( மூன்று பேர், நடுவில் ஒருவர் திராட்சைச் செடி + வேர், வலப்புறமும், இடப்புறமும் இருவர் கிளைகள் )
செடி : கிளைகளே, நீங்கள் எப்போதும் என்னில் நிலைத்திருங்கள்
கிளை 1 : இணைந்திருந்தா என்ன ஆகும் ?
செடி : இணைந்திருந்தா தான் கனி கொடுக்க முடியும்
கிளை 1 : எப்படி
செடி : என்னுடைய வேர் தண்ணீரை உறிஞ்சி எல்லா கிளைகளுக்கும் தரும்.
கிளை 1 : ஓ.. ஓக்கே..ஓக்கே நான் எப்பவும் இணைஞ்சே இருக்க போறேன். கனி தரப் போறேன்…
கிளை 2 : நான் தனியா போக போறேன்
செடி : தனியாவா ?
கிளை2 : ஆமா.. இல்லேன்னா எப்பவும் உன் கூடவே இருக்க வேண்டியிருக்கு.. தனியா எங்கயும் போக முடியாது
செடி : அதுக்காக
கிளை2 : தனியா கட் பண்ணிட்டு, நான் போக போறேன்.
செடி : அப்படி போனா நீ கரிஞ்சு போயிடுவே
கிளை 2 : அதெல்லாம் சும்மா.. நான் போக தான் போறேன்…… நீ வரியா ( கிளை 1 ஐ பார்த்து )
கிளை 1 : இல்ல இல்ல.. நான் வரல.
( கிளை 2, துண்டித்துக்கொண்டு தனியே போகிறது )
கிளை 2 : ( அங்கும் இங்கும் ஓடுகிறது… ) ஹா..ஹா.. வாட் எ ஃப்ரீடம்.. எங்க வேணும்ன்னாலும் நான் ஓடுவேன். ஏய் நீயும் வா… இங்க நமக்கு நல்ல ஃப்ரீடம் இருக்கு
கிளை 1 : இல்ல.. இல்ல.. நான் வரல. நான் செடி கூட தான் இருப்பேன்.. இந்த அளவுக்கு ஃப்ரீடம் போதும்
கிளை 2 : நீ ஒரு வேஸ்ட்…
( மறு நாள் )
கிளை 2 : என்ன.. என்னோட இலையெல்லாம் கொஞ்சம் வாடுது.. ஏன் எனக்கு தண்ணி கிடைக்க மாட்டேங்குது
செடி : நான் தான் சொன்னேனே.. என்னைப் பிரிந்து உன்னால ஒண்ணும் செய்ய முடியாது.
கிளை 2 : இல்ல..இல்ல.. நான் சமாளிச்சுடுவேன்.
செடி : நீ பிரிஞ்சு போனதால… கரிஞ்சி போயிடுவே…
கிளை 2 : ஹேய்.. அதெல்லாம் ஒண்ணும் இல்லை
( சில நாட்களுக்குப் பின் )
கிளை 2 : ( கரிஞ்சு போன இலைகளுடன் ) ஐயோ.. நான் இப்படி கரிஞ்சி போயிட்டேனே… என்னால இனி கனி கொடுக்க முடியாதே
கிளை 1 : அதான் செடி சொல்லிட்டே இருந்துச்சுல்ல, நீ தான் கேக்கல
கிளை 2 : தப்பு பண்ணிட்டேன்.
கிளை 1 : இப்போ புலம்பி என்ன பிரயோசனம்
செடி : செடியில இருந்து தனியே துண்டிக்கப்பட்டா.. அப்புறம் அது கனி கொடுக்காது, விறகுக்கு தான் பயன்படும்
கிளை 2 : விறகுக்கா ?
செடி : ஆமா.. உன்னை வந்து எடுத்துட்டு போய் எரிப்பாங்க.
கிளை 2 : ஐயோ.. இதெல்லாம் எனக்கு தெரியாம போச்சே.. இனி என்ன பண்ணுவோன்
செடி : இனி ஒண்ணும் பண்ண முடியாது. செடியில கிளைகள் இணைஞ்சு இருக்கணும்.
கிளை 2 : யா… இப்போ புரியுது
செடி : கடவுளை விட்டு பிரிந்து நாம போனா நம்ம வாழ்க்கை இப்படி செடியை விட்டுப் பிரிஞ்சு போன கிளை மாதிரி காஞ்சு போயிடும். அதனால எப்பவும் கடவுளோட இணைந்து தான் இருக்கணும்
கிளை 1 : காலம் கடந்து அழுது என்ன பிரயோசனம், இப்பவே எல்லாரும் உஷாரா இருப்போம்
ந 2 : நான் அப்படி தானே இருக்கேன். தட்ஸ் த ஃபேக்ட்…
ந 1 : நீ அமெரிக்க ஜனாதிபதியோட பிள்ளையா இருந்தா இப்படி எல்லாம் யோசிப்பியா ?
ந 2 : அப்படின்னா நான் எதுக்கு இதெல்லாம் யோசிக்கணும்.. எப்படி இருந்தாலும் கெத்துன்னு நினைப்பேன்.
ந 1 : அதை விட ஆயிரம் ஆயிரம் மடங்கு பெரிய ராஜாதி ராஜா இயேசுவோட பிள்ளைடா நீ.. அப்படின்னா நீ இளவரசன்…
ந 2 : ஓ.. அப்படி சொல்றே
ந 1 : யா… அப்படிப்பட்ட நீ இப்படி சப்ப மேட்டருக்கு ஃபீல் பண்ணலாமா ? இயேசு மனுஷனா வந்தப்போ உயரம், நிறம், பேச்சு, ஒல்லி குண்டு பத்தியெல்லாம் பேசினாரா என்ன ?
ந 2 : ம்ம்ம்நோ.. பேசவே இல்லை
ந 1 : அதெல்லாம் முக்கியமே இல்லை… இனிமே நீ இப்படிப்பட்ட குறைகளைப் பற்றி பாக்காம, நீ யாரோட பிள்ளைன்னு பாரு .. அப்போ உனக்கு தன்னம்பிக்கை தானா வரும்.
ந 2 : யா.. உண்மை தான்…
ந 1 : தட்ஸ் த மெசேஜ் ஆஃப் கிறிஸ்மஸ் டா… எல்லாரும் இறைவனின் பிள்ளைகள். அவர் நம்மோட மூத்த அண்ணன்.
ந 2 : இனிமே இந்த தேவையற்ற மேட்டர் பேசமாட்டேன்டா… கருப்போ சிவப்போ, நான் கடவுளோட மகன். ! ஹிஸ் பிரின்சஸ் ! இளவரசன்… தட்ஸ் இட்
நண்பன் : இல்ல, பெர்ஃபாமன்ஸ் சரியில்ல இன்னும் நீ நல்லா இம்ப்ரூவ் பண்ணணும்ன்னு மேனேஜர் சொல்றாரு.
அஸ்வின் : மேனேஜர்ஸ்னா ஒரு ஃபீட்பேக் குடுக்கத் தான் செய்வாங்க… அதுக்கு போய் டென்ஷன் ஆகறே ? என்ன பிரச்சினைன்னு பாத்து சரி பண்ணிக்கலாம்
நண்பன் : உனக்கு ஆபீஸ் பாலிடிக்ஸ் தெரியல. மார்ச் ஏப்ரல்ல உன் கிட்டே இப்படி சொல்றாங்கன்னா உனக்கு மோசமான ரேட்டிங் குடுக்கப் போறாங்கன்னு அர்த்தம். டார்கெட் பண்ணிட்டாங்களோன்னு பயமா இருக்கு..
அஸ்வின் : அப்படியெல்லாம் ஏன் கவலைப்படறே…. நீ நல்ல சின்சியரா வேலை பாக்கறவன் உனக்கு சரியான ரேட்டிங் தான் கிடைக்கும்.
நண்பன் : இல்லடா, ஒரு மன பாரமாவே இருக்கு.
அஸ்வின் : நான் உனக்காக பிரேயர் பண்றேண்டா…. “சுமை சுமந்து சோர்ந்திருப்போரே எல்லோரும் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருவேன்” ந்னு இயேசு சொல்றாரு. நீ அவருகிட்டே ப்ரேயர் பண்ணு.. அவரு உனக்கு நிச்சயம் ஒரு மன நிம்மதி தருவார்.
நண்பன் : என்ன இயேசு, அது இதுன்னு பேசறே ?
அஸ்வின் : இல்லடா.. நீ தேடற நிம்மதி கண்டிப்பா இயேசு தருவார்ன்னு பைபிள் சொல்லுது..
நண்பன் : என்ன மதமாற்ற பிரசங்கமா ? நம்ம ஆபீஸ்லயேவா ?
அஸ்வின் : சே…சே ஏன் அப்படி நினைக்கிறே.. நீ சோர்வா இருந்தே அதான்..
நண்பன் : அந்த கேப்ல உன் கடவுளை விக்க பாக்கறியா ?
அஸ்வின் : ஏண்டா இப்படியெல்லாம் பேசறே.. உன் நல்லதுக்கு தானே பேசறேன்
நண்பன் : நான் ஹைச்.ஆர் கிட்டே கம்ப்ளெயின் பண்றேன். இந்த கிறிஸ்டியன்ஸுக்கே இதான் வேலை. ஏதாச்சும் ஒரு சின்ன இடம் கிடைச்சா போதும் உடனே இயேசு, பைபிள்னு தூக்கிட்டு வந்திடுவாங்க.
