Posted in Sunday School

திராட்சைச் செடி & கிளைகள்

Sunday School/Catechism

திராட்சைச்செடி

( மூன்று பேர், நடுவில் ஒருவர் திராட்சைச் செடி + வேர், வலப்புறமும், இடப்புறமும் இருவர் கிளைகள் )

செடி : கிளைகளே, நீங்கள் எப்போதும் என்னில் நிலைத்திருங்கள்

கிளை 1 : இணைந்திருந்தா என்ன ஆகும் ?

செடி : இணைந்திருந்தா தான் கனி கொடுக்க முடியும் 

கிளை 1 : எப்படி 

செடி : என்னுடைய வேர் தண்ணீரை உறிஞ்சி எல்லா கிளைகளுக்கும் தரும். 

கிளை 1 : ஓ.. ஓக்கே..ஓக்கே நான் எப்பவும் இணைஞ்சே இருக்க போறேன். கனி தரப் போறேன்…

கிளை 2 : நான் தனியா போக போறேன் 

செடி : தனியாவா ?

கிளை2 : ஆமா.. இல்லேன்னா எப்பவும் உன் கூடவே இருக்க வேண்டியிருக்கு.. தனியா எங்கயும் போக முடியாது

செடி  : அதுக்காக

கிளை2 : தனியா கட் பண்ணிட்டு, நான் போக போறேன்.

செடி : அப்படி போனா நீ கரிஞ்சு போயிடுவே

கிளை 2 : அதெல்லாம் சும்மா.. நான் போக தான் போறேன்……  நீ வரியா ( கிளை 1 ஐ பார்த்து )

கிளை 1 : இல்ல இல்ல.. நான் வரல.

( கிளை 2, துண்டித்துக்கொண்டு தனியே போகிறது )

கிளை 2 : ( அங்கும் இங்கும் ஓடுகிறது… ) ஹா..ஹா.. வாட் எ ஃப்ரீடம்.. எங்க வேணும்ன்னாலும் நான் ஓடுவேன். ஏய் நீயும் வா… இங்க நமக்கு நல்ல ஃப்ரீடம் இருக்கு

கிளை 1 : இல்ல.. இல்ல.. நான் வரல. நான் செடி கூட தான் இருப்பேன்.. இந்த அளவுக்கு ஃப்ரீடம் போதும்

கிளை 2 : நீ ஒரு வேஸ்ட்… 

( மறு நாள் )

கிளை 2 : என்ன.. என்னோட இலையெல்லாம் கொஞ்சம் வாடுது.. ஏன் எனக்கு தண்ணி கிடைக்க மாட்டேங்குது

செடி : நான் தான் சொன்னேனே.. என்னைப் பிரிந்து உன்னால ஒண்ணும் செய்ய முடியாது.

கிளை 2 : இல்ல..இல்ல.. நான் சமாளிச்சுடுவேன்.

செடி : நீ பிரிஞ்சு போனதால… கரிஞ்சி போயிடுவே… 

கிளை 2 : ஹேய்.. அதெல்லாம் ஒண்ணும் இல்லை

( சில நாட்களுக்குப் பின் )

கிளை 2 : ( கரிஞ்சு போன இலைகளுடன் ) ஐயோ.. நான் இப்படி கரிஞ்சி போயிட்டேனே… என்னால இனி கனி கொடுக்க முடியாதே

கிளை 1 : அதான் செடி சொல்லிட்டே இருந்துச்சுல்ல, நீ தான் கேக்கல

கிளை 2 : தப்பு பண்ணிட்டேன்.

கிளை 1 : இப்போ புலம்பி என்ன பிரயோசனம் 

செடி : செடியில இருந்து தனியே துண்டிக்கப்பட்டா.. அப்புறம் அது கனி கொடுக்காது, விறகுக்கு தான் பயன்படும்

கிளை 2 : விறகுக்கா ?

செடி : ஆமா.. உன்னை வந்து எடுத்துட்டு போய் எரிப்பாங்க.

