Posted in Bible Poems

நீரின்றி அமையாது பைபிள் ( கவிதை )

நீரின்றி அமையாது
பைபிள் !
 
 
நான் தான்
தண்ணீர் பேசுகிறேன்.
 
ஆண்டவரின் ஆவி
முதலில்
அசைவாடிய களம்
நான்.
 
இஸ்ரேலர்
தாள் பதிக்க
விலகி நின்றதும்,
இயேசு
தாள் பதிக்க தோள் கொடுத்ததும்
நான் தான் !
 
நான்
கட்டளைக்குக் கட்டுப்பட்ட‌
விஸ்வரூபம்,
கடவுளின்
கோட்டைத் தாண்டி
கரையேறியதில்லை.
 
பாறையில்
பிறப்பெடுத்து
தாகம் தீர்த்ததுமுண்டு,
பூமியை
வறள வைத்து
மாயம் காட்டியதுமுண்டு.
 
ஒற்றை வார்த்தையில்
அடங்கியதும் உண்டு,
மொத்த பூமியை
விழுங்கியதும் உண்டு.
 
இரத்தமாய் மாறி
வதைத்ததும் உண்டு,
இரசமாய் மாறி
சுவைத்ததும் உண்டு.
 
மேகத்தின் உள்ளே
மறைந்ததும் உண்டு,
தாகத்தின்
முடிவாய்
நிறைந்ததும் உண்டு
 
இயேசு
வாழ்வளிக்கும் நீரானார் !
வாழ்வை
முடித்த பின்னும்
விலா வழியே நீர் கசிந்தார்.
 
இயேசு
என்னில் மூழ்கினார்,
நான்
திருமுழுக்கு பெற்றுக் கொண்டேன்.
 
நீரின்றி அமையாது
உலகென்பார்,
நான்
அன்று
இயேசுவின் காதில் சொன்னேன்,
இயேசுவே, நீர் இன்றி
அமையாது உலகு !
 
*
 
சேவியர்
Posted in Christmas Special, skit

பகிர்தல் (SKIT) Christmas Special

மாணவி : ஏண்டா… சாப்பிடலையா

மாணவன் : இல்ல.. இன்னிக்கு நான் சாப்பிடறதில்லை…

மாணவி : இண்ணிக்கு என்ன ?

மா : அ..அ..அது அமாவாசை.. இன்னிக்கு அமாவாசை… நான் அமாவாசைக்கு சாப்பிடறதில்லை

மாணவி : டேய்.. அமாவாசை முடிஞ்சு மூணு நாளாச்சு

மா : ஓ…. அ..அப்போ பௌர்ணமி.. பௌர்ணமிக்கும் சாப்ட மாட்டேன்…

மாணவி : பௌர்ணமிக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு

மா : அப்படியா… இ…இன்னிக்கு… செவ்வாய் இல்ல ?

மாணவி : இல்ல.. புதன்… என்னாச்சு ? சாப்பாடு எடுத்துட்டு வரலையா ? 

மா : ( மெதுவாக ) இல்ல…

மாணவி : ஏன் ? மறந்துட்டியா ?

மா : பசியை மறக்க முடியுமா ? வீட்ல சாப்பாடு இல்லை.. அதான் எடுத்துட்டு வரலை

மாணவி ( சோகமாய் ) : இதுக்கு போய் ஏன் வருத்தப்படறே.. வா.. நாம ஷேர் பண்ணுவோம்

மா : வேணாம் வேணாம்… நீ சாப்பிடு

மாணவி : பரவாயில்லப்பா.. என்ன இருக்கோ, அதை ஷேர் பண்ணுவோம்… அம்மா கொஞ்சம் நல்லாவே சமைப்பாங்க‌… பயப்படாதே…. 

மா : பட்டினி கிடக்கிறவனுக்கு பாவக்காயும், பாயாசம் மாதிரி தான்.

மாணவி : ஹி ஹி.. இனிமே டெய்லி நாம ஷேர் பண்ணி சாப்பிடலாம்… 

மா : உனக்கெதுக்கு கஷ்டம்.பரவாயில்ல… பழகிடுச்சு…. 