அஸ்வின் : சரி விடு.. நான் பேசல
நண்பன் : என்ன பேசல.. உன்னை பத்தி கம்ப்ளெயின் பண்ணி உன்னை வேலையை விட்டே தூக்கறேனா இல்லையா பாரு
அஸ்வின் : ஹேய்.. பிளீஸ் பிளீஸ்.. இனிமே அப்படி பேசவே மாட்டேன். இந்த ஆபீஸ்ல இயேசுங்கற பேச்சையே எடுக்க மாட்டேன். கம்ப்ளெயிண்ட் பண்ணி என் வேலையை கெடுக்காதே பிளீஸ்….
நண்பர் : சரி, நீ என் பிரண்ட் ஆனதால விடறேன்… இனிமே இந்த ஆபீஸ்ல இயேசுங்கற பேச்சை நீ எடுத்தாலே நான் கம்ப்ளையிண்ட் பண்ணிடுவேன். கடுப்படிக்காம போயிடு….
சே…. ஆபீஸ்ல நற்செய்தி அறிவிக்கிறதுல ஏகப்பட்ட பிரச்சினை. வேலையை விட்டே தூக்கிடுவாங்க போல… ம்ம்… இனிமே ஆபீஸ்ல இந்த பேச்சையே எடுக்கக் கூடாது. வெளியே பண்ணலாம்…ம்ம் பாப்போம்
ம்ம்ம்.. வெளியே பண்ணினா ஹைச் ஆர் கேள்வி கேக்க முடியாது.. பர்சனல் விஷயம்ன்னு சொல்லிடுவேன்.
காட்சி 5
( TWO PEOPLE NEEDED – Shaun & his brother ? Or John’s son )
( தெருவில் அஸ்வின் )
அஸ்வின் : ஐயா.. இதாங்க ( ஒரு பேப்பர் குடுக்கிறார் )
நபர் 1 : இது என்னது ?
அஸ்வின் : ஐயா.. இது இயேசுவைப் பற்றிய ஒரு பேப்பர்…. இயேசு கேள்விப்பட்டிருக்கீங்களா ? இயேசு நமக்காக இரத்தம் சிந்தி உயிர்விட்ட கடவுள். அவரை நம்பினா நாம நித்திய வாழ்வை பெறலாம்
நபர் : நித்திய வாழ்வுன்னா ?
அஸ்வின் : ஐயா.. இந்த உலகத்துல நாம வாழ்றது கொஞ்ச காலம் தான். அதுவும் இந்த கோவிட் காலத்துல எப்ப மரணம் வரும்னே தெரியல. ஆனா அதுக்கு அப்புறம் நம்ம வாழ்க்கை கடவுளோட நிலையானதா இருக்கணும்.
நபர் : ஓ.. அதுக்கு என்ன பண்ணணும்
அஸ்வின் : இயேசுவை நம்பணும். அவர் நமக்காக மரித்து உயிர்த்தாருங்கறதை நம்பணும். இயேசுவே நான் பாவி, என்னை மன்னிச்சுடுங்க. என்னை உங்க பிள்ளையா ஏத்துக்கங்கன்னு கேக்கணும்
நபர் : அவ்ளோ தானா ?
அஸ்வின் : ஆமா.. அவரை தேடி வரவங்களை அவர் விரட்ட மாட்டாரு அரவணைப்பாரு. அதுக்கு அப்புறம் அவரோட வழியில நடக்கணும்.
நபர் : அவரோட வழின்னா ? அதை எப்படி தெரிஞ்சுக்கறது
அஸ்வின் : அதுக்கு தான் இந்த பைபிள் இருக்கு. இதை படிச்சா இயேசுவோட வழி என்னன்னு தெரியும்
( ஒருவர் வருகிறார் )
( Karen Dad – in Green screen )
( கேமராவை பாத்த மாதிரி பேசணும்… )
நபர் 2 : ஏய். என்ன பண்றே ? என்ன கன்வர்ஷனா ? மதமாற்றமா ? உங்களையெல்லாம் உயிரோடவே விடக்கூடாது
அஸ்வின் : ஐயா.. நான் சும்மா பேசிட்டிருந்தேன்யா,,,
நபர் 2 : சும்மா பேசிட்டிருந்தியா…. நான் கேட்டுட்டு தானே இருந்தேன்.. இயேசுவாம், நித்தியமாம்.. மக்களை குழப்பிட்டே இருப்பீங்களா ? இது எங்க மண்ணு தெரியும்ல….
அஸ்வின் : ஐயா…. அது வந்து..
நபர் 2 : போன் போட்டு எல்லாரையும் வரவழைக்கிறேன்.. வந்தேறி மதத்தோட தெனாவெட்டைப் பாரு…. இன்னிக்கு உனக்கு சங்கு தான். எங்கே வந்து என்ன பண்றே நீ…
அஸ்வின் : ஐயா.. என்னை விட்டுடுங்க பிளீஸ்.. இனிமே நான் இப்படி பண்ணவே மாட்டேன் பிளீஸ்… பிளீஸ்…
நபர் 2 : இப்படியெல்லாம் நடிச்சா விட்டுடுவோமா…
அஸ்வின் : இனிமே கண்டிப்பா இப்படி பண்ண மாட்டேன்.. பிளீஸ்…
நபர் 2 : சரி சரி… எத்தனை பேரை கொளுத்தினாலும் , எத்தனை சர்ச் இடிச்சாலும் நீங்கல்லாம் திருந்த மாட்டீங்களா…. ஓடு… ஓடு… இனிமே ஒரு தடவை உன்னை எங்கேயாச்சும் பாத்தேன்.. காலி பண்ணிடுவேன்..
அஸ்வின் : மிரட்டறாங்க.. துரத்தறாங்க…. ஒரு காலத்துல சுதந்திரமா பேசிட்டிருந்தோம்.. இப்போ பேசவே பயமா இருக்கு. எல்லா இடங்கள்லயும் மிஷனரி பணிக்கு எதிர்ப்பு தான்.
நண்பன் 2 : ம்ம்.. அதுக்கு ஒரு வழி இருக்கு
அஸ்வின் : என்ன வழி ?
நண்பன் 2 : ஒரு ஆன்லைன் சானல் ஆரம்பிச்சு, நற்செய்தி அறிவி.. நானும் ஒரு குக்கிங் சேனல் ஆரம்பிச்சேன்…. அது இன்னிக்கு செம பாப்புலர்டா….
அஸ்வின் : சமையல் சேனலா ?
நண்பன் : ஆமாடா எனக்கு சமையல் பாத்திரங்களோட பழக்கம், உனக்கு கதாபாத்திரங்களோட பழக்கம். நான் இதை பண்றேன், நீ அதை பண்ணு. இண்டர்நெட் மிஷனரில ரிஸ்க் இல்லை.
அஸ்வின் : ஓக்கே….ஓக்கேடா…. தட்ஸ் எ குட் ஐடியா.. பாப்போம்.
காட்சி 7
( ஒரு சேனல் வழியாக நற்செய்தி அறிவிக்கிறான் )
அஸ்வின் : இன்னிக்கு நாம இயேசு சொன்ன இரண்டு கட்டளைகள் பற்றி பேசப் போறோம். இயேசு , கிறிஸ்தவத்தின் போதனைகளை எல்லாம் சுருக்கி இரண்டு கட்டளையா குடுத்தாரு. எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை நேசி, தன்னைத் தான் நேசிப்பது போல பிறரையும் நேசி. இது தான் அந்த இரண்டு கட்டளைகள்……
நிறைய கமெண்ட் வந்திருக்கு, பரவாயில்லை.. குட் குட்
( சில நாட்களுக்குப் பின் )
என்ன ஒரு மிரட்டல் கடிதம் வந்திருக்கு.
‘உன் சானலை சைபர் கிரைமுக்கு குடுத்து டிராக் பண்ணப் போறேன். பாரின் மணி உனக்கு வருது. மதமாற்றத்துக்கும், மத கலவரத்துக்கும் தூண்டற மாதிரி நீ போஸ்ட் போடறே. இன்னும் கொஞ்ச நாள்ல உன் குடும்பத்தையே ஜெயில்ல தள்ளலேன்னா பாத்துக்கோ
அஸ்வின் : ஓ.. மை காட்.. இதுலயும் பிரச்சினையா… இதையும் மூடி வைக்க வேண்டியது தான்.
( சானலை குளோஸ் பண்ணுகிறான் )
காட்சி 8
( அம்மா & அஸ்வின் )
அஸ்வின் : அம்மா…. சுவிசேஷத்தை அறிவிக்கிறது எவ்ளோ பெரிய சவால் இல்ல ? எப்படி தான் பழைய காலத்துல மிஷனரிகள் வந்து வேலை பாத்தாங்களோ
அம்மா : அது எல்லாம் ஒரு பெரிய அர்ப்பணம்பா… கடவுளோட அழைப்பு. அந்த அழைப்பு இருந்தா எப்படிப்பட்ட சவாலையும் தாண்டிடுவாங்க.
அம்மா : பயமுறுத்துறவங்க பயமுறுத்த தான் செய்வாங்க.. அதைக் கண்டு பயப்படாம பணி செய்யணும். அதுக்கு ஒரு விஷயம் ரொம்ப முக்கியம்
அஸ்வின் : என்னம்மா ?
அம்மா : நீ போற வழியில ஒரு நரி உன்னை பாத்து ஆக்ரோஷமா முறைச்சா நீ பயப்படுவியா ?
அஸ்வின் : கண்டிப்பா… பயந்து நடுங்கிடுவேன்
அம்மா : ஒருவேளை நீ ஒரு சிங்கத்தைக் கூட்டிட்டு போனா , அந்த நரியைப் பாத்து பயப்படுவியா ?
அஸ்வின் : எதுக்கு பயப்படணும் ? சிங்கம் இருக்கும்போ என்ன கவலை
அம்மா : அது தான் விஷயம். நீ நற்செய்தி அறிவிக்க போகும்போ சிங்கத்தைக் கூட்டிட்டு போணும்….