கிளை 2 : ஐயோ.. இதெல்லாம் எனக்கு தெரியாம போச்சே.. இனி என்ன பண்ணுவோன்

செடி : இனி ஒண்ணும் பண்ண முடியாது. செடியில கிளைகள் இணைஞ்சு இருக்கணும். 

கிளை 2 : யா… இப்போ புரியுது

செடி : கடவுளை விட்டு பிரிந்து நாம போனா நம்ம வாழ்க்கை இப்படி செடியை விட்டுப் பிரிஞ்சு போன கிளை மாதிரி காஞ்சு போயிடும். அதனால எப்பவும் கடவுளோட இணைந்து தான் இருக்கணும்

கிளை 1 : காலம் கடந்து அழுது என்ன பிரயோசனம், இப்பவே எல்லாரும் உஷாரா இருப்போம்

*

Posted in skit, Sunday School

நான் அழகா இல்லை

ந1 : என்னடா டல்லா இருக்கே

ந 2 : இல்ல .. என் கிளாஸ்ல எல்லாருமே என்னை விட ஹைட்டா இருக்காங்க.. நான் மட்டும் தான் இப்படி குள்ளமா இருக்கேன் அதான்.

ந 1 : ஹைட்ல என்னடா இருக்கு.. எத்தனையோ பெரிய பெரிய வரலாற்று மனிதர்கள் குள்ளமா தான் இருக்காங்க‌

ந 2 : எனக்கு ஹிஸ்டாரிக்கல் பீப்பிள் ஆக ஆசையில்லை, நார்மலா இருந்தா போதும்.. அதுக்கு ஐ நீட் ஹைட்

ந 1 : ம்ம்… ஹைட் வரும் கவலைப்படாதே

காட்சி 2

ந 1 : மறுபடியும் என்னடா டல் ?

ந 2 : என் கலர் ரொம்ப டல்லா இருக்கு.. நேற்று குரூப் போட்டோ ஒண்ணூ எடுத்தோம்.. நான் மட்டும்  கருப்பா….  இருக்கேன்

ந 1 : டேய்.. நீ நல்ல அழகா தாண்டா இருக்கே

ந 2 : நீயும் கலாய்க்காதே.. கறுத்துப் போன‌ கருப்பட்டி மாதிரி இருக்கேன்…

ந 1 : டேய்.. உலகத்துல..

ந 2 : போதும் போதும்.. வரலாற்றுல மண்டேலா எல்லாம் கருப்பு ந்னு சொல்ல வரே.. அப்படி தானே… போதும்.

காட்சி 3

ந 1 : டேய்.. இப்ப என்னடா டல் ?

ந 2 : என் வாய்ஸ் இருக்கே…நல்லாவே இல்லடா..

ந 1 : டேய்.. உன்னை திருத்தவே முடியாது.. எதையாவது ஒண்ணை கண்டு பிடிச்சு ஃபீல் பண்றே.. உன்னை இன்ஃபீரியரா நினைச்சுக்கறே.

ந 2 : நான் அப்படி தானே இருக்கேன். தட்ஸ் த ஃபேக்ட்… 

ந 1 : நீ அமெரிக்க ஜனாதிபதியோட பிள்ளையா இருந்தா இப்படி எல்லாம் யோசிப்பியா ?

ந 2 : அப்படின்னா நான் எதுக்கு இதெல்லாம் யோசிக்கணும்.. எப்படி இருந்தாலும் கெத்துன்னு நினைப்பேன்.

ந 1 : அதை விட ஆயிரம் ஆயிரம் மடங்கு பெரிய ராஜாதி ராஜா இயேசுவோட பிள்ளைடா நீ.. அப்படின்னா நீ இளவரசன்…

ந 2 : ஓ.. அப்படி சொல்றே

ந 1 : யா… அப்படிப்பட்ட நீ இப்படி சப்ப மேட்டருக்கு ஃபீல் பண்ணலாமா ? இயேசு மனுஷனா வந்தப்போ உயரம், நிறம், பேச்சு, ஒல்லி குண்டு பத்தியெல்லாம் பேசினாரா என்ன ? 