மாணவி : அடப்பாவி.. இது கஷ்டமா ? கஷ்டம்ன்னா என்ன தெரியுமா ? சிலுவையை சுமந்து நமக்காக ஒருத்தர் மரித்தாரே.. அது கஷ்டம்.. இதெல்லாம் என்னப்பா

மா : யூ மீன் ஜீஸஸ்

மாணவி : யா… அவரு அவரோட உடலையே பகிர்ந்து கொடுத்தாரு, நான் என் உணவை தானே பகிர்ந்து கொடுக்கிறேன். இட்ஸ் கிறிஸ்மஸ்

மா : கிறிஸ்மஸா

மாணவி : யா.. கிறிஸ்மஸ் ஈஸ் பகிர்தல்.. கடவுள் தன் மகனை நமக்கு கொடுத்தாரு… நாம இருக்கிறதை இல்லாதவங்க கூட பகிர்ந்து கொள்ளணூம்

மா ; தேங்க்யூ… இட் மீன்ஸ் எ லாட்… ஐ வில் ரிமம்பர் யுவர் ஹெல்ப்

மாணவி : நோ..நோ.. ஜஸ்ட் ரிமம்பர் கிறிஸ்மஸ்… இட்ஸ் ஷேரிங் காட்ஸ் லவ். நீயும் இப்படியே ஒரு காலத்துல அடுத்தவங்களுக்கு அன்பு காட்டு.. தேட்ஸ் இட்.

மா : யா… ஐ லைக் திஸ் கிறிஸ்மஸ்.

Posted in Christmas Special, skit

மரண பயம் (SKIT) Christmas Special

ந 1 : என்னடா ஆச்சு…. ஏதோ சாமியாரைப் போய் பாத்தியாம்.. தாயத்து கட்டினியாம்

ந 2 : ஆ..ஆமாடா.. 

ந 1 : இப்படி தான் போன மாசம் பள்ளிவாசல் போய்ட்டு வந்தே

ந 3 : ஆ.. ஆமா.. ஆமா.. போனேன்

ந 1 : இதுக்கு இடையில சர்ச்சுக்கு போறே…. பிரேயர் பண்றே

ந 2 : அது இல்லாம இருக்குமா.. என்ன தான் இருந்தாலும் நாம கிறிஸ்டியன்ஸ் தானே…

ந 1 : சரி. உனக்கு என்ன தான் பிரச்சனை ? உன் அம்மா சொல்றாங்க நீ நைட்ல எழும்பி எங்கயாச்சும் ஓடுவியாம்.. கத்துவியாம்.. வாட்ஸ் த ப்ராப்ளம் மேன்

ந 2 : நா.. நான் சொல்லவா.. பட் யார் கிட்டேயும் சொல்லக் கூடாது.

ந1 : சொல்லு.. யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்.. ஏதாச்சும் பேய் உன்னை தொரத்தோ தொரத்துன்னு தொரத்துதா ?

ந 2 : சே..சே.. பேய் பாத்து எனக்கு பயமெல்லாம் இல்லை

ந 1 : அப்புறம் என்ன வாழ்க்கைல ஜெயிக்க மாட்டோம்ன்னு பயமா

ந 2 : நீ என்ன டி.வில வரவன் மாதிரி பேசிட்டிருக்கே…. பெரிய தன்னம்பிக்கை பேச்சாளன் மாதிரி ஹி ஹி

ந 1 : அப்போ என்ன தான் மேட்டர் சொல்லு..

ந 2 : எனக்கு ஒரு பயம் இருக்கு

ந 1 : பயமா… என்ன பயம் ?

ந 2 : ஃபியர் ஆஃப் டெத்.. மரணத்தைக் கண்டு பயம்.

ந 1 : டேய்.. அதை ஏன் இப்போ நினைக்கிறே… அதுவும் இல்லாம , மரணம் எல்லாருக்கும் பொது தான்… அதுல பயப்பட என்ன இருக்கு… 

ந 2 : அப்படி இல்லை…ஏனோ ஒரு பயம்

ந 1 : ம்ம்ம்.. இதெல்லாம் புதுசில்லடா.. இதுக்கு மெடிக்கல் வேர்ல்ட்ல தனெடோஃபோபியா ந்னு பேரு Thanatophobia

ந 2 : ஓ..இதுக்கு பேரெல்லாம் இருக்கா..

ந 1 : யா..யா… இதை டெத் ஆன்ஸ்ஸைடி ந்னு சொல்லுவாங்க… அதெல்லாம் தேவையில்லாத விஷயம்.