அஸ்வின் : சிங்கத்தையா… ? சிங்கத்துக்கு நான் எங்க போவேன்… சிங்கமே என்னை காலி பண்ணிடுமே..
அம்மா : நம்மளை காலி பண்ணாம பாதுகாக்கற சிங்கத்தோட தான் நீ போணும்…
அஸ்வின் : அதென்ன சிங்கம் ? சர்க்கஸ் சிங்கமா
அம்மா : இல்லை, யூதாவின் சிங்கம்… அதான் இயேசு ! நீ இயேசுவோட போனேன்னா எல்லா எதிர்ப்பையும் சமாளிக்கிற தைரியம் கிடைக்கும்.
அஸ்வின் : அது எப்படிம்மா.
அம்மா : இயேசுவே சொன்னாரு, இதோ உலகம் முடியும் வரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன். அதனால போய் நற்செய்தியை அறிவியுங்கள்ன்னு…
அஸ்வின் : ம்ம்…
அம்மா : விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது – அதனால போய் நற்செய்தியை அறிவியுங்கள் ந்னு சொன்னாரு. எல்லா அதிகாரமும் இயேசுவிடம் இருக்கு. அதனால இயேசுவோட போனா நமக்கு எந்த கவலையும் இல்லை
அஸ்வின் : ம்ம்.. புரியுதும்மா.. நானும் பிரேயர் பண்ணிட்டு தான் போரேன்.. பட்.. அந்த பயம் போக மாட்டேங்குது.
அம்மா : நல்லா பிரேயர் பண்ணுப்பா… உயிர்த்த இயேசுவின் அனுபவம் உனக்கு கிடைக்கும்… கடவுள் வழி காட்டுவார்.. அவரு உன் கூட பேசுவாரு , நேரடியாவோ, ஒரு செய்தி மூலமாவோ, ஒரு கனவு மூலமாவோ உன் கிட்டே அவரு பேசுவாரு
காட்சி 9
( அஸ்வின் ப்ரேயர், பைபிள் ரீடிங் )
காட்சி 10
( ONE PASTOR – Xavier )
( அஸ்வின் ஈஸ்டர் சர்வீஸ் அட்டண்ட் பண்ணுகிறான் )
பாஸ்டர் : இன்னிக்கு நமக்கு ஈஸ்டர் விழா. மகிழ்ச்சியின் விழா.
சிலுவை இயேசுவின் அன்பின் அடையாளம்.
உயிர்ப்பு, விண்ணக திறப்பின் அடையாளம்.
சிலுவை அர்ப்பணிப்பின் அடையாளம்
உயிர்ப்பு நம்பிக்கையின் அடையாளம்.
ஆதாமின் வாழ்வின் மூலமாக வந்தது சாவு. இயேசுவின் சாவின் மூலமாக வந்தது வாழ்வு.
இயேசு எவ்வளவோ பெரிய செயல்கள் எல்லாம் செய்தாலும், இயேசுவின் மரணம் அவர்களை நிலை குலைய வைத்தது. ஓடி ஒளிஞ்சாங்க. இயேசுவோட உயிர்ப்பைக் கண்டபிறகு தான் உற்சாகம் அடைஞ்சாங்க. இருந்தாலும் கல்லறை திறக்கப்பட்ட பிறகு கூட, கதவை அடைச்சிட்டு இருந்தாங்க. அவர்களை இயேசு சந்தித்தார். உயிர்ப்பின் அனுபவம்.
கோழைத்தனத்திலிருந்து துணிச்சலுக்கு
இருளிலிருந்து வெளிச்சத்துக்கு
பயத்திலிருந்து தைரியத்துக்கு
குழப்பத்திலிருந்து தெளிவுக்கு
நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு
இயேசு நம்மோடு இருக்கிறார் என நம்புவதும்,
தூய ஆவி நம் உள்ளத்தில் இருக்கிறார் என்பதை நம்புவதும் தான் மிக முக்கியம்.
அது இல்லையேல் நமக்கு துணிச்சல் பிறக்காது. அது தான் நம்மை நற்செய்தியாளர்களாக மாற்றும்.
காட்சி 11 அ
( அஸ்வின் சிந்திக்கிறான் )
நான் தனியா போய் இயேசுவை அறிவிக்க முடியாது, இயேசுவோட போய் தான் இயேசுவை அறிவிக்கணும். ம்ம்ம்ம்
இயேசுவே.. நான் என்ன பண்ணணும்ன்னு எனக்கு சொல்லுங்க.. உமது உயிர்ப்பின் அனுபவத்தை எனக்கும் தாருங்க.
காட்சி 12
( கனவு )
நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்… நான் உன்னை விட்டு விலகுவதில்லை.
( எழும்புகிறான் )
இயேசுவே… நீர்… நீர் என்னோடு பேசினீர்… நன்றி இயேசுவே… இனி நீர் என்ன சொல்கிறீரோ அப்படியே செய்கிறேன்.
காட்சி 12 ஆ
( அஸ்வின் & அம்மா )
அஸ்வின் : அம்மா, என் கூட கடவுள் பேசினாரும்மா. ஒரு செய்தி மூலமா பேசினாரு, அப்புறம் அதை உறுதிப் படுத்தற மாதிரி கனவுலயும் பேசினாரும்மா…. எனக்கு இப்போ ஒரு உற்சாகம் வந்திருக்கு
அம்மா : ரொம்ப சந்தோசம் தம்பி. ஆனா ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ, கடவுள் நம்ம கூட இருக்கும்போ பிரச்சினைகள் வராதுன்னு நினைக்காதே. வரும், நிறையவே வரும். ஆனா அதையெல்லாம் சமாளிக்கிற வல்லமையை கடவுள் தருவாரு.
அஸ்வின் : அது தான் மிகப்பெரிய பலம் மா…
அம்மா : நல்லா பிரேயர் பண்ணிக்கோப்பா…
அம்மா :
காட்சி 13
( அலுவலகம், அதே பழைய நண்பர் )
நண்பர் : என்னப்பா… அஸ்வின் எப்படி இருக்கே ?
அஸ்வின் : இயேசுவோட கிருபையால நல்லா இருக்கேண்டா.. நீ எப்படி இருக்கே ?
நண்பர் : மறுபடியும் இயேசுவா ?
அஸ்வின் : என் வாழ்க்கைல எல்லாத்துக்குமே அவர் தான் காரணம். அதை சொல்ல எனக்கு தயக்கம் இல்லை.
நண்பர் : (நக்கலாக ) புரமோஷன் வருதா உனக்கு இந்த தடவை
அஸ்வின் : இயேசுவுக்கு விருப்பம் இருந்தா தருவாரு, இல்லேன்னா தரமாட்டாரு. எது நமக்கு நல்லதுன்னு அவருக்கு தெரியும்.
நண்பர் : ஓ..அப்படியா ? மேனேஜ்மெண்ட் க்கு விருப்பம் இருந்துச்சு.. ஆனா, நீ இயேசு இயேசுன்னு சொன்னதால அதை இல்லாம பண்ணிடறேன்.
அஸ்வின் : வாட் டு யூ மீன்
நண்பர் : நான் இன்னிக்கே ஹைச்.ஆர் கிட்டே கம்ப்ளெயிண்ட் பன்ணுவேன். நீ டூ மச்சா போறே. இந்த பேச்சே செம கடுப்பா இருக்கு. இயேசுவாம்.. இயேசு…
அஸ்வின் : நான் எந்த தப்பும் பண்ணல, பட்.. உனக்கு என்மேல அவளோ கோபம்ன்னா.. இயேசுவுக்காக அதை ஏத்துக்க எனக்கு சந்தோசம் தான்.
காட்சி 14
( ONE PERSON – May be we can show back side )
( தெருவில் ஒரு ஏழைக்கு உதவுகிறான் )
ஏழை : நீங்க நல்லா இருக்கணும் தம்பி.
அஸ்வின் : இயேசு எல்லாரையும் நேசிக்கிறார். உங்களையும் நேசிக்கிறார். உங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்றார். அதான் பண்றேன். எல்லா புகழும் அவருக்கே சேரட்டும்.
காட்சி 14 அ
( சில நாட்களுக்குப் பின் )
( ONE PERSON – Sudakar )
அஸ்வின் : குட் மார்ணிங் சார்…
மேலதிகாரி : மார்ணிங் எல்லாம் இருக்கட்டும்பா… என்ன நடக்குது ? ஏகப்பட்ட கம்ப்ளெயிண்ட்ஸ் உன் மேல
மேலதிகாரி : இயேசு இயேசுன்னு பேசி நீ மக்களை மதம் மாத்த முயற்சி பண்றியாமே, இட்ஸ் எ மல்டி நேஷனல் கம்பெனி. 2 பில்லியன் டாலர் புராஜக்ட்ல நீ இருக்கே… யோசிக்க மாட்டியா ?
அஸ்வின் : சார், அது தப்பான குற்றச்சாட்டு. நான் என்னோட வாழ்க்கைக்குக் காரணம் இயேசுன்னு தான் சொன்னேன். அடுத்தவங்க இயேசுவை ஏத்துக்கணும்ன்னு கட்டாயப்படுத்தல.
மேலதிகாரி : வாட்டெவர்.. ஹைச் ஆர் க்கு கம்ப்ளெயின்ட் போயிருக்கு.. சோ, ஐம் சாரி… இந்த வருஷம் உங்களை பிளாக் லிஸ்ட் பண்ணிட்டாங்க..
