Sunday School/Catechism
திராட்சைச்செடி
( மூன்று பேர், நடுவில் ஒருவர் திராட்சைச் செடி + வேர், வலப்புறமும், இடப்புறமும் இருவர் கிளைகள் )
செடி : கிளைகளே, நீங்கள் எப்போதும் என்னில் நிலைத்திருங்கள்
கிளை 1 : இணைந்திருந்தா என்ன ஆகும் ?
செடி : இணைந்திருந்தா தான் கனி கொடுக்க முடியும்
கிளை 1 : எப்படி
செடி : என்னுடைய வேர் தண்ணீரை உறிஞ்சி எல்லா கிளைகளுக்கும் தரும்.
கிளை 1 : ஓ.. ஓக்கே..ஓக்கே நான் எப்பவும் இணைஞ்சே இருக்க போறேன். கனி தரப் போறேன்…
கிளை 2 : நான் தனியா போக போறேன்
செடி : தனியாவா ?
கிளை2 : ஆமா.. இல்லேன்னா எப்பவும் உன் கூடவே இருக்க வேண்டியிருக்கு.. தனியா எங்கயும் போக முடியாது
செடி : அதுக்காக
கிளை2 : தனியா கட் பண்ணிட்டு, நான் போக போறேன்.
செடி : அப்படி போனா நீ கரிஞ்சு போயிடுவே
கிளை 2 : அதெல்லாம் சும்மா.. நான் போக தான் போறேன்…… நீ வரியா ( கிளை 1 ஐ பார்த்து )
கிளை 1 : இல்ல இல்ல.. நான் வரல.
( கிளை 2, துண்டித்துக்கொண்டு தனியே போகிறது )
கிளை 2 : ( அங்கும் இங்கும் ஓடுகிறது… ) ஹா..ஹா.. வாட் எ ஃப்ரீடம்.. எங்க வேணும்ன்னாலும் நான் ஓடுவேன். ஏய் நீயும் வா… இங்க நமக்கு நல்ல ஃப்ரீடம் இருக்கு
கிளை 1 : இல்ல.. இல்ல.. நான் வரல. நான் செடி கூட தான் இருப்பேன்.. இந்த அளவுக்கு ஃப்ரீடம் போதும்
கிளை 2 : நீ ஒரு வேஸ்ட்…
( மறு நாள் )
கிளை 2 : என்ன.. என்னோட இலையெல்லாம் கொஞ்சம் வாடுது.. ஏன் எனக்கு தண்ணி கிடைக்க மாட்டேங்குது
செடி : நான் தான் சொன்னேனே.. என்னைப் பிரிந்து உன்னால ஒண்ணும் செய்ய முடியாது.
கிளை 2 : இல்ல..இல்ல.. நான் சமாளிச்சுடுவேன்.
செடி : நீ பிரிஞ்சு போனதால… கரிஞ்சி போயிடுவே…
கிளை 2 : ஹேய்.. அதெல்லாம் ஒண்ணும் இல்லை
( சில நாட்களுக்குப் பின் )
கிளை 2 : ( கரிஞ்சு போன இலைகளுடன் ) ஐயோ.. நான் இப்படி கரிஞ்சி போயிட்டேனே… என்னால இனி கனி கொடுக்க முடியாதே
கிளை 1 : அதான் செடி சொல்லிட்டே இருந்துச்சுல்ல, நீ தான் கேக்கல
கிளை 2 : தப்பு பண்ணிட்டேன்.
கிளை 1 : இப்போ புலம்பி என்ன பிரயோசனம்
செடி : செடியில இருந்து தனியே துண்டிக்கப்பட்டா.. அப்புறம் அது கனி கொடுக்காது, விறகுக்கு தான் பயன்படும்
கிளை 2 : விறகுக்கா ?
செடி : ஆமா.. உன்னை வந்து எடுத்துட்டு போய் எரிப்பாங்க.
கிளை 2 : ஐயோ.. இதெல்லாம் எனக்கு தெரியாம போச்சே.. இனி என்ன பண்ணுவோன்
செடி : இனி ஒண்ணும் பண்ண முடியாது. செடியில கிளைகள் இணைஞ்சு இருக்கணும்.
கிளை 2 : யா… இப்போ புரியுது
செடி : கடவுளை விட்டு பிரிந்து நாம போனா நம்ம வாழ்க்கை இப்படி செடியை விட்டுப் பிரிஞ்சு போன கிளை மாதிரி காஞ்சு போயிடும். அதனால எப்பவும் கடவுளோட இணைந்து தான் இருக்கணும்
கிளை 1 : காலம் கடந்து அழுது என்ன பிரயோசனம், இப்பவே எல்லாரும் உஷாரா இருப்போம்
*