ந 2 : ம்ம்ம்நோ.. பேசவே இல்லை

ந 1 : அதெல்லாம் முக்கியமே இல்லை… இனிமே நீ இப்படிப்பட்ட குறைகளைப் பற்றி பாக்காம, நீ யாரோட பிள்ளைன்னு பாரு .. அப்போ உனக்கு தன்னம்பிக்கை தானா வரும்.

ந 2 : யா.. உண்மை தான்… 

ந 1 : தட்ஸ் த மெசேஜ் ஆஃப் கிறிஸ்மஸ் டா… எல்லாரும் இறைவனின் பிள்ளைகள். அவர் நம்மோட மூத்த அண்ணன்.

ந 2 : இனிமே இந்த தேவையற்ற மேட்டர் பேசமாட்டேன்டா… கருப்போ சிவப்போ, நான் கடவுளோட மகன். ! ஹிஸ் பிரின்சஸ் ! இளவரசன்…  தட்ஸ் இட்

ந1 : ஹேப்பி கிறிஸ்மஸ் டா

ந 2 : ஹேப்பி கிறிஸ்மஸ்

Posted in Christmas Special, skit

பகிர்தல் (SKIT) Christmas Special

மாணவி : ஏண்டா… சாப்பிடலையா

மாணவன் : இல்ல.. இன்னிக்கு நான் சாப்பிடறதில்லை…

மாணவி : இண்ணிக்கு என்ன ?

மா : அ..அ..அது அமாவாசை.. இன்னிக்கு அமாவாசை… நான் அமாவாசைக்கு சாப்பிடறதில்லை

மாணவி : டேய்.. அமாவாசை முடிஞ்சு மூணு நாளாச்சு

மா : ஓ…. அ..அப்போ பௌர்ணமி.. பௌர்ணமிக்கும் சாப்ட மாட்டேன்…

மாணவி : பௌர்ணமிக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு

மா : அப்படியா… இ…இன்னிக்கு… செவ்வாய் இல்ல ?

மாணவி : இல்ல.. புதன்… என்னாச்சு ? சாப்பாடு எடுத்துட்டு வரலையா ? 

மா : ( மெதுவாக ) இல்ல…

மாணவி : ஏன் ? மறந்துட்டியா ?

மா : பசியை மறக்க முடியுமா ? வீட்ல சாப்பாடு இல்லை.. அதான் எடுத்துட்டு வரலை

மாணவி ( சோகமாய் ) : இதுக்கு போய் ஏன் வருத்தப்படறே.. வா.. நாம ஷேர் பண்ணுவோம்

மா : வேணாம் வேணாம்… நீ சாப்பிடு

மாணவி : பரவாயில்லப்பா.. என்ன இருக்கோ, அதை ஷேர் பண்ணுவோம்… அம்மா கொஞ்சம் நல்லாவே சமைப்பாங்க‌… பயப்படாதே…. 

மா : பட்டினி கிடக்கிறவனுக்கு பாவக்காயும், பாயாசம் மாதிரி தான்.

மாணவி : ஹி ஹி.. இனிமே டெய்லி நாம ஷேர் பண்ணி சாப்பிடலாம்… 

மா : உனக்கெதுக்கு கஷ்டம்.பரவாயில்ல… பழகிடுச்சு…. 

மாணவி : அடப்பாவி.. இது கஷ்டமா ? கஷ்டம்ன்னா என்ன தெரியுமா ? சிலுவையை சுமந்து நமக்காக ஒருத்தர் மரித்தாரே.. அது கஷ்டம்.. இதெல்லாம் என்னப்பா

மா : யூ மீன் ஜீஸஸ்

மாணவி : யா… அவரு அவரோட உடலையே பகிர்ந்து கொடுத்தாரு, நான் என் உணவை தானே பகிர்ந்து கொடுக்கிறேன். இட்ஸ் கிறிஸ்மஸ்