அஸ்வின் : தட்ஸ் ஓக்கே சார். எனக்கு புரமோஷன் தரது இயேசு தான், அதை உங்க மூலமா தராருன்னு நான் நம்பறேன். அவரு தரலேன்னா, அது எனக்கு தேவையில்லாததுன்னு நான் புரிஞ்சுக்கறேன்.
மேலதிகாரி : இத பாரு.. நீ நல்லா வளர்ந்து வர பையன். இந்த மாதிரி பேசறதை நிப்பாட்டிட்டு வேலையை பாத்தா கேரியர்ல எங்கயோ போலாம். லுக் அட் மி.. நானும் கிறிஸ்டியன் தான். ஆனா யாருக்குமே தெரியாது. என் ஆபீஸ்ல கூட ஒரு ஜீஸஸ் படம் கிடையாது. பி எ ரோமன் வென் யூ ஆர் இன் ரோம். ஜீசஸையெல்லாம் ஹாலிடேஸ்ல பாத்துக்கோ, அல்லது ஆஃப் ஆபீஸ் அவர்ஸ்ல பாத்துக்கோ…
அஸ்வின் : சாரி… சார்.. இயேசுவை இன்ஸ்டால்மெண்ட்ல நேசிக்க என்னால முடியாது. எனக்கு ஆபீஸ்ல வளர்றதை விட, ஆண்டவர்ல வளர்ரது தான் சார் முக்கியம்.
மேலதிகாரி : இப்படியெல்லாம் பேசினா.. ஐ காண்ட் ஹெல்ப்.. யூ மே கோ…
காட்சி 15
( மறுபடியும் சேனல் ஆரம்பிக்கிறான் )
அஸ்வின் : பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலித்தார். இயேசுவை தெரியாதுன்னு சொன்னார். ஆனா இயேசுவை விட்டு விட்டு ஓடிவிடவில்லை. மனம் கசிந்து அழுதார் மீண்டும் இயேசுவிடமே வந்தார். மூன்று முறை மறுதலித்தவர், மூன்று முறை ‘இயேசுவே உம்மை அன்பு செய்கிறேன்’ என்றார்.
ஆனா யூதாஸ் “இயேசுவை எனக்குத் தெரியும்” ந்னு சொன்னான். ஆனா இயேசுவை விட்டு விலகிப் போனான். நாம யாராக இருக்கிறோம் ? முத்தத்தால் காட்டிக் கொடுத்து மொத்தமும் விலகிய யூதாசாகவா ? முற்றத்தில் விட்டுக் கொடுத்து, மீண்டும் அன்புக்குள் வந்து சேர்ந்த பேதுருவாகவா ?
( அஸ்வின் மகிழ்ச்சியாய் புன்னகைக்கிறான் )
காட்சி 17
(* ஒரு போன் வருகிறது )
அஸ்வின் : ஓ…. கோவிட்டா ? வாட்… அவங்க அப்பாவா ? ஐயையோ…. எப்போ ? எனக்கு தெரியவே தெரியாதே… சரி.. நான் போய் பாக்கறேன்… பரவாயில்லை… இந்த டைம்ல போய் பாக்காம எப்ப பாக்கறது ?
காட்சி 18
( அஸ்வின் & அலுவலக நண்பர் )
அஸ்வின் : ஹாய்… எப்படி இருக்கீங்க
நண்பர் : ஹேய்… நீ.. நீங்க என்ன இந்தப் பக்கம்.. உக்காருங்க…
அஸ்வின் : நான் இங்கயே உக்காந்துக்கறேன்.. சோசியல் டிஸ்டன்சிங் வேணும்ல்லயா…. ஐம் வெரி சாரி டு ஹியர் எபவுட் யுவர் பாதர்… எனக்கு தெரியவே தெரியாது.. எப்போ எப்படி ?
நண்பர் : ஒருவாரம் ஆச்சு… அப்பா ஆம்புலன்ஸ் டிரைவரா இருந்தாரு. கொரோனா வேகமா பரவுது போக வேண்டாம்ன்னு சொன்னோம். அவரு தான், இந்த நேரத்துல நிறைய பேரு வேலைக்கு வரதில்லை. மக்களுக்கு ஹெல்ப் பண்ணாம எப்படி இருக்கிறதுன்னு போயிட்டிருந்தாரு.. அப்படி தான்.. அவருக்கு கோவிட் வந்துச்சு… இருந்த பணம் எல்லாத்தையும் செலவு பண்ணி டிரீட்மெண்ட் எடுத்தோம்.. பட் காப்பாத்த முடியல.
அஸ்வின் : ம்ம்ம் ஹி ஈஸ் எ கைண்ட் ஹார்ட்டட் மேன்.. ஐ ரியலி ரெஸ்பெக்ட் ஹிம்… அம்மா எப்படி இருக்காங்க ?
நண்பர் : அம்மாக்கு வீட்ல தான் டிரீட்மெண்ட் குடுக்கிறேன். ஹாஸ்பிடல்ஸ் ல இடம் இல்லை.. அண்ட்.. ஃபைனான்சியலாவும் கொஞ்சம் ஸ்றகிள் ஆயிடுச்சு… அப்பாக்கு எல்லாத்தையும் செலவழிச்சிட்டோம்… நானும் வீட்ல தான் டிரீட்மெண்ட் எடுக்கறேன்.
அஸ்வின் : ஃபீல் பண்ணாதீங்க.. நான் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் கிட்டே பேசியிருக்கேன்.. அவரு இன்னும் கொஞ்ச நேரத்துல வருவாரு…. ரெண்டு பேரையும் செக் பண்ணுவாரு. அம்மாக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டா ஹி வில் அரேஞ்ச். ஐ வில் டேக் கேர் ஆஃப் ஆல் த எக்ஸ்பென்சஸ்….
நண்பர் : ரொம்ப நன்றி.. நான் உங்க கிட்டே சொல்லக் கூட இல்லை…. குளோஸ் பிரண்ட்ஸ் ந்னு நினைச்ச யாருமே இந்தப் பக்கம் வரவே பயப்படறாங்க. கம்பெனியும் கை விட்டுச்சு…. வீட்ல போஸ்டர் ஒட்டினதால, இந்த தெருவுலயே மக்கள் அதிகம் வரதில்லை.
அஸ்வின் : கவலைப்படாதீங்க, உங்களுக்கு என்னென்ன தேவையோ அதை நான் பண்றேன். உங்க கூகிள் பே அக்கவுண்ட்ல ஏற்கனவே பணம் அனுப்பியிருக்கேன்
( நண்பர் ஆச்சரியமாய் நிமிர்ந்து பார்க்கிறார் )
அஸ்வின் : அதை வெச்சு தேவையான பொருட்களையெல்லாம் ஆன்லைன்ல ஆர்டர் பன்ணுங்க. இஃப் யூ நீட் மை ஹெல்ப், ஐ கேன் ஆர்டர் பார் யூ..
நண்பர் : அஸ்வின்… உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல… இந்த குவாரண்டைன் வீட்ல கூட தைரியமா வந்திருக்கீங்க.. கேக்காமலேயே என்ன தேவைன்னு அறிஞ்சு ஹெல்ப் பண்றீங்க…. ரொம்ப கம்ஃபர்ட்டிங்கா இருக்கு..
அஸ்வின் : லவ் ஈஸ் கிரேட்டர் தேன் லா – இல்லையா ? சோசியல் டிஸ்டன்சிங் மனசுக்கு இருக்கக் கூடாதுல்ல. முகத்துக்கு மாஸ்க் போடலாம் அகத்துக்கு போடக் கூடாதுல்ல . ஒரு நண்பருக்கு கஷ்டம்ன்னா எப்படி என்னால வீட்ல இருக்க முடியும்.
நண்பர் : ஐம் ரியலி டச்ட்.. இப்படி யாருமே இருக்க மாட்டாங்க.
அஸ்வின் : அப்படி இல்லை. நிறைய பேரு இருக்காங்க. ஃபாதர் டேமியன் ந்னு ஒருத்தரு, ஹவாய் தீவுல தொழுநோயாளிகள் மத்தியில அவங்களுக்கு உதவி செய்யப் போனாரு. 18ம் நூற்றாண்டில தொழுநோயாளிகளை எல்லோரும் ஒதுக்கி வெச்சிருந்தாங்க. ஆனா இவரு துணிச்சலா போனாரு. தன் உயிரையே துச்சமா மதிச்சு போனாரு. கடைசியில அவருக்கும் தொழுநோய் வந்து இறந்து போனாரு.
நண்பர் : ஹௌ.. ஹௌ ஈஸ் திஸ் பாசிபிள்
அஸ்வின் : காட்ஸ் லவ். த லவ் ஆஃப் ஜீசஸ். கடவுளோட அன்பை பிறரோட பகிர்ந்து கொள்ளணும்னு நினைச்சா போதும். இயேசு இந்த சூழல்ல நிச்சயமா இப்படித் தான் செய்வாரு. அவரை ஃபாலோ பண்ற என்னையும், அவரோட அன்பு நெருக்கி ஏவுகிறது. அதான் என்னை இயக்குது.
நண்பன் : சாரிடா… என்ன சொல்றதுன்னே தெரியல. … நான் தான் உன்னோட புரமோஷனையே கெடுத்தேன். உன்னோட கடவுளையே வெறுத்தேன். ஆனா நீ, என்னை தேடி வந்து அன்பு செய்யறே….
அஸ்வின் : அதுக்கெல்லாம் ஏன் ஃபீல் பண்றே…. லா ஆஃப் த லேண்டை நாம பாலோ பண்றோம். லா ஆஃப் த லார்டை பாலோ பண்ண வேண்டாமா ? ஜீசஸோட அன்பின் சட்டம் நம்மை சும்மா இருக்க விடாது. ஐம் சாரி…. ஐ நோ யூ டோண்ட் லைக் டு ஹியர் த நேம் ஜீசஸ்.. பட்… ஐ ஏம் நாட் ஏபிள் டு கீப் த குட் நியூஸ் வித் மி.