ந 2 : என்னென்னவோ பயம் வரும்.. ஒருவேளை சாகாம நம்மள பொதச்சிடுவாங்களோன்னு கூட பயப்படுவேன்…

ந 1 ; இதுவும் சாதாரணம் தான்.. அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனுக்கே அந்த பயம் இருந்துச்சு.. நான் இறந்தா மூணு நாள் பாத்து, கன்ஃபர்ம் பண்ணி புதைங்கப்பான்னு சொன்னவரு அவரு

ந 2 : ஓ..ஐம் நாட் ஏபிள் டு ஓவர் கம் த ஃபியர்

ந 1 : இதை விட்டு வெளியே வர ஒரே ஒரு வழி தான் இருக்கு..

ந 2 : என்ன வழி ?

ந 1 : நாம போற இடத்துல இயேசு நமக்காக காத்திருப்பாருங்கற நம்பிக்கை ! அது மட்டும் இருந்தா பிரச்சினையே இல்லை

ந 2 : ஓ.. அ..அப்படியா சொல்றே

ந 1 : யா.. சீ.. சின்ன வயசுல கட்டில்ல இருந்து அப்பா குதிக்க சொல்லுவாரு .. நாம் குதிப்போம்.. ஏன்னா அப்பா புடிப்பாருங்கற நம்பிக்கை.. அதே மாதிரி தான் இதுவும்

ந 2 : யா.. உண்மை தான்… அந்த நம்பிக்கை எப்படி கிடைக்கும்

ந 1 : வெரி சிம்பிள்.. இயேசுவை நம்பி, அவரை ஏற்றுக் கொள்ளணும். அவரோட வழியில நடக்கணும் அவ்ளோ தான்.

ந 2 : ஓ… நான் கிறிஸ்டியன் தான்.. பட்… யூ..நோ

ந 1 : பழையதை எல்லாம் விடுங்க.. இந்த நிமிஷம் இயேசுவை ஏத்துக்கோ.. நம்பு.. அவரு நிச்சயம் உனக்காக காத்திருப்பார்.. எங்கே போறோம்ன்னு தெளிவா தெரிஞ்சா போறதுக்கு பயம் இருக்காது.

ந 2 : யா.. தட்ஸ் வெரி ட்றூ .. ஐ வில் டு

ந 1 : தட்ஸ் சூப்பர்.. தட்ஸ் த ஜாய் ஆஃப் கிறிஸ்மஸ்.. ஹேப்பி கிறிஸ்மஸ்..

ந 2 : ஹேப்பி கிறிஸ்மஸ்

Posted in Christmas Special, skit

அப்பா (SKIT ) Christmas Special

ந 1 : அப்பா கண்டிப்பா மன்னிச்சுடுவாராடா ?

ந 2 ; என்ன சந்தேகம் ? அப்பாக்கள் எப்பவுமே மன்னிக்கிறவங்க தான்

ந 1 : இல்ல.. நான் ஊரை விட்டு ஓடி வந்தவன்… 

ந 2 : தெரியும்

ந 1 : ஊரை விட்டு ஓடி வந்தப்போ ஊரே அப்பாவையும், அம்மாவையும் கிண்டல் பண்ணிச்சு.. எவளையோ இழுத்துட்டு ஓடிட்டான்னு.. ஊர்ல நிமிந்து நின்ன அப்பா கூனிக் குறுகிட்டாரு..

ந 2 : ம்ம்.. சொல்லியிருக்கே..

ந 1 : வரும்போ.. தங்கச்சி கல்யாணத்துக்காக அம்மா சேத்து வெச்சிருந்த நகையை எல்லாம் எடுத்துட்டு ஓடினேன்.. கல்யாணமே நின்னு போயிருக்கும்…. 

ந 2 : ம்ம்… அதையும் சொல்லியிருக்கே

ந 1 : இப்போ எல்லாமே இழந்து நிக்கறேன் ( உன்னால தான் தங்குறதுக்காச்சும் ஒரு இடம் இருக்கு ) .. இந்த நிலமைல போனா அவரு ஏத்துப்பாருன்னா நினைக்கிறே…

ந 2 : கண்டிப்பாடா.. எல்லா பொருளையும் விட அன்பு உயர்ந்தது

ந 1 : சினிமால பாக்கற மாதிரி பெரிய ஆள் ஆகி, பெரிய கார்ல போய் இறங்கி கட்டுக்கட்டா பணத்தை அப்பாக்கு குடுக்கணும்ன்னு நினைச்சேண்டா