மா : கிறிஸ்மஸா

மாணவி : யா.. கிறிஸ்மஸ் ஈஸ் பகிர்தல்.. கடவுள் தன் மகனை நமக்கு கொடுத்தாரு… நாம இருக்கிறதை இல்லாதவங்க கூட பகிர்ந்து கொள்ளணூம்

மா ; தேங்க்யூ… இட் மீன்ஸ் எ லாட்… ஐ வில் ரிமம்பர் யுவர் ஹெல்ப்

மாணவி : நோ..நோ.. ஜஸ்ட் ரிமம்பர் கிறிஸ்மஸ்… இட்ஸ் ஷேரிங் காட்ஸ் லவ். நீயும் இப்படியே ஒரு காலத்துல அடுத்தவங்களுக்கு அன்பு காட்டு.. தேட்ஸ் இட்.

மா : யா… ஐ லைக் திஸ் கிறிஸ்மஸ்.

Posted in Christmas Special, skit

மரண பயம் (SKIT) Christmas Special

ந 1 : என்னடா ஆச்சு…. ஏதோ சாமியாரைப் போய் பாத்தியாம்.. தாயத்து கட்டினியாம்

ந 2 : ஆ..ஆமாடா.. 

ந 1 : இப்படி தான் போன மாசம் பள்ளிவாசல் போய்ட்டு வந்தே

ந 3 : ஆ.. ஆமா.. ஆமா.. போனேன்

ந 1 : இதுக்கு இடையில சர்ச்சுக்கு போறே…. பிரேயர் பண்றே

ந 2 : அது இல்லாம இருக்குமா.. என்ன தான் இருந்தாலும் நாம கிறிஸ்டியன்ஸ் தானே…

ந 1 : சரி. உனக்கு என்ன தான் பிரச்சனை ? உன் அம்மா சொல்றாங்க நீ நைட்ல எழும்பி எங்கயாச்சும் ஓடுவியாம்.. கத்துவியாம்.. வாட்ஸ் த ப்ராப்ளம் மேன்

ந 2 : நா.. நான் சொல்லவா.. பட் யார் கிட்டேயும் சொல்லக் கூடாது.

ந1 : சொல்லு.. யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்.. ஏதாச்சும் பேய் உன்னை தொரத்தோ தொரத்துன்னு தொரத்துதா ?

ந 2 : சே..சே.. பேய் பாத்து எனக்கு பயமெல்லாம் இல்லை

ந 1 : அப்புறம் என்ன வாழ்க்கைல ஜெயிக்க மாட்டோம்ன்னு பயமா

ந 2 : நீ என்ன டி.வில வரவன் மாதிரி பேசிட்டிருக்கே…. பெரிய தன்னம்பிக்கை பேச்சாளன் மாதிரி ஹி ஹி

ந 1 : அப்போ என்ன தான் மேட்டர் சொல்லு..

ந 2 : எனக்கு ஒரு பயம் இருக்கு

ந 1 : பயமா… என்ன பயம் ?

ந 2 : ஃபியர் ஆஃப் டெத்.. மரணத்தைக் கண்டு பயம்.

ந 1 : டேய்.. அதை ஏன் இப்போ நினைக்கிறே… அதுவும் இல்லாம , மரணம் எல்லாருக்கும் பொது தான்… அதுல பயப்பட என்ன இருக்கு… 

ந 2 : அப்படி இல்லை…ஏனோ ஒரு பயம்

ந 1 : ம்ம்ம்.. இதெல்லாம் புதுசில்லடா.. இதுக்கு மெடிக்கல் வேர்ல்ட்ல தனெடோஃபோபியா ந்னு பேரு Thanatophobia

ந 2 : ஓ..இதுக்கு பேரெல்லாம் இருக்கா..

ந 1 : யா..யா… இதை டெத் ஆன்ஸ்ஸைடி ந்னு சொல்லுவாங்க… அதெல்லாம் தேவையில்லாத விஷயம்.

