நிறைவேற போவுது.. ஐம் வெரி எக்ஸைட்டட்.. நான் வாங்கி வெச்சிருக்கிற கிஃப்ட் மாதிரி யாரும் வாங்கியிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

( கதவு தட்டும் ஓசை, இயேசு வருகிறார் )

நபர் 2 : வாங்க ஜீசஸ்.. பிளீஸ் கம்… ஐம் வெரி ஹேப்பி டு சீ யூ.. உக்காருங்க பிளீஸ்

( இயேசு அமர்கிறார் )

நபர் 2 : ஜீஸஸ்… என்ன சாப்பிடறீங்க… ஹாட் ஆர் கோல்ட்.. ?

இயேசு : அதெல்லாம் இருக்கட்டும்.. நல்லா இருக்கீங்களா ?

நபர் 2 : நான் நல்லா தான் இருக்கேன்.. நான் உங்களுக்கு என்ன கிஃப்ட் வாங்கி வெச்சிருக்கேன் தெரியுமா ?

இயேசு : என்ன கிஃப்ட் 

நபர் 2 : இதை மாதிரி கிஃப்ட் நம்ம சர்ச்ல யாருமே குடுத்திருக்க மாட்டாங்க.. எங்க ஃபேமிலி தான் அப்படி ஒரு கிஃப்டை தர முடியும்.. 

இயேசு : என்னென்னவோ சொல்றே.. ஒண்ணும் புரியல..

நபர் 2 : சரி சரி.. புரியாததை விடுங்க… முதல்ல நான்  ஸ்பெஷலா ஒரு கிஃப்ட் தரேன்… ( கொடுக்கிறார் )

இயேசு : என்ன இது ?

நபர் 2 : இது தான் லேட்டஸ்ட் ஐபோன்… ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்… இங்க ரெண்டு இலட்சம் ஆவுது. நான் யூ.எஸ்ல இருந்து இறக்குமதி பண்ணினேன்.. செம குவாலிட்டி.. 2 இயர் சர்வீஸ் பிளானும் இருக்கு… 

இயேசு : இதான் எனக்கான கிஃப்ட்டா ?

நபர் 2 : யா… புடிக்கலையா ? வேணும்னா… ஒரு மேக் புக் ப்ரோ வாங்கி தரவா ? 

இயேசு : இதெல்லாம் உங்களை மாதிரி ஆட்கள் வாங்கி சந்தோசப்படறது.. எனக்கு இதெல்லாம் வேண்டாம்.. நான் கிளம்பறேன்

( இயேசு கிளம்புகிறார் )

நபர் 2 : இந்த இயேசுவுக்கு என்னாச்சு.. இதை விட நல்ல கிஃப்ட் என்ன இருக்கு ? சரி சரி.. அவருக்கு வேண்டாம்ன்னா நான் யூஸ் பண்ண போறேன்… ம்ம்ம் ஐபோன்னா சும்மாவா

காட்சி 4

இயேசு : ம்ம்… எல்லா வீட்லயும் போயிட்டு வந்தாச்சு… எல்லாரும் கிறிஸ்மஸை தப்பாவே புரிஞ்சு வெச்சிருக்காங்க… அலங்காரம் பண்றது, கிறிஸ்மஸ் ட்றீ வைக்கிறது, ஸ்டார் கட்டறது, குடில் வைக்கிறது இதெல்லாம் கிறிஸ்மஸ் ந்னு சிலர் நினைக்கிறாங்க.

நல்லா சாப்டறது, எஞ்சாய் பண்றது – இது கிறிஸ்மஸ் ந்னு சிலர் நினைக்கிறாங்க.

நல்லா டிரஸ் பண்றது, டிவி பாக்கறது, கிஃப்ட் குடுக்கிறது – இதெல்லாம் கிறிஸ்மஸ்னு சிலர் நினைக்கிறாங்க.

இதுல எல்லாம் எனக்கு சந்தோசமே இல்லை… 

நான் உங்க வீட்டுக்குள்ள வந்த மாதிரி, உங்க மனசுக்குள்ளே வரணும். அதுக்கு உங்க மனசு தயாரா இருக்கணும். 

நல்ல கீழ்ப்படிதல் உள்ள பிள்ளைகளா நீங்க இருந்தா – உங்க மனசுல நான் வருவேன்.

என்கிட்டே அடிக்கடி செபம் செஞ்சு பேசினா நான் உங்க மனசுல வருவேன்.

நீங்க பொய் பேசாம உண்மை பேசற பிள்ளைகளா இருந்தா – உங்க மனசுல நான் வருவேன்

உங்க மனசுல நான் வரது தான் உங்களுக்கு உண்மையான கிறிஸ்மஸ்.. சரியா… அது தான் எனக்கு சந்தோசம் தர ஒரே விஷயம்…. 

சரி, நான் கிளம்பறேன். அடுத்த வருஷம் வரும்போ நீங்க என்னை ஏற்றுக்கொள்ள தயாரா இருங்க சரியா.. வீட்ல இல்ல, ஹார்ட்ல… 

பை..பை

( இயேசு கிளம்புகிறார் )