ந 2 : சினிமா எப்பவும் கனவு தாண்டா தரும்.. நிஜம் அவளோ ஈசி இல்லை

ந 1 : ஹீரோவா போக நினைச்சவன், சீரோவா போறதுக்கு பேசாம…

ந 2 : டேய்.. லூசு மாதிரி பேசாதே… உனக்கு கெட்ட குமாரன் கதை தெரியும் தானே… அப்பாவோட சொத்தையெல்லாம் வித்து, இழந்து ஒரு வேலைக்காரனா ஏத்துப்பீங்களான்னு கேட்டு வந்தான். அப்பா என்ன செய்தாரு ? எல்லாத்துலயும் பெஸ்டை குடுத்து அவனை ஏத்துகிட்டாரு

ந 1 : அதெல்லாம் பைபிள் கதைடா

ந 2: இயேசு அப்படி தானேடா… நாம மன்னிக்கவே முடியாத பாவம் செஞ்சிருக்கோம்.. ஆனா அவரு மன்னிச்சு ஏத்துக்கலையா

ந 1 : நீ சொல்லும்போ ஆறுதலா தான் இருக்கு

ந 2 : திருந்தி வரணும், திரும்பி வரணும்ன்னு தாண்டா.. எல்ல அப்பாவும், இயேசப்பாவும் விரும்புவாங்க… நீ கடவுள் கிட்டே மன்னிப்பு கேட்டு உன் அப்பா கிட்டே போடா…

ந 1 : எனக்கென்னவோ தைரியமே வரலைடா…

ந 2 : அப்போ உன் அப்பா நம்பரையோ,அட்றசையோ எனக்கு குடு. அதையும் தரமாட்டேங்கறே

ந 1 : இல்லடா.. ஐ..மீன்.. எனக்கு… 

ந 2 : ஒண்ணும் யோசிக்காதே.. இட்ஸ் கிறிஸ்மஸ் சீசன்.. நம்மளோட பாவத்தின் அளவைப் பாத்து இயேசு நம்மை ஏத்துக்கல, அவரோட அன்பின் அளவை வெச்சு தான் நம்மை ஏத்துக்கறாரு..

ந 1 : சோ… என்ன சொல்ல வரே

ந 2 : நீ உன் பக்கத்துல இருந்து எல்லாத்தையும் பாக்கறதை நிறுத்திட்டு.. உன் அப்பா பக்கத்துல இருந்து பாக்க ஆரம்பி…. அப்போ தான் உனக்கு எல்லாம் புரியும்

ந 1 : ம்ம்.. நான் அப்படி யோசிச்சதே இல்லடா… லெட் மி திங்க்..

( சற்று நேரத்துக்குப் பின் இருட்டு…. )

போன் : ஹலோ…. அஅ…அப்பா….

அப்பா : டேய்.. மகனே எங்கடா இருக்கே.. நல்லா இருக்கியா..ஒண்ணும் பிரச்சினை இல்லையே… ஏதாச்சும் பணம் தேவைப்படுதா… வசதியா இருக்கியா…. எங்கே இருக்கேன்னு சொல்லுப்பா.. நான் உடனே வரேன்… நீ ..நீ இங்க வரவேண்டாம் பிரச்சினை இல்ல.. உன்னை ஒரு தடவை வந்து பாத்துக்கறேன்..

போன் : அப்பா… ( பையன் விசும்புகிறான் )

பின் குரல் : என்னிடம் வருபவர்களை புறம்பே தள்ளிவிடுவதில்லை என்கிறார் இயேசு

Posted in Christmas Special, skit

அடையாளக் கிறிஸ்தவர்கள் (SKIT) Christmas Special

ந 1 : ஹாய்… பிரைஸ் த லார்ட் பிரதர்… 

ந 2 : பிரைஸ் த லார்ட்..

ந 1 : ஓ.. நீங்களும் கிறிஸ்டியன் தானா ? 

ந 2 : ஆமா .. ஆமா… 

ந 1 : நீங்க.. கேத்தலிக்கா… நான் கேத்தலிக்கா

ந 2 : கேத்தலிக் இல்லை… ஏன் ? 