ந 2 : என்னென்னவோ பயம் வரும்.. ஒருவேளை சாகாம நம்மள பொதச்சிடுவாங்களோன்னு கூட பயப்படுவேன்…

ந 1 ; இதுவும் சாதாரணம் தான்.. அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனுக்கே அந்த பயம் இருந்துச்சு.. நான் இறந்தா மூணு நாள் பாத்து, கன்ஃபர்ம் பண்ணி புதைங்கப்பான்னு சொன்னவரு அவரு

ந 2 : ஓ..ஐம் நாட் ஏபிள் டு ஓவர் கம் த ஃபியர்

ந 1 : இதை விட்டு வெளியே வர ஒரே ஒரு வழி தான் இருக்கு..

ந 2 : என்ன வழி ?

ந 1 : நாம போற இடத்துல இயேசு நமக்காக காத்திருப்பாருங்கற நம்பிக்கை ! அது மட்டும் இருந்தா பிரச்சினையே இல்லை

ந 2 : ஓ.. அ..அப்படியா சொல்றே

ந 1 : யா.. சீ.. சின்ன வயசுல கட்டில்ல இருந்து அப்பா குதிக்க சொல்லுவாரு .. நாம் குதிப்போம்.. ஏன்னா அப்பா புடிப்பாருங்கற நம்பிக்கை.. அதே மாதிரி தான் இதுவும்

ந 2 : யா.. உண்மை தான்… அந்த நம்பிக்கை எப்படி கிடைக்கும்

ந 1 : வெரி சிம்பிள்.. இயேசுவை நம்பி, அவரை ஏற்றுக் கொள்ளணும். அவரோட வழியில நடக்கணும் அவ்ளோ தான்.

ந 2 : ஓ… நான் கிறிஸ்டியன் தான்.. பட்… யூ..நோ

ந 1 : பழையதை எல்லாம் விடுங்க.. இந்த நிமிஷம் இயேசுவை ஏத்துக்கோ.. நம்பு.. அவரு நிச்சயம் உனக்காக காத்திருப்பார்.. எங்கே போறோம்ன்னு தெளிவா தெரிஞ்சா போறதுக்கு பயம் இருக்காது.

ந 2 : யா.. தட்ஸ் வெரி ட்றூ .. ஐ வில் டு

ந 1 : தட்ஸ் சூப்பர்.. தட்ஸ் த ஜாய் ஆஃப் கிறிஸ்மஸ்.. ஹேப்பி கிறிஸ்மஸ்..

ந 2 : ஹேப்பி கிறிஸ்மஸ்

Posted in Christmas Special, skit

அப்பா (SKIT ) Christmas Special

ந 1 : அப்பா கண்டிப்பா மன்னிச்சுடுவாராடா ?

ந 2 ; என்ன சந்தேகம் ? அப்பாக்கள் எப்பவுமே மன்னிக்கிறவங்க தான்

ந 1 : இல்ல.. நான் ஊரை விட்டு ஓடி வந்தவன்… 

ந 2 : தெரியும்

ந 1 : ஊரை விட்டு ஓடி வந்தப்போ ஊரே அப்பாவையும், அம்மாவையும் கிண்டல் பண்ணிச்சு.. எவளையோ இழுத்துட்டு ஓடிட்டான்னு.. ஊர்ல நிமிந்து நின்ன அப்பா கூனிக் குறுகிட்டாரு..

ந 2 : ம்ம்.. சொல்லியிருக்கே..

ந 1 : வரும்போ.. தங்கச்சி கல்யாணத்துக்காக அம்மா சேத்து வெச்சிருந்த நகையை எல்லாம் எடுத்துட்டு ஓடினேன்.. கல்யாணமே நின்னு போயிருக்கும்…. 

