இயேசப்பா உங்க அன்பு ரொம்ப பெருசு
அது
ஆழ்கடலை விட ரொம்ப ஆழமானது
இயேசப்பா உங்க அன்பு ரொம்ப பெருசு
அது
வான் வெளிய விட ரொம்ப நீளமானது.
இயேசப்பா…
இயேசப்பா…
(இயேசப்பா.. )
*
பசி தாகத்தால நான் பதறுகையிலே
மேய்ச்சலுக்கு புல்வெளிக்கு கூட்டிப் போனீக
காடு மேடு தெரியாம தொலஞ்சு போனப்போ
தோள்மேல நீங்க என்னை தூக்கி கிட்டீக
ஐயோ பசிக்குதுன்னு
கலங்கி நின்னப்போ
மண் மேலே
மன்னாவைப் பொழியச் செஞ்சீங்க
மண் மேலே
மன்னாவைப் பொழியச் செஞ்சீங்க
( இயேசப்பா )
புயலடிச்ச படகைப் போல வாழ்க்கை ஆனப்போ
பயத்தைப் போக்க காத்தைக் கூட அடக்கி வெச்சீங்க
செங்கடலும் மல்லுக்கட்டி முன்னால் நின்னப்போ
கடலுக்கு நடுவால பாத போட்டீக
ஐயோ மாட்டேனுன்னு
கதவடைச்சாலும்
கதவோடு கதவாகக் காத்திருப்பீக
(இயேசப்பா )