ந 1 : ஓ.. சூப்பர் சூப்பர்… புராட்டஸ்டன்டா.. சி.எஸ்.ஐ ஆ… இல்ல.. பிரைவெட்டா

ந 2 : பிரைவெட் தான் பிரதர்

ந 1 : ஓ.. வெரி குட் வெரிகுட்.. நீங்க ஆவிக்குரிய சபையா ? சாதாரண சபையா ?

ந 2 : புரியலை பிரதர்

ந 1 : நீங்க பெந்தே கோஸ்தா ? இல்லையான்னு கேட்டேன்

ந 2 : இல்ல்லை இல்லை.. பெந்த கோஸ்தே இல்லை.. 

ந 1 : யா.. டிரஸ் பாத்தே கண்டுபிடிச்சேன்.. அப்போ நீங்க யகோவாவை வழிபடறவங்களா ? இயேசுவையா ?

ந 2 இயேசுவை தான்.. 

ந 1 : ஓ..வாவ்.. கிரேட் கிரேட்… ஊரெங்க பிரதர்

ந 2 : நாகர்கோவில் பக்கம்

ந 1 : ஓ.. ஓக்கே.. அண்ணாச்சிங்க வாழற ஏரியாவா ? கடப்புறமா ?

ந 2 : பிரதர்.. உங்களுக்கு இப்போ என்ன வேணும் ? நான் என்ன சாதி என்ன பிரிவு ந்னு தெரியணுமா ?

ந 1 : அ..அப்படி இல்ல பிரதர்.. நீங்க இரட்சிக்கப் பட்டீங்களான்னு தெரிஞ்சுக்க தான் கேட்டேன்

ந 2 : என்ன ஜாதின்னா நான் இரட்சிக்கப்படுவேன் ? எந்த குரூப்ல இருந்தா எனக்கு ஹெவனுக்கு என்ட்ரி கார்ட் கிடைக்கும் ?

ந 1 : ஏன் பிரதர் கோச்சுக்கறீங்க… 

ந 2 : பின்ன என்ன பிரதர்.. ? இயேசு யார் கிட்டேயாச்சும் சாதி என்ன, மதம் என்ன, பிரிவென்ன, லொட்டு லொசுக்கு எல்லாம் கேட்டாரா ? மக்களோட குணங்களைப் பாப்பீங்களா குலங்களைப் பாப்பீங்களா ?

ந 1 : ஓக்கே.. ஓக்கே பிரதர்.. நீங்க யாருன்னு தெரிஞ்சு போச்சு.. குழப்பவாதி…

ந 2 : நான் குடில்ல பிறந்த இயேசுவை, மனசுல பிறக்க வைக்கிறவன். அதுக்கு கேத்தலிக்கா, பெந்தகோஸ்தான்னு அடையாளமே தேவையில்லை.

ந 1 : பிரதர்.. அப்படி சொல்லாதீங்க.. எல்லா சபையிலயும் இரட்சிப்பு கிடையாது.

ந 2 : பிரதர்.. இறுதித்தீர்வை நாள்ல இயேசு மக்கள் கிட்டே நீ கேத்தலிக்கா, பெந்தேகோஸ்தா, நாடாரா, ந்னு கேட்டாரா ? இல்லை ஏழைகளுக்கு உதவினியான்னு கேட்டாரா ?

ந 1 : ஏ..ஏழைகள், நோயாளிகள், சிறைவாசிகள் பற்றி மட்டும் தான் கேட்டாரு

ந2 : அப்போ போய் அதை பண்ணுங்க… டேன்ஸ் ஆடு, ஆடாதே, அதை பண்ணு இதை பண்ணாதேன்னு குத்தம் சொல்லாம கிறிஸ்துவுக்கு பிரியமா வாழப் பாருங்க..

ந1 : சாரி பிரதர்.. 

ந 2 : நாம இயேசுவை மனசுல பிறக்க வைச்சு, அவரோட போதனைகளை செயல்ல காட்டி கனிகொடுக்கும் வாழ்க்கை வாழணும். அதான் விஷயம். மத்ததெல்லாம் செக்கண்டரி தான். தட்ஸ் த மெசேஜ் ஆஃப் கிறிஸ்மஸ்

ந 1 : ஷுவர் பிரதர். காட் இட்.. நான் தெளிவடஞ்சுட்டேன்.. ஹேப்பி கிறிஸ்மஸ்.

ந 2 : ஹேப்பி கிறிஸ்மஸ்>. சாரி.. கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன் மன்னிச்சுடுங்க… வாங்க டீ சாப்பிடுவோம்.