ந 2 : ம்ம்… அதையும் சொல்லியிருக்கே

ந 1 : இப்போ எல்லாமே இழந்து நிக்கறேன் ( உன்னால தான் தங்குறதுக்காச்சும் ஒரு இடம் இருக்கு ) .. இந்த நிலமைல போனா அவரு ஏத்துப்பாருன்னா நினைக்கிறே…

ந 2 : கண்டிப்பாடா.. எல்லா பொருளையும் விட அன்பு உயர்ந்தது

ந 1 : சினிமால பாக்கற மாதிரி பெரிய ஆள் ஆகி, பெரிய கார்ல போய் இறங்கி கட்டுக்கட்டா பணத்தை அப்பாக்கு குடுக்கணும்ன்னு நினைச்சேண்டா

ந 2 : சினிமா எப்பவும் கனவு தாண்டா தரும்.. நிஜம் அவளோ ஈசி இல்லை

ந 1 : ஹீரோவா போக நினைச்சவன், சீரோவா போறதுக்கு பேசாம…

ந 2 : டேய்.. லூசு மாதிரி பேசாதே… உனக்கு கெட்ட குமாரன் கதை தெரியும் தானே… அப்பாவோட சொத்தையெல்லாம் வித்து, இழந்து ஒரு வேலைக்காரனா ஏத்துப்பீங்களான்னு கேட்டு வந்தான். அப்பா என்ன செய்தாரு ? எல்லாத்துலயும் பெஸ்டை குடுத்து அவனை ஏத்துகிட்டாரு

ந 1 : அதெல்லாம் பைபிள் கதைடா

ந 2: இயேசு அப்படி தானேடா… நாம மன்னிக்கவே முடியாத பாவம் செஞ்சிருக்கோம்.. ஆனா அவரு மன்னிச்சு ஏத்துக்கலையா

ந 1 : நீ சொல்லும்போ ஆறுதலா தான் இருக்கு

ந 2 : திருந்தி வரணும், திரும்பி வரணும்ன்னு தாண்டா.. எல்ல அப்பாவும், இயேசப்பாவும் விரும்புவாங்க… நீ கடவுள் கிட்டே மன்னிப்பு கேட்டு உன் அப்பா கிட்டே போடா…

ந 1 : எனக்கென்னவோ தைரியமே வரலைடா…

ந 2 : அப்போ உன் அப்பா நம்பரையோ,அட்றசையோ எனக்கு குடு. அதையும் தரமாட்டேங்கறே

ந 1 : இல்லடா.. ஐ..மீன்.. எனக்கு… 

ந 2 : ஒண்ணும் யோசிக்காதே.. இட்ஸ் கிறிஸ்மஸ் சீசன்.. நம்மளோட பாவத்தின் அளவைப் பாத்து இயேசு நம்மை ஏத்துக்கல, அவரோட அன்பின் அளவை வெச்சு தான் நம்மை ஏத்துக்கறாரு..

ந 1 : சோ… என்ன சொல்ல வரே

ந 2 : நீ உன் பக்கத்துல இருந்து எல்லாத்தையும் பாக்கறதை நிறுத்திட்டு.. உன் அப்பா பக்கத்துல இருந்து பாக்க ஆரம்பி…. அப்போ தான் உனக்கு எல்லாம் புரியும்

ந 1 : ம்ம்.. நான் அப்படி யோசிச்சதே இல்லடா… லெட் மி திங்க்..

( சற்று நேரத்துக்குப் பின் இருட்டு…. )

போன் : ஹலோ…. அஅ…அப்பா….

அப்பா : டேய்.. மகனே எங்கடா இருக்கே.. நல்லா இருக்கியா..ஒண்ணும் பிரச்சினை இல்லையே… ஏதாச்சும் பணம் தேவைப்படுதா… வசதியா இருக்கியா…. எங்கே இருக்கேன்னு சொல்லுப்பா.. நான் உடனே வரேன்… நீ ..நீ இங்க வரவேண்டாம் பிரச்சினை இல்ல.. உன்னை ஒரு தடவை வந்து பாத்துக்கறேன்..

போன் : அப்பா… ( பையன் விசும்புகிறான் )

பின் குரல் : என்னிடம் வருபவர்களை புறம்பே தள்ளிவிடுவதில்லை என்கிறார் இயேசு