நண்பன் : நோ..நோ… ஐம் ரியலி இம்ப்ரஸ்ட்…. ஐ வாண்ட் டு நோ தட் ஜீசஸ்… எல்லாரும் வார்த்தையில அன்பைக் காட்டுவாங்க, நீங்க வாழ்க்கைல காட்டறீங்க…. அன்புக்கு மேலா என்ன இருக்கு. பிளீஸ்.. எனக்கு அவரைப் பற்றி சொல்லுங்க. ஐம் ரியலி டச்ட். ஐ ஃபீல் கம்ஃபர்டட்…. இப்படி அன்பே உருவான ஆண்டவரைப் பற்றி அறியாம இருக்கிறது எனக்கு அவமானம்.. பிளீஸ்..
அஸ்வின் : கண்டிப்பா ..எல்லாம் சொல்றேன்… lபிரைஸ் த லார்ட்…
பின் குரல்
தந்தையின் கரத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் குழந்தை எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. அதே போல தான் நற்செய்தி அறிவித்தலுக்குச் செல்லும் போது இயேசுவின் கரத்தைப் பற்றிக் கொண்டிருப்பதும் அவசியமாகிறது. அதற்கு, நாம் உயிர்த்த இயேசுவின் அனுபவத்தைப் பெறவேண்டும். அர்ப்பணிப்போடும், தாழ்மையோடும், தாழ்பணிந்து வேண்டினால் – இயேசு நம்மை வாழ்வினால் நிரப்புவார். நன்றி
ஆபீசர் : ( பிரேயர் செய்து விட்டு வேலையை ஆரம்பிக்கிறார். கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கிறார் )
ஆபீசர் : ( போனில் கூப்பிடுகிறார் )… ராஜ்… ஒரு நிமிஷம் வாங்க.
ராஜ் : எக்ஸ்கியூஸ்மி… மே.. ஐ .. கம் இன் ?
ஆபீசர் : எஸ் பிளீஸ்… அந்த ஆடிட்டிங் விஷயம் எல்லாம் முடிஞ்சிடுச்சா ? இன்னிக்கு ரிப்போர்ட் அனுப்பணும்
ராஜ் : எஸ் மேம்.. பண்ணியாச்சு
ஆபீசர் : தேங்க்யூ… பிளீஸ் மேக் ஷுயர் இட்ஸ் டன். ஆமா… இந்த மாசம் அன்பு இல்லத்துக்கு பணம் அனுப்பலையா ?
ராஜ் : செக் பண்றேன் மேடம்.. பொதுவா அஞ்சாம் தேதியே அனுப்பிடுவோம்..
ஆபீசர் : இந்த தடவை மிஸ் பண்ணிட்டாங்க போல.. இன்னிக்கே அனுப்பிடுங்க. நம்ம பணத்தை எதிர்பார்த்து அவங்க காத்திருப்பாங்க. பிள்ளைங்களை பசியில தவிக்க விடக்கூடாது… முதல்ல அதை பண்ணுங்க.
ராஜ் : கண்டிப்பா மேம்
ஆபீசர் : ஓக்கே..
( ஆபீசர் வேலையைத் தொடர்கிறார் )
காட்சி 2
( மாலையில் அம்மாவுடன் – மகள் (ஆபீசர் ) )
மகள் : ஷப்பா… டயர்டா இருக்கும்மா… ஒரு காபி கிடைக்குமா…
அம்மா : முதல்ல போய் குளிச்சு ரெடியாயிட்டு வா..
மகள் : ஒரு காபி குடுங்க குடிச்சுட்டே போயிடறேன்… ரொம்ப சோர்வா இருக்கு..
அம்மா : ஆமா.. ஒரு டிரைவரை வெச்சுக்கோன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறே.. டெய்லி ஒரு மணி நேரம் இந்த டிராபிக்ல டிராவல் பண்ணினா டயர்ட் தான் ஆகும்…
மகள் : இல்லம்மா.. எனக்கு டெய்லி ஒன் அவர் மெதுவா வண்டி ஓட்டிட்டே ஒரு நல்ல கிறிஸ்டியன் மெசேஜ் கேக்கறது ஒரு ரிலாக்ஸ் மாதிரி ஃபீல் பண்றேன். என் டிராவல் டைம் புல்லா கடவுளோட வார்த்தையை கேக்கறது, அவரைப் பற்றிய மெசேஜ் கேக்கறதுன்னு நல்ல யூஸ்புல்லா தான் போவுது.. சோ, டிரைவர் வேண்டாம்.
அம்மா : ம்ம்.. சரி, என்னவோ எல்லாத்துக்கும் ஒரு ஆன்சர் வெச்சிருப்பே.. சரி, நான் காபி போட்டுட்டு வரேன்.. வெயிட் பண்ணு.
காட்சி 3
சில வாரங்களுக்குப் பின்
( ஒருவர் வீட்டுக்கு வருகிறார், ஒரு ஏழை )
நபர் : அம்மா… அம்மா
அம்மா : யாருப்பா.. என்ன விஷயம்
நபர் : அம்மா.. என் பேரு மாரியப்பன்… இந்த எழில்நகர் சேரிப் பகுதில இருக்கேம்மா..
அம்மா : சொல்லுப்பா….
நபர் : அம்மா.. ஒரு ஹெல்ப்…
அம்மா : ( பர்சைத் திறந்து 100 ரூபாய் கொடுக்கிறார் )
நபர் : நோ.. நோ.. வேண்டாம்ம்மா.. பணம் எல்லாம் வேண்டாம்…
அம்மா : பின்ன என்னப்பா ?
நபர் : இங்க ஏதாச்சும் வேலை கிடைக்குமாம்மா… உங்களுக்கு தோட்டம் இருக்கு, தோட்ட வேலை பண்றேன்.. வீடை கிளீன் பண்றேன்… என்ன வேலை வேணும்னாலும் பண்றேன்..
அம்மா : அப்படி ஏதும் வேலை இல்லையேப்பா…. வேற எங்கயாச்சும் கேட்டுப் பாரு
நபர் : நிறைய இடத்துல கேட்டுப்பாத்துட்டேன்… எங்கயும் கிடைக்கல. என் பொண்ணு வேற பத்தாங்கிளாஸ் படிக்கிறா.. நிறைய செலவு இருக்கு.. சமாளிக்க முடியல. ஊர்ல தொழில் இல்லாம இங்க வந்துருக்கோம்.
அம்மா : ம்ம்.. ஆங்.. உனக்கு டிரைவிங் தெரியுமா ?
நபர் : தெரியும்மா.. தெரியும்.. கொஞ்ச நாள் ஒருத்தருக்கு கார் ஓட்டியிருக்கேன்.
அம்மா : அப்போ டிரைவரா ஜாயின் பண்ணிக்கிறியா ? மாசம் பத்தாயிரம் ரூபா தரேன்…. டெய்லி காலைல என் பொண்ணை கொண்டு ஆபீஸ்ல விடணும், ஈவ்னிங் வீட்டுக்கு கூட்டிட்டு வரணும். அப்பப்போ கடைக்கெல்லாம் போணும். சின்னச் சின்ன வேலைகளெல்லாம் செஞ்சு தரணும்…
நபர் : ( மகிழ்ச்சியாக ) கண்டிப்பாம்மா… ரொம்ப நன்றிம்மா.. இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன்.
அம்மா : சரிப்பா.. நல்லா ஓட்டுவேல்ல ?
நபர் : நல்லா ஓட்டுவேம்மா….
அம்மா : சரி, அப்போ நாளை காலைல வந்துடுப்பா…
நபர் : ரொம்ப நன்றிம்மா
காட்சி 4
( மகள் சாவியை டிரைவரிடம் கொடுக்கிறார் )
மகள் : வண்டியை கிளீன் பண்ணி வெளியே கொண்டு விட்டுடுப்பா…. பாத்து ஓட்டணும் சரியா…
டிரைவர் : கண்டிப்பாம்மா..
( ஆபீஸ் வாசலில் )
மகள் : பரவாயில்லை.. நல்லா தான் ஓட்டறீங்க… வெயிட் பண்ணுங்க .. என்னோட ஆபீஸ் டைம் முடிஞ்சதும் கால் பண்றேன்.. வண்டியை எடுத்துட்டு வாங்க..
டிரைவர் : சரிம்மா…
காட்சி 5
டிரைவர் : அம்மா… நீங்க கார்ல போடற மெசேஜ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்மா… ஆனா எனக்கு நிறைய விஷயம் புரியலைம்மா….
மகள் : ஓ.. நீங்களும் கவனிக்கிறீங்களா .. வெரிகுட்…. அப்போ இனிமே உங்களுக்கு புரியற மாதிரி போடறேன்.. இயேசுவைப் பற்றியும், அவரோட வாழ்க்கையைப் பற்றியும் ஆரம்பிப்போம்..
டிரைவர் : சரிம்மா.. ரொம்ப நன்றிம்மா…
மகள் : சரி நாளைல இருந்து ஆரம்பிப்போம்… என் பேகை எடுத்து உள்ளே வைங்க.. நான் தோட்டத்துக்கு போயிட்டு வரேன்.
டிரைவர் : அம்மா… என்னோட பொண்ணுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட சொல்லியிருக்காங்க… கொஞ்சம் அட்வான்ஸ் பணம் கிடைக்குமா… சம்பளத்துல புடிச்சிக்கலாம்ம்மா
மகள் : எவ்ளோ வேணும் ?
டிரைவர் : ஒரு எட்டாயிரம் ரூபாம்மா
மகள் : ம்ம்.. சரி, அம்மாகிட்டே கேட்டு வாங்கிக்கோங்க… நான் சொன்னேன்னு சொல்லுங்க
மகள் : வெரிகுட்ப்பா.. அதுக்குள்ள பொண்ணுக்கு கல்யாண் வயசாச்சா
டிரைவர் : நான் இங்கே வரும்போ பொண்ணு பத்தாங்கிளாஸ்மா.. அஞ்சு வருஷம் ஆயிடுச்சுல்லயா.. கல்யாண வயசு வந்துச்சு…கல்யாணம் பண்ணி குடுத்துட்டேன்னா எனக்கு ஒரு பெரிய நிம்மதி
மகள் : வெரிகுட்பா… வாழ்த்துகள்
டிரைவர் : கொஞ்சம்… பணம் தேவைப்படுதும்மா… நகை வாங்கவும், கல்யாண செலவுக்கும் கையில காசு இல்லை
மகள் : ம்ம்.. அம்மா கிட்டே கேளுப்பா… அவங்க தருவாங்க… எவ்ளோ தேவைப்படுது.
மகள் : அது என் தப்புல்லயேப்பா…. கொஞ்சம் ஏதாச்சும் ஹெல்ப் பண்றேன்.. மத்ததை நீ வெளியே பாத்துக்கோ..
டிரைவர் : சரிம்மா…
காட்சி 6
( ஆபீஸ் )
மகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்
( போன் அடிக்குது )
ஆபீசர் : சொல்லுங்க ராஜ்…ஆங்.. வாஙக
ராஜ் : ரமேஷ் கன்சல்டன்சில இருந்து மூணு இலட்சம் ரூபா கேஷா குடுத்திருக்காங்க…
ஆபீசர் : ஏன்.. ஏன் கேஷா வாங்கறீங்க.. ஆன்லைன்ல டிரான்ஸ்பர் பண்ண சொல்ல வேண்டியது தானே..
ராஜ் : எப்பவும் அப்படி தான் பண்ணுவாங்க.. இந்த தடவை ஏதோ பிராப்ளம்ன்னு சொல்லி கேஷா குடுத்துட்டு போனாங்க…
ஆபீசர் : நாம கேஷ் டீல் பண்றதே இல்லை.. சரி, ஓக்கே.. என் பேக்ல வை.. நான் அதை எடுத்துட்டு மணி டிரான்ஸ்பர் பண்ணிடறேன்.
ராஜ் : சரிம்மா…. ( பேகில் வைக்கிறார் – கிளம்புகிறார் )
( மாலையில் மகள் பேகை எடுத்துக் கொண்டு கிளம்புகிறாள் )
காட்சி 7
( வீட்டில் காரிலிருந்து இறங்கிறாள் )
மகள் : யப்பா… என் பேகை எடுத்து உள்ளே கொண்டு வை… நான் தோட்டத்துக்கு போயிட்டு வரேன்..
டிரைவர் : சரிம்மா…
( மகள் தோட்டத்துக்கு போகிறாள், பின் வீட்டுக்கு வருகிறாள் )
மகள் : அம்மா.. ஒரு காபி பிளீஸ்
அம்மா : ( குரல் உள்ளேயிருந்து ) முதல்ல போய் குளிச்சிட்டு வா..
மகள் : ஷப்பா…. வர வழியிலயே காபி குடிச்சிட்டு வரணும் போல.
காட்சி 8
( இரவு )
மகள் பேகைப் பாக்கிறார்.. பணம் இல்லை
மகள் : அம்மா, பணத்தை எடுத்தா சொல்றதில்லையா ?
அம்மா : எந்த பணம்ம்மா ?
மகள் : என் பேக்ல இருந்து..
அம்மா : நான் எடுக்கல, என் கிட்டே தான் காசு இருக்கே.. தேவைக்கு
மகள் : அதில்லம்மா.. மூணு இலட்சம் வெச்சிருந்தேன்
அம்மா : மூணு இலட்சமா ? அங்க தான் இருக்கும்.. யாரு வரப் போறா.. நம்ம வீட்ல நாம ரெண்டு பேரும் தான் இருக்கோம்..
மகள் : நல்லா பாத்தேம்மா.. இல்லையே… எங்கயும் எடுத்து வைக்கல… ம்ம்ம்ம் பீரோலயும் பாத்துட்டேன்…
( நடந்ததை நினைத்துப் பார்க்கிறாள் )
ஆபீஸ்ல இருந்து டைரக்டா வீட்டுக்கு தானே வந்தேன்.. பேகை உள்ளே கொண்டு வெச்சேன்…
ஓ.. டிரைவர்… அவர் தானே என் பேகை எடுத்துட்டு வந்தாரு …
மகள் : அம்மா… அந்த டிரைவரை கூப்பிடுங்கம்மா….
அம்மா : டிரைவரா…, உன்னை இறக்கி விட்டுட்டு உடனே போயிட்டாரே..
மகள் : போயிட்டாரா.. என் கிட்டே சொல்லாம போக மாட்டாரே…
அம்மா : ஏதோ அவசரமா போகணும்ன்னு பதட்டப்பட்டுட்டே போனாரு.
மகள் : வழக்கத்துக்கு மாறா.. பதட்டப்பட்டுட்டே போனாரா ? அப்போ… சம்திங் ராங்
அம்மா : என்னம்மா… அவரை சந்தேகப்படறியா.. எவ்ளோ வருஷமா நம்ம கூட விசுவாசமா இருக்காரு… ஒரு அஞ்சு பைசா கூட தப்பா எடுத்ததில்லை
மகள் : அப்போ அவருக்கு பணத்துக்கு தேவை வந்திருக்காதும்மா.. இப்போ தான் அவருக்கு தேவை வருது… காலைல தான் என் கிட்டே மூணு இலட்சம் கேட்டாரு
அம்மா : மூணு இலட்சமா ! ஏன்
மகள் : அவரோட பொண்ணுக்கு கல்யாணமாம்… இப்போ பேக்ல பணத்தை பாத்ததும் சபலம் வந்திருக்கும்.. எடுத்துட்டு எஸ்கேப் ஆயிட்டாரு
அம்மா : சட்டுன்னு அப்படி ஒரு முடிவுக்கு வரவேண்டாம்மா.. எதுக்கும் நீ ஆபீஸ்ல செக் பண்ணு.
( மகள் ஆபீஸில் ராஜ்க்கு போன் பண்ணுகிறாள் )
மகள் : ராஜ்.. நீங்க காலைல எவ்ளோ பணம் குடுத்தீங்க…
ராஜ் : மூணு இலட்சம்மா.. ஏன்ம்மா கம்மியாகுதா
மகள் : நோ..நோ.. எங்கே வெச்சீங்க பணத்தை
ராஜ் : உங்க பேக்ல தாம்மா.. நீங்க தான் கூடவே இருந்தீங்களே.. உங்க முன்னாடி தானே வெச்சேன்.. ஏம்மா.. ஏதாச்சும் பிரச்சினையா ?
மகள் : நோ.. நோ நாளைக்கு சொல்றேன்.
( மகள் அம்மாவிடம் )
மகள் : அம்மா.. அவரு என் கண்ணு முன்னாடி தான் பேக்ல பணத்தை வெச்சாரு. நான் கூட தான் இருந்தேன்… நான் பேகை கார்ல வெச்சேன். அப்புறம் நேரா வீட்டுக்கு வந்தோம். பேகை அவரு வீட்ல வெச்சாரு.. இப்போ சொல்லுங்க..
அம்மா : ஒண்ணு பணத்தை நான் எடுத்திருக்கணும், எடுக்கல. உன் பணம், சோ நீ எடுக்க வேண்டிய தேவை இல்லை… அப்போ மூணாவது டிரைவர் மட்டும் தான்.
மகள் : அவர் நம்பர் குடுங்க
அம்மா : இரு நானே கூப்பிடறேன்.. ( அழைக்கிறார் ) சுவிட்ச் ஆஃப்.
அம்மா : சுவிட்ச் ஆஃப்னு வருது.
மகள் : எஸ்… அவன் தாம்ம்மா… எத்தனையோ கதை படிக்கிறோம். பல வருஷம் கூடவே இருக்கிறவங்க கழுத்தறுக்கிறது. சே… இவரும் அப்படியா…
அம்மா : அவரோட வீடு தெரியுமா ?
மகள் : எனக்கெங்கே தெரியும்.. எழில் நகர் சேரின்னு நீங்க சொன்னீங்க. அட்டையை குளிப்பாட்டி தொட்டில்ல வெச்சா அது போகுமாம் குப்பை தொட்டிக்கு.
அம்மா : ம்ம்ம்..சரி.. டென்ஷன் ஆகாதே என்ன பண்ணலாம் ?
மகள் : எனக்கு இந்த ஏரியா இன்ஸ்பெக்டரை தெரியும். என் கிளாஸ்மேட் தான். மார்ணிங் வரை பாக்கலாம்.. டிரைவர் வரலேன்னா அவர் கிட்டே சொல்றேன்..
இன்ஸ் : உங்க டிரைவரை புடிச்சுட்டோம்… விசாரிச்சிட்டிருக்கேன், அதை சொல்லலாம்ன்னு தான் போன் பண்ணினேன்.
மகள் : வெரிகுட்.. புடிச்சுட்டீங்களா.. வெரி குட்.. வெரி குட்… எங்கே இருந்தான்
இன்ஸ் : உங்க வீட்டுக்கு தான் வந்திருக்கான், அம்மா சொன்னாங்க அள்ளிட்டு வந்துட்டேன்
மகள் : வீட்டுக்கு வந்தாரா ?
இன்ஸ் : ஆமா.. எனக்கு எதுவுமே தெரியாது.. அம்மாக்கு எப்பவுமே துரோகம் பண்ண மாட்டேன். என் உயிரை கூட குடுப்பேன்னு திரும்ப திரும்ப சொல்றான்.
மகள் : அப்புறம் ஏன் போன் சுவிட்ச் ஆஃப் ? ஏன் சொல்லாம கொள்ளாம நேத்திக்கு ஓடினாரு ?
இன்ஸ் : வைஃப்க்கு ஒரு ஆக்சிடண்டாம்.. அதான் சீக்கிரம் கிளம்பினான் போல, விசாரிச்சேன்.. அது உண்மை தான். போன் சார்ஜ் இல்லாம ஆஃப் ஆயிடுச்சு, ஆஸ்பிடல் அலஞ்சதுல சார்ஜ் போட முடியலை சொன்னான்
மகள் : இதெல்லாம் நல்லா பிளான் பண்ணுவாங்க…
இன்ஸ் : யா..யா. நான் விசாரிக்கிறேன்.. கொஞ்சம் கழிச்சு கூப்பிடறேன்..
மகள் : ஓக்கே.. ஷுயர்…
( ராஜ் வருகிறார் )
ராஜ் : மே ஐ கம் இன்…
மகள் வாங்க.. ராஜ்.
ராஜ் : மேம்.. பணத்தை பற்றி விசாரிச்சீங்க.. என்னாச்சு மேம்.
மகள் : பணம் மிஸ்ஸிங்… சோ, டிரைவர் எடுத்திருப்பாரோன்னு ஒரு டவுட்… ஹி ஈஸ் இன் கஸ்டடி..
ராஜ் : வாட்.. மிஸ்ஸிங்கா… அது எப்படி மேம்.. எத்தனை வருஷமா உங்க கூட இருக்கான்
மகள் : யா.. யா… நீங்க பேக்ல வெச்ச பணம் பின்ன எங்க போகும் ?
ராஜ் : நான் உங்க முன்னாடி தான் இந்த பேக்ல பணத்தை வெச்சேன்.. ( இன்னொரு பேகை காட்டுகிறார் ) மேம்.. பணம் பேக்லயே தானே இருக்கு
மகள் : வாட்.. இந்த பேக்லயா வெச்சீங்க
ராஜ் : எஸ் மேம்.. இதை தான் நீங்க சொல்றீங்கன்னு நினைச்சேன்.
மகள் : ஓ.. மை காட்.. நீங்க என்னோட ஹேண்ட் பேக்ல வெச்சீங்கன்னு நினைச்சேன். .திஸ் ஈஸ் மை லேப்டாப் பேக்…. ஓ.. தப்பு பண்ணிட்டேன்.
( உடனே போலீசுக்கு போன் பண்ணுகிறாள் )
மகள் : ஹேய்.. அவனை விட்டுடுப்பா… ஒரு சின்ன மிஸ்டேக் நடந்துச்சு. பணம் கிடைச்சுச்சு..
மகள் : சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்.. பிரீயா இருக்கும்போ வீட்டுக்கு வா.. ஃபேமிலியோட…
காட்சி 11
( வீட்டில் டிரைவரிடம் )
மகள் : ஐம் வெரி சாரி… மாரியப்பன்… பணம் காணோம்ன்னதும் உன்னை சந்தேகப்பட்டுட்டேன்..
டிரைவர் : பரவாயில்லம்மா… யாருன்னாலும் சந்தேகம் வரத் தான் செய்யும்.
மகள் : இல்லப்பா…. எளிய மனிதர்கள், ஏழைகள் ந்னா திருடுவாங்கங்கற ஒரு தப்பான அபிப்பிராயம் பலருக்கும் உண்டு. அது எனக்கும் வந்துச்சேன்னு நினைக்கும்போ கஷ்டமா இருக்கு
டிரைவர் : சூழ்நிலை அப்படிம்மா.. ஆனா நான் என்னிக்கு உங்க வீட்ல வேலைக்கு வந்தேனோ, அன்னிக்கே உங்க குடும்பம் என் குடும்பம் ஆயிடுச்சும்மா.. உங்க குடும்பத்துக்கு எதிரா என் சுண்டு விரலைக் கூட நீட்ட மாட்டேன்.
மகள் : யா… நான் அதை புரிஞ்சுக்காம போயிட்டேன்.
டிரைவர்.: பரவாயில்லம்மா.. நீங்க தான் எனக்கு நிறைய விஷயங்கள் கத்துக்குடுத்திருக்கீங்க. எஜமான விசுவாசம் பற்றி பைபிள் சொல்றதெல்லாம் எனக்கு மனப்பாடமே ஆயிடுச்சு. அதை நான் மறப்பேனா.
மகள் : பைபிளை உன்னை விட பல வருஷம் முன்னாடியே நான் படிக்கிறேன். பட்.. ( தலையை குலுக்குகிறாள் )
டிரைவர் : ஃபீல் பண்ணாதீங்கம்மா.. நான் அதை அப்பவே மறந்துட்டேன்… இதெல்லாம் ஒரு சின்ன விஷயம். சாவியை குடுங்க காரை தொடச்சு வெக்கிறேன்.
மகள் : நீ.. மறுபடியும் வேலைக்கு வரமாட்டியோன்னு நினைச்சேன்.
டிரைவர் : என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க… நீங்க ரூத் கதையை சொன்னீங்களேம்மா… அதுமாதிரி தான் நானும். உங்க குடும்பம் என் குடும்பம். உங்க ஆண்டவர் என் ஆண்டவர். நான் அதை மீறி போகவே மாட்டேன். கடவுள் தண்டிச்சாலும் நான் அவரை தான் சுத்தி வருவேன். நீங்க தண்டிச்சாலும் நான் உங்களை விட்டு விலக மாட்டேன்.
மகள் : ரொம்ப நன்றிப்பா…. ( பணத்தை கட்டாக அவர் கையில் கொடுக்கிறாள் )
டிரைவர் : இது.. இது .. இது என்னம்மா
மகள் : மூணு இலட்சம் இருக்குப்பா.. பொண்ணு கல்யாணத்தை நல்லா நடத்து. இது வரை என் குடும்பம் உன் குடும்பமா இருந்துச்சு, இன்னில இருந்து உன் குடும்பம் என் குடும்பம்மா..
டிரைவர் : ரொம்ப நன்றிம்மா.. இதை சீக்கிரமே நான் திருப்பி குடுத்துடறேன்ம்மா
மகள் : இல்ல.. இல்ல.. அதெல்லாம் வேண்டாம்… இது என்னோட அன்பளிப்பா இருக்கட்டும்.
பின் குரல்
விசுவாசம் என்பது பிரதிபலன் எதிர்பார்த்து தொடர்வதல்ல. சுயநல சிந்தனைகளோடு நடப்பதல்ல. வாழ்விலும், தாழ்விலும் இணைந்து பயணிப்பது. மகிழ்வின் காலத்திலும், துயரத்தின் காலத்திலும் தொடர்ந்தே நடப்பது. ரூத் தனது மாமியார் நகோமியோடு இணைந்து பயணித்தார். தனது உறவுகளை, நாட்டை, கடவுளை விட்டு விட்டு நகோமியோடு வாழ்ந்தார். இஸ்ரயேயில் கடவுளை தன் கடவுளாய்ப் பற்றிக் கொண்டார். அவரது இதயத்தின் தூய்மையும், அன்பும், கரிசனையும் இறைவனை பிரியப்படுத்தியது. நமது வாழ்க்கையும் இறைவனுக்குப் பிரியமானதாய் மாற வேண்டும். அதற்கான அர்ப்பணிப்பையும் விசுவாசத்தையும் நாம் கொண்டிருக்க வேண்டும்.
மகள் : சார்… வெயிட்டிங் லிஸ்ட்ல இருந்து ஆர்.ஏசி வந்திருக்கு. எப்படியும் கன்ஃபர்ம் ஆயிடும்ன்னு நினைச்சேன்.. பட்.. ஆகல.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க.
டிடி : இந்த சீசன் ரொம்ப பிஸிம்மா.. எல்லாருக்கும் லீவ்… சோ ஊர்களுக்கு போவாங்க. அதுவும் சவுத் சைட் போற டிரெயினெல்லாம் மூணு மாசம் முன்னாடியே புல்லாயிடுச்சு.. உங்களுக்கு ஆர்.ஏசிகிடைச்சதே பாக்கியம்.. சார்ட் எல்லாம் ஒட்டியாச்சு, இனிமே ஒண்ணும் பண்ண முடியாது.
மகள் : சாதாரண டைம்னா பரவாயில்லை, அம்மாக்கு உடம்பு முடியல… அதனால வைத்தியசாலைக்கு கூட்டிட்டு போறேன். அவங்களால ரொம்ப நேரம்… உக்கார முடியாது.
டி.டி : ஆமா… உங்களுக்கு எங்கே சீட் ?
மகள் : எனக்கு ஆர்.ஏ.சியும் கிடைக்கல, அதனால அன் ரிசர்வ்ட் ல டிக்கெட் எடுத்திருக்கேன். அதுல தான் வர முடியும்.
டி.டி : ம்ம்.. ஒண்ணும் பண்ண முடியாதும்மா… இது ஏசி கம்பார்ட்மெண்ட் வேற… எல்லாரும் கம்ஃபர்டபிளா டிராவல் பண்றவங்க… ஆர்.ஏ.சி – தான் பாசிபிள். இல்லேன்னா, நீங்க இன்னொரு நாள் தான் டிராவல் பண்ணணும்
மகள் : இல்ல சார்… அம்மாக்கு ரொம்ப முடியல. டிரீட்மெண்ட் டேஸ் மிஸ் பண்ண கூடாது. வைத்தியர் கிட்டே சொல்லிட்டோம்.
டிடி : ஓக்கே.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..
காட்சி 2
மகள் : அம்மா… என்னம்மா பண்ண
அம்மா : பரவாயில்ல, சமாளிச்சுக்கறேன்.. இடம் கிடச்சா, தரையில கூட படுத்துக்கலாம்..
மகள் : அதுக்கெல்லாம் அலோ பண்ண மாட்டாங்கம்மா… ஏசி கோச் இல்லையா… ம்ம்ம்
அம்மா : பரவாயில்ல.. ஏதாச்சும் பண்ணிக்கலாம். நீ அன்ரிசர்வ்ட் க்கு போ, அங்கே நிக்க கூட இடம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.
மகள் : நான் பாத்துக்கறேம்மா.. என்னைப் பற்றி கவலைப்படாதீங்க
அம்மா : சரி.. வா உள்ளே போவோம்
காட்சி 3
( அம்மா டிரைனில் சிலரிடம் கேட்கிறார் )
அம்மா : ஐயா.. ஒரு சீட் கிடைக்குமா… ஆர்.ஏசி இருக்கு.. கொஞ்சம் உடம்பு முடியல…
நபர் 1 : மேல பர்த்தை எடுத்துட்டு, கீழ் சீட் குடுக்கிறீங்களான்னு கேட்டாலே குடுக்க மாட்டாங்க .. நீங்க வேற…. எனக்கு கேரளா வரை போணும்ம்மா.. காலைல வேலை வேற இருக்கு…
அம்மா : பரவாயில்லைய்யா
( இன்னொரு நபர் )
நபர் 2 : ஆர்.ஏ.சி ந்னா கேன்சல் பன்ணியிருக்கலாமே.. பிளைட்ஸ் கூட இப்போ கொஞ்சம் சீப் தான்… அவசரம்ன்னா அப்படி பண்ணியிருக்கலாம்.
அம்மா : இல்ல… எப்படியாவது கன்ஃபர்ம் ஆகும்ன்னு நினைச்சேன். பிளைட்ல போற அளவுக்கு வசதி இல்லை
நபர் 2 : ஆர்.ஏசி வசதியா தான் இருக்கும்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க
( இன்னொரு நபர் )
நபர் 3 : கல்லு குடுத்து நெல்லு வாங்க முடியுமா. ஆர் ஏ சி குடுத்து சீட் வாங்கறது அப்படி தான்… நீங்க கேக்கறதே வேஸ்ட் தான்..
( டி.டி.ஆர் )
டிடிஆர் : அம்மா.. ஏற்கனவே சொல்லிட்டேன்…. சும்மா சும்மா பேசஞ்சர்சை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. அப்புறம் இறக்கி விட்டுடுவேன்..
அம்மா : இல்லை … ஆயுர்வேதிக் டிரீட்மெண்ட்க்காக கேரளா போறேன்.. சீட் கிடைக்கல.. ஆர்.ஏசி தான் கிடைச்சுது. எனக்கு ஹில் ல பிராப்ளம்.. ரொம்ப நேரம் உக்கார முடியாது.
ஒருவர் : ஓ… டி.டி.ஆர் என்ன சொல்றாரு ?
அம்மா : சீசன் டைம், இடம் இல்லேன்னு சொன்னாரு. சிலர் கிட்டே கேட்டேன்… பட்.. அவங்களுக்கும் டிராவல் பண்ணணும் இல்லையா. எல்லாரும் ஏற்கனவே புக் பண்ணியிருப்பாங்க….
ஒருவர் : ம்ம்.. ஒண்ணு பண்ணுங்க, நீங்க என் சீட்டை எடுத்துக்கோங்க. நான் உங்க சீட்டை எடுத்துக்கறேன்
அம்மா : ஐயா.. நிஜமாவா.. எனக்கு .. ஆர்.ஏ.சி தான்… அதுல.. நீங்க உக்காந்துட்டு தான் வரணும்…
ஒருவர் : பரவாயில்லம்மா.. எவ்ளோ நாள் படுத்துட்டே போயாச்சு, ஒரு நாள் உக்காந்துட்டே போலாம். நோ பிராப்ளம்.
அம்மா: ஐயா.. ரொம்ப நன்றிய்யா.. ரொம்ப நன்றி…
ஒருவர் : சாப்பிட்டீங்களா ?
அம்மா : சாப்டேன்.. பொண்ணு வாங்கி குடுத்தாங்க…
ஒருவர் : மகளா ? அவங்க எங்கே ?
அம்மா : அவங்களுக்கு ஆர். ஏ.சியும் கிடைக்கல…. அதனால அன் ரிசர்வ்ட்ல வந்திட்டிருக்காங்க.
ஒருவர் : ஓ.. ஓக்கே ஓக்கே.. வாங்கம்மா நான் உங்களை என் சீட்டுக்கு கூட்டிட்டு போறேன். என்னை உங்க பையன் மாதிரி நினைச்சுக்கோங்க வாங்க.
காட்சி 5
( அந்த நபர், இரவு முழுவதும் பாடலும், செய்தியும் கேட்டுக்கொண்டிருக்கிறார் )
டி.டி.ஆர் : என்ன சார் இங்க வந்து உக்காந்திருக்கீங்க
ஒருவர் : என் சீட்டை ஒரு அம்மாக்கு குடுத்தேன். அந்த அம்மா சீட்ல உக்காந்திருந்தேன். அதுல இன்னொரு வயசானவரு கஷ்டப்பட்டு உக்காந்திருந்தாரு, சோ அவர் கிட்டே படுக்க சொல்லிட்டு இங்கே உக்காந்திருக்கேன்.
( காலையில் டீ வாங்கி கொண்டு அந்த அம்மாவுக்குக் கொடுக்கிறார் )
அம்மா : ரொம்ப நன்றி தம்பி.. உங்களுக்கு ஏன் சிரமம்.
ஒருவர் : பரவாயில்லம்மா.. சாப்பிடுங்க. தூங்கினீங்களா ? வலி எப்படி இருக்கு ?
அம்மா : நல்லா தூங்கினேன்பா… உன் பேரு என்னப்பா
ஒருவர் : என் பேரு ஸ்டீபன்ம்மா….
அம்மா : எங்கே இறங்கணும்..
ஒருவர் : நான் நாகர்கோவில்ல இறங்குவேன்…. நீங்க என் சீட்லயே படுத்துக்கோங்க….
அம்மா : ரொம்ப நன்றி தம்பி.. எப்படி போவீங்க வீட்டுக்கு ?
ஒருவர் : டிரைவர் வருவாரும்மா.. கார் எடுத்துட்டு. அதுல போயிடுவேன்.
அம்மா : ஓ.. கார்லயா ? காரெல்லாம் வெச்சிருக்கீங்களா ? எங்கே வேலை பாக்கறீங்க தம்பி
ஒருவர் : … ஆரூஸ் இண்டர்நேஷனல்ன்னு. ஒரு கம்பெனி. இதாம்ம்மா என் கார்ட்.. உங்களுக்கு ஏதாச்சும் தேவைன்னா எனக்கு கால் பண்ணுங்க.
அம்மா : ரொம்ப நன்றி தம்பி.. பெரிய பெரிய வேலைல எல்லாம் இருக்கீங்க.. எனக்காக சீட்டை விட்டுக்கொடுத்துட்டு நைட் புல்லா கஷ்டப்பட்டிருக்கீங்க. உங்க ஆர்.ஏ.சி சீட்ல கூட ஒருத்தர் படுத்திருக்கிறதை பாத்தேன். அப்போ நீங்க தரையிலயா உக்காந்திருந்தீங்க…
ஒருவர் : தட்ஸ் ஓக்கேம்மா.. நான் படி பக்கத்துல நல்ல காற்றோட்டமா உக்காந்திருந்தேன்…
அம்மா : இருந்தாலும்.. எவ்ளோ பெரிய ஆள்.. இப்படி யாரும் பண்ண மாட்டாங்க..
ஒருவர் : இயேசு என்னைக்குமே ஏழை பணக்காரர் பாகுபாடு காட்டி அன்பு செய்ததில்லை. தேவையில இருக்கிற ஒருத்தருக்கு உதவி செய்றது தான் உண்மையான அன்புன்னு சொல்லியிருக்காரு. யார் அயலான் -ந்னு ஒரு கதை இருக்கு. அதுல ஆலயம் போறதை விட முக்கியமான விஷயம் தேவையில் இருப்பவருக்கு உதவுவது தான்னு சொல்றாரு. அதை தான் நான் கொஞ்சம் பண்ணினேன். இட்ஸ் எ ஸ்மால் ஹெல்ப்.
அம்மா : ரொம்ப நன்றி தம்பி. நீங்க.. இன்னும் பெரிய பெரிய உயரங்களை அடையணும். உங்க அன்பும், பணிவும் உங்களை இன்னும் பெரிய ஆளா மாற்றும். உங்க செயல்லயும் பேச்சிலயும் இன்னிக்கு நான் இயேசுவை பாத்தேன்.
ஒருவர் : ரொம்ப நன்றிம்மா… நான் வரேன்
காட்சி 7
( மகள் & அம்மா )
மகள் : அம்மா.. எப்படிம்மா இருக்கீங்க..சமாளிச்சீங்களா ? நாகர்கோயில் ல தான் வண்டி கொஞ்ச நேரம் நிக்கும் அதனால தான் இப்போ இறங்கி வந்தேன்.
அம்மா : ஒரு சீட் கிடைச்சுதும்மா.. அதுல படுத்துட்டு வந்துட்டேன். ஒரு பிரச்சினையும் இல்லை